Blogger இயக்குவது.

சீர்காழி அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பம் சேதம்: புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு

திங்கள், 30 ஜூலை, 2012




சீர்காழி:

      தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன் சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் செய்தார். அவரது சுற்றுப் பயணத்திற்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க. மாநில துணை பொது செயலாளர் அகோரம் தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர். சுமார் 30 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

          சீர்காழி தாண்டவன் குளம் அருகே உள்ள டெலிபோன் செட் தெருகொடி கம்பத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் தீரன் சுற்றுப் பயணத்தின் போது கொடி ஏற்றி சென்றார். இந்த கொடி கம்பத்தை மர்ம ஆசாமிகள் வெட்டி சாய்த்து விட்டனர். இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாயண சுந்தரம் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்த சீர்காழி, கொள்ளிடம், புத்தூர் பகுதிகளில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




Read more...

ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்க தடை விதிக்க வேண்டும்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

சனி, 28 ஜூலை, 2012

ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் கொலைவெறி சிங்களவர்களின் இலங்கை அணி பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று லண்டன் மாநகரத்தில் தமிழீழத் தமிழ் உறவுகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.இதேபோல் "ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்க தடை விதி"க்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்களிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறது.

       இலங்கைத் தீவின் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த கொலைவெறியன் இலங்கை அதிபராக இருக்கும் மகிந்த ராஜபக்ச. முள்ளிவாய்க்கால் போர்க் களத்தில் வெள்ளைக் கொடியேந்தி தமிழர்களோடு சரணடைய வந்த தமிழீழத் தலைவர்களையும் அப்பாவி பொதுமக்களையும் அநியாயமாக சுட்டுக் கொன்ற காட்டுமிராண்டிக் கும்பல் ராஜபக்ச தலைமையிலான சிங்களக் காடையர்களைக் கொண்ட இலங்கை ராணுவம். எந்த ஒரு சர்வதேச போர் விதிகளையும் கடைபிடிக்காமல் போராளி இசைப்பிரியா உள்ளிட்ட ஏராளமான போராளிகளையும் அப்பாவித் தமிழ்ப் பெண்களையும் ஈவிரக்கமின்றி மிருகத்தனமாக சிங்களக் காடையர்கள் வேட்டையாடிய கொடூரத்தை இங்கிலாந்து நாட்டின் சேனல் 4- தொலைக்காட்சிதான் வெளியிட்டு உலகையே உறைய வைத்தது.

          போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைந்த போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி வாகனங்களில் மரக்கட்டைகளைப் போல் தூக்கிப் போடுகிற காட்சிகளைப் பார்த்து கை கொட்டி மகிழ்கிற மரத்துப் போன இதயம் கொண்டவர்கள்தான் சிங்களவர்கள். முள்ளிவாய்க்காலில் பல நூறு தமிழர்களின் பிணக்குவியலை ஆண் பெண் என இனம் பிரித்து வைத்து அதில் இருபாலரது அங்கமெல்லாம் தெரியும் வகையில் ஆடைகளந்து அதன் மீது ஆடி மகிழ்ந்த குரூர மனம் கொண்ட வெறியர்கள்தான் சிங்களவர்கள். அப்படிப்பட்ட சிங்களவர்களை உலகின் மாண்புமிக்க திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதித்திருப்பது என்பது அதிர்ச்சியளிக்கிறது. அதுவும் ஜனநாயகத்தின் தொட்டில் எனப்படும் இங்கிலாந்து நாடு இத்தகைய சிங்களக் காடையர்களை அனுமதித்திருப்பது பெரும் அவமானத்துக்குரியது.

          இலங்கையை ஆண்ட இங்கிலாந்து பேரரசு, ஆட்சிப் பொறுப்பை சிங்களவர்களிடம் ஒப்படைத்ததால் 60 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தமிழீழத் தமிழ் உறவுகள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதுடன் பல லட்சம் தமிழரையும் சிங்களம் காவு வாங்கியிருக்கிறது. இலங்கைத் தீவை அன்றே இரண்டாகப் பிரித்து தமிழர் பிரதேசங்களில் தமிழருக்கான ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் இவ்வளவு பேரவலத்தை எமது இனம் சந்தித்திருக்காது. அந்த வகையில் இங்கிலாந்து பேரரசு மீது எமக்கு அதிருப்தி இருந்தாலும் அகதிகளாக சொந்த நிலத்தை விட்டு புலம்பெயர்ந்த எமது தமிழ் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் நாடு.

           இலங்கைத் தீவில் தமிழ் உறவுகளுக்கு எதிராக சிங்களக் காடையர்கள் கட்டவிழ்த்துவிடும் அத்தனை மனித உரிமை மீறல்களையும் எப்போதும் கண்டித்தே வந்திருக்கிறது இங்கிலாந்து. கொடூரமான யுத்தம் முடிந்த பிறகும் கூட ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை இன்னமும் நசுக்கப்படுவது கண்டு தமது குமுறல்களை இங்கிலாந்து எப்போதும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துக்கு கொலைவெறியன் ராஜபக்ச வந்தபோது கடும் எதிர்ப்புப் போராட்டங்களை தமிழ் உறவுகள் முன்னெடுத்தனர். இதனால் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சிங்கள வெறியன் ராஜபக்சவை தமது பல்கலைக் கழகத்துக்குள் அனுமதிக்க மறுத்து இலங்கைக்கு திருப்பி ஓட வைத்தது.

              இலங்கைத் தீவில் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டு கொதித்தெழும் எமது உறவுகள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க எமது உரிமைக் குரல்களை கரிசனையோடு எப்போதும் அணுகுகின்ற நாடு இங்கிலாந்து பேரரசு. ஆனால் இப்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இனவெறி சிங்களவர்களை அனுமதித்திருப்பதும் அந்நாட்டு அதிபர் கொலைவெறியன் ராஜபக்சவை அழைத்திருப்பதும் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிறது. சிங்கள இனவெறியர்களை ஒலிம்பிக் போட்டிகளில் வெளியேற்றுமாறு இங்கிலாந்தின் ஒலிம்பிக் பூங்கா முன்பு எமது தமிழ் உறவுகள் நடத்தி வரும் நியாயமான போராட்டத்தை இங்கிலாந்து அரசு எலிசெபத் ராணியாரும் புரிந்து கொள்ள மறுப்பது வேதனையைத் தருகிறது.

            லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை அணியை அனுமதித்திருப்பதன் மூலம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துலக நாடுகள் காட்டிய கரிசனை அவ்வளவுதானா? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஈழத் தமிழருக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற சர்வதேசத்தின் அழுத்தம் காற்றோடு கலந்துவிட்டதா என்ற கேள்வியை முன் வைக்கிறது? ஜனநாயகம், மனிதாபிமானம் பேசும் இங்கிலாந்து நாடு தமிழர்களின் உள்ளக் குமுறலை ஏற்று லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

         ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து சிங்களக் காடையர்களின் இலங்கை அணியை வெளியேற்றும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தமிழ்நாட்டில் உள்ள தோழமைக் கட்சிகளையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.


 தி.வேல்முருகன்

நிறுவனர்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா முதன்மை பங்கு - சிங்கள அமைச்சர் கேகலிய ரம்புக்வெல பேச்சிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

வெள்ளி, 20 ஜூலை, 2012


இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா முதன்மை பங்கு - சிங்கள அமைச்சர் கேகலிய ரம்புக்வெல பேச்சிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை


இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் உறவுகளை படுகொலை செய்த சிங்களக் காடையர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் தற்போதும் இந்தியாதான் முதன்மைப் பங்கு வகிப்பதாக சிங்கள அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கொழும்பில் வியாழக்கிழமையன்று (19.7.2012) செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் ஒரு சிறு குழுதான் சிங்கள படைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆனால் இந்திய அரசு ...அதை கண்டுகொள்ளாமல் தங்களுக்கு ஆதரவாகவே இருப்பதாகவும் அந்த அமைச்சர் திமிராகக் கூறியிருக்கிறார்.சர்வதேச சமூகத்தின் முன்பு போர்க்குற்றவாளிகளாக நிற்கும் சிங்களவன் இத்தனை திமிராகப் பேச இடம்கொடுத்திருப்பது இந்தியாதான்.


இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சிங்கள படைக்கு பயிற்சி அளிப்பதை ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்துக் கண்டித்து வருகிறது. ஆனால் இந்தியப் பேரரசோ இந்திய மண்ணில் தொடர்ந்தும் சிங்கள காடையர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதைக் கூட கண்டுகொள்ளாமல் தொடர்ந்தும் இலங்கை படைகளுக்கு இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பயிற்சி அளித்து வருகிறது இந்திய அரசு.


தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தவுடன் இந்தியாவின் வேறு மாநிலத்தில் பயிற்சி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது மத்திய அரசு. தமிழ்நாட்டின் உணர்வுகளை மதிக்காமல் இந்திய அரசு நடந்து கொள்வதால்தான் சிங்களவர்கள் ஏகடியம் பேசுகின்றனர். இந்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கு மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


இலங்கைப் படைகளுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கக் கூடாது என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடு. இதனை உணர்ந்து கொண்டு இலங்கை படைகளுக்கு பயிற்சி தரக் கூடிய அனைத்து ஒப்பந்தங்களையும் இந்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. சிங்கள இனவாதத் திமிருடன் பேசியிருக்கும் இலங்கை அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் பேச்சை சுட்டிக்காட்டி மத்திய அரசை தமிழக முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.


Read more...

"பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" நூல் அறிமுக உரை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்

செவ்வாய், 10 ஜூலை, 2012

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் அறிமுக உரை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்






Read more...

செங்கல்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் முற்றுகை போராட்டம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன் பங்கேற்பு

சனி, 7 ஜூலை, 2012

          செங்கல்பட்டு - பூந்தமல்லி பகுதிகளில் ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட தமிழீழத் தமிழர்களை சிறைபடுத்தி வைத்திருக்கிறது தமிழக அரசு, இதனைக் கண்டித்து அவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியப் பிறகு அவர்களை விடுதலை செய்வதாக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தமிழக அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி 30.06.2012 அன்று காலை பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட செங்கல்பட்டு ‘சிறப்பு முகாம்’ முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திரண்ட தோழர்கள் சிறப்பு முகாமை நோக்கி முழக்கங்களுடன் சென்றனர். தோழர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

          முற்றுகைப் போராட்டத்தை இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஒருங்கிணைத்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், பெரியார் தி.க. காஞ்சி மாவட்ட செயலாளர் டேவிட்பெரியார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சிங்கவராயன், தமிழக பெண்கள் செயற்களம் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, தோழர் தியாகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர் களும், உணர்வாளர்களும் இதில் திரளாகப் பங் கேற்றனர்.

          தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருண பாரதி, தாம்பரம் கிளை செயலாளர் தோழர் தமிழ்க் கனல், குன்றத்தூர் தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் சரவணன், கிளைச் செயலாளர் தோழர் சியாம், தோழர் தமிழ்ச்சமரன் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

          போராட்டம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பின் 4 பேரை தமிழக அரசு விடுவித்தது. எனினும், மற்றவர்களையும் விடுவிக்கக் கோரிப் போராட்டம் தொடர்ந்துவந்த நிலையில், 06.07.2012 அன்று கியூ பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சம்பத் நேரில் வந்து வாக்குறுதி அளித்ததன் முகாம்வாசிகள் அடிப்படையில் உண்ணாப் போராட்டத்தைக் கைவிட்டனர்.



Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP