Blogger இயக்குவது.

உடுமலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

வியாழன், 28 மார்ச், 2013

உடுமலை:

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
   
திருச்சியில் கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது; விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  
குடிமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் ஆர்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநகர அமைப்பாளர் முகமது கனி முன்னிலை வகித்தார்.  மாநில அமைப்புச் செயலாளர் மே.ப.காமராஜ் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டத் தலைவர் யு.என்.ராமசாமி தலைமையில் ஏராளமான பாமக நிர்வாகிகள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Read more...

திருச்சியில் தனித் தமிழீழம் வேண்டி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காங்கிரசிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

புதன், 27 மார்ச், 2013

திருச்சியில் தனித் தமிழீழம் வேண்டி  போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காங்கிரசிற்கு பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் 


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஓசூரில் கர்நாடக எல்லையை நோக்கி முற்றுகைப் போராட்டம்

திங்கள், 25 மார்ச், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 25.3.2013 அன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களை பாலைவனமாக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்று நீரையே உறிஞ்சி 130 ஏரிகளுக்கு நீரை திருப்பிவிடும் கர்நாடகாவின் அடாவடியைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஓசூரில் பிரம்மாண்ட முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கர்நாடகா எல்லை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் தலைமையிலான ஆயிரக்கணக்கானோர் தடுத்து நிறுத்த்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Read more...

விழுப்புரத்தில் இராசபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 5 மார்ச், 2013

விழுப்புரம்:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சி, ம.தி.மு.க., உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அமெரிக்க அரசு கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், பன்னாட்டு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (04/03/2013) மாலை விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க., மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க., நிர்வாகிகள் மணி, அன்புகணபதி, சம்பந்தம், சாரங்கபாணி, தமிழக வாழ்வுரிமைக்  கட்சி நிர்வாகிகள் ரவி அலெக்ஸ், குமரன், இ.கம்யூ.,நிர்வாகிகள் சரவணன்,கோவிந்தசாமி, மனித நேய மக்கள் கட்சி முஸ்தாக்தீன், மக்கள் உரிமை கூட்டமைப்பு தமிழ்வேங்கை, மனித உரிமை இயக்கம் லூசியா, இளைஞர் அமைப்பு பிரபு, தமிழிளைஞர் கூட்டமைப்பு நிர்வாகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

சேலத்தில் இராசபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

சிங்கள இனவெறியன் இராசபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில்  04.03.2013 அனைத்துக் கட்சிகளின் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் பழைய பேருந்து நிலையம் முன்னுள்ள தலைமைத் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்களை தமிழகக் காவல்துறை கைது செய்தது.
மிழக வாழ்வுரிமைக்  கட்சி முன்னணித் தலைவர் வை.காவேரி, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் செந்தில் குமார் (தமிழர் தேசிய இயக்கம்) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் அமைப்பாளர் தோழர் பிந்துசாரன் திரு. பூமொழி (தலைவர் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம்) தோழர் சக்தி (திராவிடர் விடுதலைக் கழகம்) தோழர் கோ.சீனிவாசன் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ.) - மக்கள் விடுதலை தோழர் ப.ஜீவானந்தம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP