Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி - புகைப்படங்கள்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும், தமிழ் உரிமைகூட்டமைப்பு சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு 25-01-2012 சென்னையில் முன்னெடுக்கப்பட்ட வீரவணக்க நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், பேராசிரியர் தீரன், மற்றும் ஓவியர் வீரசந்தானம்  கலந்துகொண்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.














Read more...

தர்மபுரியில் ஜனவரி 29ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புதன், 25 ஜனவரி, 2012

கடலூர் : 
 
          மத்திய அரசு, கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து பேரிடர் மையம் துவங்கவும். விவசாய கடனை ரத்து செய்யவும்  வலியுறுத்தி விரைவில் தமிழக  வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும். கட்சி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து வரும் 29ம் தேதி தர்மபுரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் வேல்முருகன் கூறினார்.
    
கடலூரில்
மிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியது :


         தானே' புயலுக்காக மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை மட்டும் வழங்கியுள்ளது. மின்வாரிய சீரமைப்பு பணிக்கே 2,000 கோடி ரூபாய் ஆகும். அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்டு கள ஆய்வு செய்து ஒட்டு மொத்த சேதத்தை கணக்கிட வேண்டும். ஆளும் கட்சியினர் சாலையோரங்களில் விழுந்த மரங்களை வெட்டுவது, புயலில் சேதமடைந்த அரசு கட்டடங்களை இடித்து அகற்றும் டெண்டர் எடுப்பதிலுமே குறியாக உள்ளனர்.

        மத்திய அரசு, கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து பேரிடர் மையம் துவங்க வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும். கட்சி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து வரும் 29ம் தேதி தர்மபுரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடலூரை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மறியல் போராட்டம்

கடலூர் : 

        "தானே புயலால் பதிக்கப்பட்ட கடலூரை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக  வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என தமிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
    
கடலூரில்
மிழக  வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி. வேல்முருகன் கூறியது :

         தானே' புயலுக்காக மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக 500 கோடி ரூபாயை மட்டும் வழங்கியுள்ளது. மின்வாரிய சீரமைப்பு பணிக்கே 2,000 கோடி ரூபாய் ஆகும். அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்டு கள ஆய்வு செய்து ஒட்டு மொத்த சேதத்தை கணக்கிட வேண்டும். ஆளும் கட்சியினர் சாலையோரங்களில் விழுந்த மரங்களை வெட்டுவது, புயலில் சேதமடைந்த அரசு கட்டடங்களை இடித்து அகற்றும் டெண்டர் எடுப்பதிலுமே குறியாக உள்ளனர்.

        மத்திய அரசு, கடலூர் மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவித்து பேரிடர் மையம் துவங்க வேண்டும். விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும். கட்சி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து வரும் 29ம் தேதி தர்மபுரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தானே புயல் நிவாரணம் 10 ஆயிரம் கோடி வழங்கக்கோரி போராட்டம்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி  சார்பில் தானே புயல் நிவாரணம் 10 ஆயிரம் கோடி வழங்கக்கோரி போராட்டம்

தினத்தந்தி


தி ஹிண்டு 


தினமணி 


இந்தியன் எக்ஸ்பிரஸ்



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் கொடியேற்று விழா

கடலூர்:

         முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் புதிதாகத் தொடங்கி இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்  முதல் கொடியேற்று விழா, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

         முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி தி.வேல்முருகன் பொங்கல் பண்டிகை தை முதல் நாள் (15-01-2012) அன்று, "தமிழக வாழ்வுரிமைக் கட்சி' என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் கொடியேற்று விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

         செம்மண்டலம், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், சூரப்பநாயக்கன்சாவடி உள்ளிட்ட 13 இடங்களில் கொடியேற்று விழா நடந்தது. விழாக்களுக்கு, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். நகரச் செயலர் த.ஆனந்த் கொடி ஏற்றினார். மாவட்ட நிர்வாகிகள் கமலநாதன், ராதாகிருஷ்ணன், பொறியாளர் கண்ணன், பாலு, அருள்பாபு, நகராட்சி உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் விபரம்

திங்கள், 23 ஜனவரி, 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் விபரம்:


தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர்


பண்ருட்டி தி.வேல்முருகன்,  முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் 


கட்சித் தலைவர் 


பேராசியர் தீரன்


பொதுச் செயலாளர் 


திரு. காவேரி, முன்னாள் இடப்பாடி சட்டமன்ற உறுப்பினர்



இணைப் பொதுச் செயலாளர் 


திரு. எம்.எஸ்.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
 
அமைப்புச் செயலாளர்



 திரு. மே.ப. காமராஜ், முன்னாள் தாரமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் 


தலைமை நிலைய செயலாளர்  


திரு. சண்முகசுந்தரம், 


மாநில மகளிரணி பாசறை செயலாளர் 


விஜயலட்சுமி 


Read more...

சாதி, மத பேதமின்றி தமிழர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் : தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வை. காவேரி

வெள்ளி, 20 ஜனவரி, 2012

தருமபுரி:

       சாதி, மத பேதமின்றி தமிழர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலப் பொதுச்   செயலாளர் வை.காவேரி தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் மாநிலப் பொதுச்செயலரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை. காவேரி அளித்த பேட்டி

        தமிழக வாழ்வுரிமைக்  கட்சி கட்சி சாதி, மத பேதமின்றி தமிழர்களின் நலனுக்காக மட்டும் பாடுபடும். முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி உள்ளிட்ட தமிழர்களின் வாழ்வுரிமைப் பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராடுவோம். ஜனவரி 29-ம் தேதி தருமபுரியில் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கலந்துகொள்கிறார். பேட்டியின்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் காமராஜ், தவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி துவக்கம்

திங்கள், 16 ஜனவரி, 2012

     


         முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், இளம்புயல் பாசறை நிறுவனருமான பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று, தை முதல் நாள் 15.01.2012 ( ஞாயிற்றுக்கிழமை ) சென்னை, போரூரில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய கட்சியை துவங்கினார்.
 
          தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பெயர் சூட்டி, கட்சி கொடியினை அறிமுகப்படுத்தினார். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. யாருடனும் கூட்டணி வைப்போம். காலத்திற்கேற்ப இந்திய அரசியல் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கூறினார்.
 
 
 

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP