Blogger இயக்குவது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் முழக்கப் போராட்டம்

திங்கள், 30 செப்டம்பர், 2013

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம்

தேதி: 02-10-2013
நாள்: புதன்கிழமை,
நேரம்: மாலை 4-00மணி,
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,விழுப்புரம்

தலைமை:  

தி.வேல்முருகன், நிறுவனர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

முன்னிலை:

ஏ.கே.மணி, ம.திமுக
எம்.ஆர்.குமரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
மு.யா.முஸ்தாக்தீன், மமக
செ.தேசிங்கு, நாம் தமிழர் கட்சி

கண்டன உரை:

இராம.இரவிஅலெக்ஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
வா.ச.சுரேஷ் குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
பாபு கோவிந்தராஜ், மதிமுக
பிரபா.கல்விமணி, மகஇ
க.நடராசன், மதிமுக
எம்.முஜிபுர்ரஹ்மான், மமக



Read more...

இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் விருத்தாசலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

இனப்படுகொலை நடந்த இலங்கையில் நடத்தப்படுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்குபெற கூடாது என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 29/09/2013 அன்று விருத்தாசலத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டன உரை ஆற்றினார். கண்டன பொதுக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் காவேரி, மாநில துணைப் பொது செயலாளர் கருப்பு சரவணன், புதுவை மாநில அமைப்பாளார் ஸ்ரீதர், சின்னதுரை, மாநில இளைஞசரணித் தலைவர் ரவி பிரகாஷ், விருத்தாசல நகர செயலாளர் பி.ஜி சேகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 























Read more...

தியாகி தீபம் தீலிபன் நினைவு வணக்க நிகழ்வு - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தியாகி தீபம் தீலிபன் நினைவு வணக்க நிகழ்வும், போர்க்குற்றவாளி இராஜபக்சே நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது ஏன்? விளக்கப்பொதுக்கூட்டம் 26/09/2013 சென்னை லாயிஸ் சாலை, வி.எம்.தெரு சந்திப்பு, ராயப்பேட்டையில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். 













Read more...

புதுவை வந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம்

புதன், 25 செப்டம்பர், 2013

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக–புதுவை மீனவர்களை மீட்கவேண்டும், காமன் வெல்த் மாநாட்டிலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும், இலங்கைக்கு போர்கப்பல் வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாணவர் கூட்டமைப்பு சார்பில் புதுவை வரும் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

இன்று (25/09/2013) காலை 8 மணியளவில் லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து புதுவை பல்கலைக்கழகம் செல்லும் வழியில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜிக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுவை மாநில தலைவர் ஸ்ரீதர், புதுவை மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், பெற்றோர்–மாணவர் சங்க தலைவர் ராஜ்பவன் வை.பாலா, சட்டக்கல்லூரி மாணவர்கள் கவுதம பாஸ்கரன், இதயவேந்தன் மற்றும் தந்தைபிரியன், ராஜா உள்பட 50க்கும் மேற்பட்டோரை ஒதியஞ்சாலை போலீசார் அண்ணாசிலையருகே அவர்களை கைது செய்தனர்.

Read more...

வெங்காயம் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டம் முன்பு 24/09/2013 அன்று வெங்காயம் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் போரூர் சண்முகம், மாநில தொழிற்சங்க செயலாளர் கே.வி.சிவராமன், துணைத் தலைவர் வாசுதேவன், இரா.ஏழுமலை, அயன்புரம் தேவராஜ், விருகை வீரராகவன், வெங்கடேஷ், அப்துல் சதீக், ஜோஸ்வா, சரவணன், மகளிரணி வெள்ளையம்மாள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் மக்களாட்சி அரசு கடை என்று எழுதி வெங்காயத்தை குவித்து வைத்திருந்தனர். அப்போது 1 கிலோ வெங்காயத்தை 2 ரூபாய்க்கு விற்று நூதன போராட்டம் நடத்தினர். இதன் அருகே மத்திய அரசு கடை என்று எழுதி 1 கிலோ வெங்காயத்தை 65 ரூபாய்க்கு விற்றனர். இதில் மக்களாட்சி அரசு கடையில் போட்டி போட்டு 50–க்கும் மேற்பட்ட பெண்கள் 2 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒவ்வொரு பொருட்களின் விலை உயர்வை அட்டையில் பட்டியலிட்டு எழுதி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் சத்ரியன் து.வெ.வேணுகோபால் பேசியது:


வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் தேர்தல் சமயத்தில் இது முக்கிய பிரச்சினையாக மக்கள் மத்தியில் எதிரொலிக்கும் என்றார்.



Read more...

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன்

திங்கள், 23 செப்டம்பர், 2013

 


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.பண்ருட்டி வேல்முருகன்  23/09/2013 அன்று சேலத்தில் அளித்த பேட்டி:
இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தி இலங்கை தமிழர்களின் உரிமைகளை வழங்க வேண்டும். தமிழ் ஈழ உணர்வாளர்களை மதிக்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ அவரது பிரதிநிதியோ பங்கேற்க கூடாது. மீறி பங்கேற்றால் அக்டோபர் மாதம் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டம் மூலம் முதல்வர போர்க்கால நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

ஏற்காடு தொகுதியில் கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு எங்கள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால் அவருக்கு பதிலாக அதே கட்சியை சேர்ந்த ஒரு வரை எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாம். அல்லது அதற்கு அடுத்த ஓட்டு வாங்கியவரை எம்.எல்.ஏ.வாக நியமிக்கலாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் தனித்து போட்டியிடுவோம் என்றார். இதையாவது அவர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் ஒரு போதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில பொது செயலாளர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில துணை பொது செயலாளர்கள் எஸ்.கே. சக்திவேலன், ஜெயமோகன், சத்தியமூர்த்தி மற்றும் ஆறுமுகம், ஜெயலட்சுமி பாலு, அழகேசன், பாலு, கராத்தே வெங்கடேசன், சபரிஷ், ராகுல், ராஜ்குமார், ரகு, சரவணமூர்த்தி, முனிரத்தினம், மலர் ராமலிங்கம், சரவணன், கணேசன், ஏ.பி.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP