Blogger இயக்குவது.

தமிழ்க் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆரப்பாட்டம்

சனி, 29 டிசம்பர், 2012




பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சீர் அழிக்கும் செயலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்ற உள்ளார்.



இடம்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்.



நாள்: 31/12/2012, திங்கட்கிழமை.


நேரம் : காலை 9.00 மணி

Read more...

ஜூனியர் விகடனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் அவர்களின் சிறப்பு பேட்டி

புதன், 26 டிசம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 26-12-2012 முதல் 9-1-2013 வரை பேசுகிறார்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :  044 - 66802919


Read more...

கம்மாபுரம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

திங்கள், 24 டிசம்பர், 2012

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்தில் 23/12/2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.  இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கம்மாபுரம், முதனை உள்ளிட்ட  இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியினை  ஏற்றி வைத்தார். 









Read more...

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம் அமைத்து தர வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

சேலம்:

         சேலம் மேற்கு தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம்  அமைத்து  தர வேண்டும்  உள்ளிட்ட பல தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.  







Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சனி, 22 டிசம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற உள்ளது. 


Read more...

காவிரி நதிநீர் உரிமையை பெற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற மறியல் போராட்டம்

 


            
           காவிரி நதிநீர் உரிமையை பெற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற மறியல் நேற்று 21/12/2012 நடைபெற்றது.

       தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்,

        கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்களை வலியுருத்தியும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில், நேற்று 21/12/2012 தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. அதன்படி தஞ்சை, சிதம்பரம்,  திருவாரூர், திருச்சி ஆகிய  இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுப்பட்ட  பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை

தஞ்சை மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில், காலை 10 மணியளவில், சாந்தப் பிள்ளை கேட் அருகிலுள்ள காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை 1000க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் முற்றுகையிட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் மறியலுக்குத் தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வலிவலம் மு.சேரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன்,  தமிழக மக்கள் சனநாயகம் கட்சித் தலைவர் புதுக்கோட்டை கே.என்.செரிப்,  விடுதலைத் தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், புதிய தமிழகம் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார், மனித நேய மக்கள் கட்சி எஸ்.எஸ்.நூறுதீன், பாரதிய சனதா கட்சி எஸ்.பி.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் திரளாக கலந்துக் கொண்டனர்.

Read more...

அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வெள்ளி, 21 டிசம்பர், 2012

அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய புதுவை மாநில அரசு அறிக்கை விட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் கோரிக்கை விடுத்துள்ளார்.











Read more...

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய புதிய அனல் மின் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

திங்கள், 17 டிசம்பர், 2012

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய புதிய அனல் மின் நிலையங்களை ஏற்படுத்தவேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை







Read more...

தமிழீழ விடுதலைக்காக தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன்

   


              

        இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 16/12/2012 ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.  சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன.

அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன் பேசியது

           தமிழீழ விடுதலையின் அவசியம் குறித்தும், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம் என்றும், இந்தியா முழுதும் உள்ள தலைவர்களுக்கு ஈழத்தை பற்றிய செய்திகளை கொண்டு சேர்ப்பதும் முக்கியம் என்றும் கூறினார். ஐ.நா சபைக்கு சென்று திமுக மனு கொடுத்தது ஏமாற்று வேலை என்றும் கூறினார்.

     இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், அனைத்து தமிழ் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு ஐ.நா அதிகாரிகளை விசாரிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இலங்கை இனப்படுகொலை பற்றிய புகைப்பட கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

Read more...

புதுவையில் போக்குவரத்து சிக்னலில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வியாழன், 13 டிசம்பர், 2012

புதுவையில் போக்குவரத்து சிக்னலில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுவை மாநில அமைப்பாளர்  புதுவை ஸ்ரீதர் கோரிக்கை விடுத்துள்ளார். 



Read more...

இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்வ ரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

திங்கள், 10 டிசம்பர், 2012





இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த வேண்டும் - தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

யாழில் தொடரும் அடக்குமுறை! ஐ.நா. படையை நிறுத்துக!

          இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதல்களும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளும் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாளை கடைபிடித்தார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டுக்காக மாணவர்களை வேட்டையாடி வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. வவுனியாவில் நேற்று கூட 2 மாணவர்களை நள்ளிரவில் கைது செய்து இருக்கிறது இதுவரை மொத்தம் 10 மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. மாணவர்களை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் 17 அப்பாவித் தமிழர்களை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்திருக்கிறது சிங்களப் பேரினவாத அரசு.

              கைது செய்யப்படுகிறவர்களின் கதி என்ன? அவர்கள் எந்த நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தபப்ட்டனர்? எந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விவரத்த்தைக் கூட இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருகிறது. தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொடுமையை கேட்டறிய வந்த ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரிடம் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை தமிழர் பிரதேசத்தில் ஐ.நா. படையை நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரோ இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்து வருகிறார்.

          இலங்கையில் மாணவர்கள் மீதும் அப்பாவித் தமிழர்கள் மீதும் சிங்களத்தின் தொடரும் கோரக்கொடுமையை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்! ஈழத் தமிழர்கள் கோருவது போல் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் சக்திகள் ஓரணியில் ஒன்று திரளவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உரிமையோடு அழைக்கிறது!

Read more...

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொள்ளிடத்தில் சாலை மறியல் போராட்டம்





கொள்ளிடம்: 
 
      நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடத்தில் உள்ள சீர்காழி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 09/12/2012 (ஞாயிற்றுக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

      போராட்டத்திற்கு கட்சியின் மாநில துணைச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் சிவா, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆறு எழிலரசன், ஒன்றிய தலைவர் கலையரசன், சீர்காழி நகரத் தலைவர் ரமேஷ், வைத்தீஸ்வரன்கோவில் நகர அமைப்பாளர் செந்தில், ராமலிங்கம், ராஜதுரை, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரணவன், மாவட்ட துணை தலைவர் சத்யா, அமுதா,கண்மணி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர்.

             போராட்டத்தின்போது, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு கர்நாடக அரசு 30 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி உரிய நீரை காவிரியில் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், குருவை, சம்பா சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

     அப்போது கர்நடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டரின் உருவ பொம்மையை கொள்ளிடம் கடைவீதியில் தீ வைத்து எரிக்கபட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70 பெண்கள் உள்பட 250 பேரை செம்பனார்கோவில் காவல் துறை ஆய்வாளர் மூர்த்தி கைது செய்தனர். இந்த   சாலை மறியில் போராட்டத்தின் காரணமாக சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP