Blogger இயக்குவது.

தமிழ்க் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் பெண்களை கேவலமாக சித்தரிக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆரப்பாட்டம்

சனி, 29 டிசம்பர், 2012




பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளைத் தூண்டி அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சீர் அழிக்கும் செயலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்ற உள்ளார்.



இடம்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்.



நாள்: 31/12/2012, திங்கட்கிழமை.


நேரம் : காலை 9.00 மணி

Read more...

ஜூனியர் விகடனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் அவர்களின் சிறப்பு பேட்டி

புதன், 26 டிசம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 26-12-2012 முதல் 9-1-2013 வரை பேசுகிறார்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :  044 - 66802919


Read more...

கம்மாபுரம் ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

திங்கள், 24 டிசம்பர், 2012

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியத்தில் 23/12/2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.  இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கம்மாபுரம், முதனை உள்ளிட்ட  இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியினை  ஏற்றி வைத்தார். 









Read more...

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம் அமைத்து தர வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

சேலம்:

         சேலம் மேற்கு தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தி மின் உற்பத்தி உபகரணம்  அமைத்து  தர வேண்டும்  உள்ளிட்ட பல தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.  







Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சனி, 22 டிசம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மேற்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 23/12/2012 அன்று நடைபெற உள்ளது. 


Read more...

காவிரி நதிநீர் உரிமையை பெற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற மறியல் போராட்டம்

 


            
           காவிரி நதிநீர் உரிமையை பெற தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற மறியல் நேற்று 21/12/2012 நடைபெற்றது.

       தமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்,

        கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்களை வலியுருத்தியும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில், நேற்று 21/12/2012 தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. அதன்படி தஞ்சை, சிதம்பரம்,  திருவாரூர், திருச்சி ஆகிய  இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுப்பட்ட  பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை

தஞ்சை மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில், காலை 10 மணியளவில், சாந்தப் பிள்ளை கேட் அருகிலுள்ள காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை 1000க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் முற்றுகையிட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் மறியலுக்குத் தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் வலிவலம் மு.சேரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன்,  தமிழக மக்கள் சனநாயகம் கட்சித் தலைவர் புதுக்கோட்டை கே.என்.செரிப்,  விடுதலைத் தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், புதிய தமிழகம் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார், மனித நேய மக்கள் கட்சி எஸ்.எஸ்.நூறுதீன், பாரதிய சனதா கட்சி எஸ்.பி.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் திரளாக கலந்துக் கொண்டனர்.

Read more...

அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வெள்ளி, 21 டிசம்பர், 2012

அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய புதுவை மாநில அரசு அறிக்கை விட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் கோரிக்கை விடுத்துள்ளார்.











Read more...

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய புதிய அனல் மின் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

திங்கள், 17 டிசம்பர், 2012

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய புதிய அனல் மின் நிலையங்களை ஏற்படுத்தவேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை







Read more...

தமிழீழ விடுதலைக்காக தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன்

   


              

        இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில் ஐ.நா அதிகாரிகளான பான் கி மூன், ஜான் ஹோம்ஸ், விஜய் நம்பியார் ஆகியோரை குற்றவாளிகளாக விசாரிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 16/12/2012 ஞாயிற்றுக்கிழமை மாலை மே17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     இக்கூட்டத்தில் தமிழினப் படுகொலையில் ஐ.நா உயர் அதிகாரிகள் இலங்கைக்கு துணை நின்றதற்கான ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.  சமீபத்தில் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட இலங்கை பற்றிய ஐ.நா உள் விவகார அறிக்கையில் மறைக்கப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டன.

அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன் பேசியது

           தமிழீழ விடுதலையின் அவசியம் குறித்தும், தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐ.நாவுக்கு எதிராக போராட வேண்டியது அவசியம் என்றும், இந்தியா முழுதும் உள்ள தலைவர்களுக்கு ஈழத்தை பற்றிய செய்திகளை கொண்டு சேர்ப்பதும் முக்கியம் என்றும் கூறினார். ஐ.நா சபைக்கு சென்று திமுக மனு கொடுத்தது ஏமாற்று வேலை என்றும் கூறினார்.

     இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்களும், அனைத்து தமிழ் இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு ஐ.நா அதிகாரிகளை விசாரிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இலங்கை இனப்படுகொலை பற்றிய புகைப்பட கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

Read more...

புதுவையில் போக்குவரத்து சிக்னலில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வியாழன், 13 டிசம்பர், 2012

புதுவையில் போக்குவரத்து சிக்னலில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுவை மாநில அமைப்பாளர்  புதுவை ஸ்ரீதர் கோரிக்கை விடுத்துள்ளார். 



Read more...

இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்வ ரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

திங்கள், 10 டிசம்பர், 2012





இலங்கையில் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்த வேண்டும் - தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

யாழில் தொடரும் அடக்குமுறை! ஐ.நா. படையை நிறுத்துக!

          இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதல்களும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளும் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாளை கடைபிடித்தார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டுக்காக மாணவர்களை வேட்டையாடி வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. வவுனியாவில் நேற்று கூட 2 மாணவர்களை நள்ளிரவில் கைது செய்து இருக்கிறது இதுவரை மொத்தம் 10 மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது. மாணவர்களை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் 17 அப்பாவித் தமிழர்களை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்திருக்கிறது சிங்களப் பேரினவாத அரசு.

              கைது செய்யப்படுகிறவர்களின் கதி என்ன? அவர்கள் எந்த நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தபப்ட்டனர்? எந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விவரத்த்தைக் கூட இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருகிறது. தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொடுமையை கேட்டறிய வந்த ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரிடம் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை தமிழர் பிரதேசத்தில் ஐ.நா. படையை நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரோ இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்து வருகிறார்.

          இலங்கையில் மாணவர்கள் மீதும் அப்பாவித் தமிழர்கள் மீதும் சிங்களத்தின் தொடரும் கோரக்கொடுமையை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்! ஈழத் தமிழர்கள் கோருவது போல் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஈழத் தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் சக்திகள் ஓரணியில் ஒன்று திரளவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உரிமையோடு அழைக்கிறது!

Read more...

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொள்ளிடத்தில் சாலை மறியல் போராட்டம்





கொள்ளிடம்: 
 
      நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடத்தில் உள்ள சீர்காழி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 09/12/2012 (ஞாயிற்றுக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

      போராட்டத்திற்கு கட்சியின் மாநில துணைச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் மணிவண்ணன், துணைத் தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் சிவா, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆறு எழிலரசன், ஒன்றிய தலைவர் கலையரசன், சீர்காழி நகரத் தலைவர் ரமேஷ், வைத்தீஸ்வரன்கோவில் நகர அமைப்பாளர் செந்தில், ராமலிங்கம், ராஜதுரை, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சரணவன், மாவட்ட துணை தலைவர் சத்யா, அமுதா,கண்மணி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர்.

             போராட்டத்தின்போது, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு கர்நாடக அரசு 30 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி உரிய நீரை காவிரியில் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், குருவை, சம்பா சாகுபடியை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

     அப்போது கர்நடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டரின் உருவ பொம்மையை கொள்ளிடம் கடைவீதியில் தீ வைத்து எரிக்கபட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 70 பெண்கள் உள்பட 250 பேரை செம்பனார்கோவில் காவல் துறை ஆய்வாளர் மூர்த்தி கைது செய்தனர். இந்த   சாலை மறியில் போராட்டத்தின் காரணமாக சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Read more...

கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல்

வெள்ளி, 30 நவம்பர், 2012

கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள பண்ருட்டி வேல்முருகன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை

         கர்நாடகம் கைவிரிக்கஉச்சநீதிமன்றமும் இழுத்தடிக்க இனியும் பொறுமை ஏன்? ஓரணியில் திரள்வோம் தமிழர்களே!

        காவிரி நதிநீர் கோரி தமிழக முதல்வர் பெங்களூர் சென்று நடத்திய பேச்சுவார்த்தையை அலட்சியம் செய்து சொட்டு நீரையும்கூட தரமறுத்திருக்கிறது கர்நாடகம். உச்சநீதிமன்றமோ இன்று கூட விசாரணையை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலோ சம்பா பயிர் கருகிப் போய் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டி வருகிறது. காவிரி நதிநீரில் தமிழகத்துக்கு உரிய நியாயமான பங்கினைப் பெற்றுத்தர மத்திய அரசு தவறிவிட்டது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட அதை செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அந்த கர்நாடக மாநில அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மறுப்பதுடன் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்துக்கு உத்தரவிடுவது எந்தவகையில்தான் நியாயமோ? இதுதான் இந்திய ஒருமைப்பாடா?

            இப்படித்தான் வழக்கு விசாரணை என்று நடந்து கொண்டிருக்க குறுவை சாகுபடி பொய்த்துப் போனது.. தற்போது சம்பா பயிரையும் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.. தமிழக விவசாயிகளோ குடும்பம் குடும்பாக தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஒரு பேரவலம் காவிரி டெல்டா பிரதேசத்தில் நடந்தேறத்தான் போகிறது. தமிழகத்துக்கு உரிமைக்காக நியாயமான வழிகளில் போராடி வரும் தமிழக அரசு, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

           இதேபோல் இனியும் கர்நாடகத்திடம் நீதி கிடைக்காது என்பதால் தமிழகத்து நெய்வேலி மின்சாரம் கர்நாடகத்துக்கு செல்வதைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே தீர்வாக அமையும்! சாதி, மத, கட்சி, எல்லைகளைக் கடந்து தமிழர்களாய் ஒன்று திரண்டு கர்நாடகத்துக்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தைத் தடுத்து நிறுத்தி தமிழர் உரிமையை வென்றெடுக்க அணி திரள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறைகூவல் விடுக்கிறது!

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் நினைவு தினம் அனுச்சரிக்கபட்டது

புதன், 28 நவம்பர், 2012

புதுவை, அரியாங்குப்பத்தில்  27/11/2012 அன்று ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறிய மாவீரர் தின நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிறுவனர் இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அதன் தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்களும் கலந்து கொண்டு ஈகச்சுடரை ஏற்றி வைத்து ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியது குறித்து விளக்கும் புகைப்படங்கள். 










Read more...

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் தினம் அனுசரிப்பு

சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 27/11/2012 அன்று மாவீரர் தினம் அனுசரிப்பு



Read more...

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பரங்கிப்பேட்டை:

    பரங்கிப்பேட்டை பகுதிகளில் மூன்று இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கொடியேற்றினார்.

        பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட புதுச்சத்திரம், பு.முட்லூர் மேட்டுத்தைக்கால், கொட்டாப் புளிச்சாவடி ஆகிய இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா அண்மையில் நடந்தது. கணேசன் தலைமை தாங்கினார். கட்சிக் கொடியை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலர் முடிவண்ணன், ஒன்றிய செயலர் கோபு, நிர்வாகிகள் ராமச்சந்திரன், கோபி, முத்து, பத்பநாபன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more...

புதுச்சேரி உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில செயல் வீரர்கள் கூட்டம்

சனி, 24 நவம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பேராசிரியர் அய்யா தீரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.காவேரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.காமராசு மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பளார் திரு. ஸ்ரீதர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில செயல் வீரர்கள் கூட்டம் புதுவையில் நடைபெற்றது. புதுச்சேரியில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்காக ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
















Read more...

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்



       வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

   திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் நேற்று (23/11/2012) மறைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    பேரறிஞர் அண்ணா காலம் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டு திமுகவின் முதன்மையான தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர் வீரபாண்டியார். பூலாவரி பஞ்சாயத்து தலைவர் முதல் மாநிலத்தின் அமைச்சராக வரை தம் வாழ்நாளின் பெரும்பகுதியை ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வுக்காகவே ஒப்படைத்துக் கொண்டவர் வீரபாண்டி ஆறுமுகம்.

           சேலத்தில் இரும்பாலை, மருத்துவக் கல்லூரி, ரயில்வே கோட்டம் போன்ற அமைக்க போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற அவர், உள்ளாட்சித் துறை அமைச்சராக, வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்த காலங்களில் தமிழக மக்களின் நலனுக்காகவும் பாடுபட்டவர். கட்சிப் பொறுப்பு, அமைச்சர் பொறுப்பு என அனைத்திலும் திறம்பட செயலாற்றிய வீரபாண்டியார் எனும் போர்ப்படை தளபதியை இழந்து தவிக்கும் திமுகவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

காட்டுமன்னார்கோவிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி

வெள்ளி, 23 நவம்பர், 2012

காட்டுமன்னார்கோவில்

       சிதம்பரம் அடுத்த மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன் மற்றும் தெம்மூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோரது வீடுகள் தீ விபத்தில் எரிந்து சேதமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமராட்சி ஒன்றிய செயலர் தமிழ்வாணன் நிதி உதவி வழங்கினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் கண்ணன் இல்லத் திருமண விழா

செவ்வாய், 20 நவம்பர், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் கண்ணன் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்.







Read more...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து உண்ணா விரத போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு

வெள்ளி, 16 நவம்பர், 2012

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களின் வாழ்வை பாதிக்கும் ஊதியம் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிடக் கோரி அனைத்து கட்சி சார்பில் சிதம்பரத்தில் நவம்பர் 15  அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

      கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக கடந்த 7ம் தேதி அதிகாரிகளுடன்துணைவேந்தர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.நிதி நிலையை சமாளிக்க ஆட் குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு போன்றவற்றை செயல்படுத்த இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து பல்கலைக் கழக ஊழியர்களிடையே போராட்டம் வெடித்தது. இதனால் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

         பல்கலைக் கழகம் கடுமையான நிதி சிக்கலில் இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர் களுக்கு வரும் மாதங்களில் சரிவர ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்து துறை புல முதல்வர்கள், தலைவர்கள், இயக்குனர், தொலை தூரக்கல்வி இயக்ககம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பதிவாளர் மீனாட்சிசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பினார்.இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே  நவம்பர் 15 ல் நடந்தது.

         மா.கம்யூ., எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்,  தி.மு.க., நகர செயலர் செந்தில்குமார், அவைத்தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், மாவட்டச் செயலர் செல்லப்பா, நகர செயலர் கோவி தில்லைநாயகம், காங்., டாக்டர் வள்ளல்பெருமான், சரவணகுமார், தே.மு.தி.க., மாவட்டச் செயலர் சபா சசிக்குமார், நகர செயலர் விஜயகுமார், பா.ம.க., மாவட்டச் செயலர் வேணு புவனேஸ்வரன், நகர செயலர் முத்துகுமார், மா.கம்யூ., நகர செயலர் ராமச்சந்திரன், இந்திய கம்யூ., மாநிலக் குழு மணிவாசகம், நகர செயலர் சேகர், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலர் செல்வராசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், துரை சரவணன்மற்றும் சங்கங்கள், வணிக அமைப்பு நிர்வாகிகள், அண்ணாமலை பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

           போராட்டத்தில் பேசிய தலைவர்கள், நிர்வாகம் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு நடவடிக்கையை கைவிடவேண்டும். பல்கலைக் கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும். அரசு இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். சிண்டிகேட் கூட்ட முடிவிற்கு பின் தொடர் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும். எந்தவித நடவடிக்கையும் இல்லையெனில் பல்கலைகழகத்தை அரசுடமையாக்க சட்டம் கொண்டு வர அனைத்து கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என வலியுறுத்தி பேசினர்.

Read more...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து நவம்பர் 15 - ல் உண்ணா விரத போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்க முடிவு

ஞாயிறு, 11 நவம்பர், 2012



சிதம்பரம்:

         அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆட்குறைப்பு, ஊதியம் குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து நவம்பர்  15ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகம் நிதி நிலைமையைச் சமாளிக்க ஆள் குறைப்பு மற்றும் ஊதிய குறைப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பல்கலை நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்துள்ளது.

             இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் சனிக்கிழமை அண்ணாமலை நகரில் நடந்தது. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பல்கலைக் கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் மதியழகன், பொதுச்செயலர் ரவிச்சந்திரன், கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயசந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரமகுரு, தி.மு.க., அவைத்தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் வெங்கடேசன், தே.மு.தி.க,., மாவட்ட செயலர் சபாசசிகுமார், நகர செயலர் சந்தானகிருஷ்ணன், பா.ம.க., திருநாவுக்கரசு, மாவட்ட கவுன்சிலர் கருணா, நகர செயலர் முத்துக்குமார், மா.கம்யூ., மாநிலக்குழு மூசா, நகர செயலர் ராமச்சந்திரன், கற்பனைச்செல்வம், இந்திய கம்யூ., செயலர் சேகர், வட்ட செயலர் பூபாலன், ம.தி.மு.க., வழக்கறிஞர் மோகனசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

      1. அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள ஆட்குறைப்பு மற்றும் ஊதியம் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடவேண்டும்.

           2. இப்பிரச்னையில் சமூக நிலை ஏற்பட தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

         3. பல்கலைக் கழக நிர்வாகத்தின் ஆள் குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள், அனைத்துக் கூட்டமைப்புகள், அனைத்து சங்கம், வணிகர்கள், பொது மக்கள் சேர்ந்து வரும் 15ம் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Read more...

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

சனி, 10 நவம்பர், 2012

 
 
 
 
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்  ரீகன் என்ற பரிதி சுட்டுக் கொலை -  பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரான்சு நாட்டு தமிழர் ஒருக்கிணைப்புக் குழுத் தலைவருமான ரீகன் என்ற பரிதியை சிங்களப் புலனாய்வுப் பிரிவினர் பாரீஸ் நகரில் சுட்டுக் கொன்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளை வெளிநாட்டில் ஏற்கெனவே சிங்களப் புலனாய்வு பிரிவினர் சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். தற்போது பரிதியையும் சிங்களப் பேரினவாதிகள் படுகொலை செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.



தன் வாழ்நாள் முழுவதும் தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியான பரிதிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது வீரவணக்கத்தை செலுத்துகிறது. தளபதி பரிதியின் குடும்பத்தினருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Read more...

காவிரி நதி நீர் பகிர்வில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடகத்திற்க்கு நெய்வேலி மின்சாரம் தர கூடாது - தமிழக வாழ்வுரிமைக் கட்சி

சனி, 3 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து இந்தியா டுடேவில் வெளியான கட்டுரை



Read more...

கொட்டும் மழையில் நடந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம்

வெள்ளி, 2 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து ஜூனியர் விகடனில் வெளியான கட்டுரை



Read more...

நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சார டவர்களை கைப்பற்றுவோம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன்

வியாழன், 1 நவம்பர், 2012

அக்டோபர் 20, 2012 அன்று நெய்வேலியில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்ற நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகைப் போராட்டம் குறித்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான கட்டுரை






 

Read more...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ற தலைமைச் செயலகத்தைப் முற்றுகையிடும் போராட்டம்

செவ்வாய், 30 அக்டோபர், 2012




சென்னை:

              கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி போராடி வரும் அணு உலை எதிர்ப்பாளர்கள் 29/10/2012 சென்னை தலைமைச் செயலகத்தைப் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது . இந்த போராட்டத்துக்கு  தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ம.தி.மு.க, பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி,,நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழர்கள் கூட்டமைப்பு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் உள்பட மீனவர்கள் சங்கங்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

            முற்றுகை போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. வெளியூர்களில் இருந்து வரும் தொண்டர்களை வழியிலேயே தடுத்து கைது செய்ய 100-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து இருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து போராட்டத்துக்கு வந்தவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டார்கள். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.


            போராட்டத்தில் கலந்து கொள்ள ஆயிரக் கணக்கானவர்கள் காலை முதலே திரண்டிருந்தனர். முற்றுகை போராட்டத்தை பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்,  விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ம.க. சார்பில் வியனரசு, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி பேராசிரியர் தீரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் ஒரே மேடையில் கண்டன உரை நிகழ்த்துகிறார்க்ள.

ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியது:-

           கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி கடந்த 450 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள். அறவழியில் போராடும் மக்களை அடக்கு முறையில் ஒடுக்க பார்க்கிறார்கள். அறவழி போராட்டத்தை யாராலும் ஒடுக்க முடியாது. அணு உலையை மூடும் வரை போராட்டம் தொடரும்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேசியது:

           கூடங்குளம் போராட்ட குழுவினரை மத்திய மாநில அரசுகள் நசுக்கி வருகிறது. பொய் வழக்கு, அடக்கு முறை போராட்டத்தை நசுக்க முடியாது என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இழுத்து மூடு இழுத்து மூடு அணுமின் நிலையத்தை இழுத்து மூடு 144 தடை உத்தரவை வாபஸ் வாங்கு. இவ்வாறு அவர் பேசினார்.

             கூடங்குளத்தில் இருந்து போலீசாரை வெளியேற்று என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வைகோ, பழ.நெடுமாறன், வேல்முருகன், திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்பட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

            இதேபோல் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன்,  தமிழக வாழ்ரிமை கட்சி நிர்வாகிகள் காமராஜ், காவேரி, சண்முகம், யூனுஸ்கான், வாசுதேவன், ஜெயலட்சுமி,  விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் பாலாஜி, இரா.செல்வம்,சி.பி.எம். மக்கள் விடுதலை இயக்க நிர்வாகிகள் சிதம்பரநாதன், பாண்டியன், பாலசுந்தரம், குமார் உள்பட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Read more...

சாதி மதம் கடந்து தமிழர் நலன் காக்கவும், உலக தமிழர் நலன் காக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது - பண்ருட்டி தி.வேல்முருகன்

சனி, 27 அக்டோபர், 2012

வேலூர்:

 தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர்  பண்ருட்டி தி.வேல்முருகன் வேலூரில் நேற்று  (26/10/2012) அளித்த பேட்டி:

    சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழர் நலன் காக்கவும். உலக தமிழர் நலன் காக்கவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. ஈழதமிழர் பிரச்சினை, காவிரி, முல்லை பெரியாறு நதிநீர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

           முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே கூட்டு ஒப்பந்தபடி ஈழதமிழர் நலன் காக்க அதில் உள்ள 13வது ஷரத்தை ரத்துசெய்ய ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதை ரத்து செய்தால் இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளகூடாது ஈழதமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

             தமிழகத்தில் தினமும் 12 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு அமலில் உள்ளது. இதை சமாளிக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகும் 3000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு பெற்றுதர தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

            பேட்டியின் போது மாநில பொது செயலாளர் காவேரி அமைப்பு செயலாளர் காமராஜ் துணை பொது செயலாளர்கள் சிவகுமார், சுதாகர் உடன் இருந்தனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உளுந்தூர்பேட்டை நகர செயல்வீரர் கூட்டம்

திங்கள், 22 அக்டோபர், 2012

உளுந்தூர்பேட்டை:

   தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உளுந்தூர்பேட்டை நகர செயல்வீரர் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 
     நகர செயலாளர் ரா.பாலா தலைமை வகித்தார். நகர தலைவர் ரா.பிரேம், நகர துணைச் செயலாளர் பி.லட்சுமணன், நகர மாணவரணி செயலாளர் க.வினோத், மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க அமைப்பாளர் கு.வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் க.கோபி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

1. அடிப்படை வசதியில்லாத உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் முன்பு நவம்பர் 3-ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துதல்,

2. உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணியை உடனடியாக முடிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தையும், ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துதல்,

 3. தொடர் மின்வெட்டை தமிழக அரசு உடனே சரி செய்ய நெய்வேலி மின்சாரத்தை முழுவதுமாக தமிழக மக்கள் பயன்படுத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வரை வலியுறுத்துதல்

உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP