Blogger இயக்குவது.

நெய்வேலி மந்தாரகுப்பம் சிறு, குறு வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வெள்ளி, 29 நவம்பர், 2013

நெய்வேலி மந்தாரகுப்பம் சிறு, குறு வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். 



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

தேசியத் தலைவர் மேதகு வே.கரிகாலன் (எ) வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் "கட்டிகை" வெட்டி கொண்டாடப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் "கட்டிகை" வெட்டினார். விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவரகளுக்கு தேசிய தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க தலைவர் சைதை சிவா, மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்திரியன் து.வேணுகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். 
 








Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவரணி சார்பில் சிதம்பரத்தில் மாவீரர் தினம் கொண்டாட்டம்

வியாழன், 28 நவம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவரணி சார்பில் சிதம்பரம் வேங்கான்தெருவில் இலங்கை தமிழ் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது.

போராளிகளின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாணவரணி தலைவர் சி.ராம்ஜி தலைமை வகித்தார். எஸ்.சந்தோஷ் முன்னிலை வகித்தார். மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், மாவட்டச் செயலாளர் முடிவண்ணன், ஆர்.கே.குமரன், சிவபுரி ஆர்.பவி, கோ.தில்லைநாயகம், கே.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more...

விளை நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க அனுமதி: விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்டரீதியான உதவிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கொள்ளும் - வை.காவேரி அறிவிப்பு

புதன், 27 நவம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வை.காவேரி செவ்வாய்க்கிழமை (26.11.2013)  அன்று சேலத்தில் அளித்த பேட்டி:

சீனாவில் கடந்த வாரம் எண்ணெய் குழாய் வெடித்ததில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனம் அமைக்கும் எரிவாயு குழாய்கள் வெடித்தால் அதன் பாதிப்பு 5 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கெயில் நிறுவனம் விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்க முடியாது. ஏனெனில், விவசாயிகளை சமாதானம் செய்து எரிவாயு குழாய் பதிக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, பல கூட்டங்கள் நடத்தி விவசாயிகளை சமாதானம் செய்திட பல ஆண்டுகளாகக் கூடும். தவிர, பாதிக்கப்படும் விவசாயிகளும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்புள்ளது என்பதால் அதுவரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க முடியாது. இதன்படி, விவசாயிகள் மேல்முறையீடு செய்ய சட்டரீதியான உதவிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கொள்ளும்.

தற்போது நீதிமன்றங்களில் நடக்கும் விவாதங்களை யாரும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதை வழக்குடன் சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். தவிர, மகளிருக்கென தனி நீதிமன்றம் உள்ளதுபோல விவசாயிகளுக்காகவும் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் பிரச்னைகளை விரைவில் தீர்க்க முடியும் என்றார் அவர்.

பேட்டியின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.ஜெயமோகன், மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.வெங்கடேஷ், மாவட்டத் தலைவர் கே.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் சங்கத்தின் கடலூர் மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 26 நவம்பர், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் சங்கத்தின் கடலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் பூதாமூரில் 24.11.2013 அன்று மாலை 4 அளவில் நடைபெற்றது.

மாவட்ட மாணவர் சங்க செயலாளர் நவீன்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட மாணவர் சங்க தலைவர் சத்தியஞானம், மாவட்ட மாணவர் சங்க ஓருங்கிணைப்பாளர் ஆனத்தகுமார், விருதை நகர மாணவர் சங்க தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாணவர் சங்க துணை செயலாளர் அருள்பாபு தலைமை தாங்கினார். மாநில மாணவர் சங்க தலைவர் இரவி.பிரகாசு சிறப்புரையாற்றினார். விருதை நகர செயலாளர் பி.சேகர் நகர பொருப்பாளர்கள் மணிகன்டன்,அய்யப்பன், சாகுல், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், வெங்கடாலம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நகர மாணவர் சங்க செயலாளர் ஆனந்த் நன்றியுரையாற்றினார்.





 

Read more...

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு சார்பில் ஐயா பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

சனி, 23 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி, இந்திய அரசு அலுவலகங்களைத் தாக்கிய திராவிடர் விடுதலைக் கழக சென்னை - சேலம் தோழர்கள் 7 பேர் மீதும், அதன் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் மீதும் தமிழக அரசால் ஏவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், முள்ளிவாய்க்கால் முற்றம் எழுப்பிய ஐயா பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளைக் கைவிடக் கோரியும், சென்னையில் இன்று (23.11.2013) காலை, 'அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரானக் கூட்டமைப்பு' சார்பில், பல்வேறு கட்சி - இயக்கங்கள் பங்கெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை 11 மணிளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் திரு. தெகலான் பாகவி, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தோழர் தங்கத்தமிழ்வேலன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் குடியரசு முன்னணி செயலாளா வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் தோழர் தமிழ்நேயன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை செயலக உறுப்பினர் தோழர் சதீஷ், சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பரிமளா உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.






Read more...

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளிடம் வேகமாகப் பரவி வரும் கோமாரி நோயை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

சனி, 16 நவம்பர், 2013

கடலூர் மாவட்டத்தில் கால்நடைகளிடம் வேகமாகப் பரவி வரும் கோமாரி நோயை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி வெள்ளிக்கிழமை  (15.11.2013) வலியுறுத்தினார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி காட்டுமன்னார்கோயிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்படும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் விளைநிலங்களுக்கு சரிவர சென்றடைவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாசன வாய்க்கால்களை தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தைக் கண்டிக்கிறோம். இன உணர்வுக்காகப் போராடியதற்காக கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
 
பேட்டியின் போது துணைப் பொதுச் செயலாளர் உ.கண்ணன், மாநிலப் பொறுப்பாளர்கள் பாலகுருசாமி, ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் முடிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்து 16.11.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி, 15 நவம்பர், 2013

இந்திய-சிங்களக் கூட்டுப் படைகளால் தமிழீழ மண்ணில் இனப்படுகொலை செய்து கொள்ளப்பட்ட தமிழீழ மக்களை நினைவேந்தும் விதமாக, உலகத் தமிழர் பங்களிப்போடு தஞ்சை -விளாரில் உருவாக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவுப் பூங்காவையும், அதன் சுற்றுச்சுவரையும் சட்டவிரோதமாக இடித்துத் தள்ளி, அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களை சிறையில் அடைத்திருக்கும் தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்து தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

நாள்: 16.11.2013 (சனிக்கிழமை)
இடம்: வள்ளுவர் கோட்டம்,
நேரம்: காலை: காலை 10 மணி

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் விபரம்:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
மனித நேய மக்கள் கட்சி,
எஸ்.டி.பி.ஐ.,
தந்தை பெரியார் தி.க,
தமிழ்நாடு மக்கள் கட்சி,
மே பதினேழு இயக்கம்,
சேவ் தமிழ்ஸ் இயக்கம்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்,
தமிழ்த் தேசக் குடியரசுக் கட்சி,
தமிழ்த் தேச மக்கள் கட்சி,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை,
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்,
தமிழர் குடியரசு முன்னணி,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

Read more...

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிறுவனருமான திரு.பழ.நெடுமாறன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவரும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிறுவனருமான அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

ஈழத்தில் நடந்த மாபெரும் இனப்படுகொலையை தமிழ்நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும், உலகம் முழுவதும் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் தன் நெஞ்சில் நிறுத்தி ஆறாத வடுவாகவும் அணைக்க முடியாத பெரும் நெருப்பாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வோடு தமிழ் நாட்டின் தஞ்சையில் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் அரசு நிலத்தில் அதன் காம்பவுன்டு சுவரும், சுற்று சுவரும் பூங்காவும் அமைக்கப்பட்டது என்று கூறி கைது செய்யப்பட்டிருக்கும் அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களின் வயதையும் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும். மேலும் அந்த வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்தும் அவர்கள் மீது உள்ள வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்.

தமிழ் ஈழ மண்ணில் சிங்கள பேரினவாத அரசு ராஜபக்சே அங்கு உள்ள ஈழதமிழர்களுடைய, மாவீரர்களுடைய சிலைகள், நினைவுசின்னங்கள், தமிழ் தலைவர்களுடைய சிலைகள் அனைத்தையும் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். இந்த சூழலில் அந்த மண்ணில் நினைவுசின்னம் இல்லாத போது நம்முடைய தாய்தேசமான தமிழ் நாட்டில் இனஅழிப்பு போரின்போது ஏற்பட்ட பாதிப்புகளை வருங்கால தலைமுறை தெரிந்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட முற்றத்தை பாதுகாக்க முன் வரவேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மேலும் ஈழதமிழர்களுடைய நலனுக்காக மூன்று சட்ட மன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர்களுடைய நடவடிக்கை பாராட்டுதல்குரியதாகும். அதே வகையில் இந்த முள்ளி வாய்க்கால் முற்றத்தினை கூட நம்முடைய தமிழக அரசும், மாண்புமிகு முதலமைச்சரும் முன் வந்து அமைத்திருந்தால் தமிழ் நாட்டில் வாழ்கின்ற தமிழர்களிடத்திலும், உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களிடத்திலும் நெஞ்சில் நீங்காத ஒரு பெயரையும் புகழையும் மாண்புமிகு புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் வரிசையில் தற்போதைய முதல்வர் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் தமிழக அரசு அதை செய்ய முன் வராத போது அதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதும் கைது செய்திருப்பதும் உலகமெல்லாம் வாழ்கின்ற தமிழர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. 

ஆதலால் தமிழக அரசு திருச்சி சிறையில் வாடுகின்ற அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டு சேலம் சிறையில் வாடும் திரு.கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர் அனைவரையும் விடுதலைசெய்து அவர்கள் மீது உள்ள வழக்கையும் ரத்து செய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அது மேலும் சிறப்படைகின்ற வகையில் தமிழக அரசு செய்து தர முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.





Read more...

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுவர் இடிக்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

புதன், 13 நவம்பர், 2013

இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சாவூர், விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.


தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று (13.11.2013) புதன்கிழமை காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை காவல்துறையினர் துணையுடன் இடிக்கப்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களை காவல்துறையினர் கைது செய்ததை தமிழக வாழ்வுரிமைக் கட்சி  பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  மிழக வாழ்வுரிமைக் கட்சி  பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
 

Read more...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சீர்காழியில் ரயில் மறியல் போராட்டம்

செவ்வாய், 12 நவம்பர், 2013

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து இன்று செவ்வாய்கிழமை (12.11.2013) நாகை மாவட்டம் சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் மதிமுக, த.பெ.திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ரயில் மறியலில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர். 





Read more...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சிதம்பரத்தில் இன்று செவ்வாய்கிழமை (12.11.2013)  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமையில் ஊர்வலமாக ரயில்நிலையத்திற்கு சென்று திருச்சி - சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மூத்தநகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ் உள்ளிட்ட 254 பேரை போலீஸார் கைது செய்தனர். இ்ப்போராட்டத்தில் தமிழத் தேசப் பொதுவுடைமை கட்சி, மக்கள் உரிமை கூட்டமைப்பு, தமிழக உழவர் முன்னணி, மாணவர் முன்னணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்டவை பங்கேற்றன. 






Read more...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்கிழமை (12.11.2013) வள்ளுவர் கோட்டம் அருகே  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஒப்பாரி போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் சத்ரியன், து.வெ.வேணுகோபால், ஏழுமலை, தொழிற்சங்க தலைவர் கே.வி.சிவராமன் முன்னிலை வகித்தனர். ஒப்பாரி போராட்டத்தை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தொடங்கி வைத்து கண்டன உரை ஆற்றினார்

சிங்கள ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட இசைப் பிரியாவின் உருவ பொம்மையை மகளிரணி தலைவி வெள்ளையம்மாள் தலைமையில் 1000 பெண்கள் கொண்டு வந்து ஒப்பாரி வைத்து அழுதனர். சிங்கள ராணுவத்துக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் வசைபாடினர்.

ஒப்பாரி போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தொடங்கி வைத்து பேசியது:


தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ரெயில் மறியல் நடத்தி 12 ஆயிரம்பேர் கைதாகி உள்ளனர். சென்னையில் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகையிட எங்களை அனுமதிக்கமாட்டார்கள். நீங்கள் கைக்குழந்தையுடன், வயதான முதியவர்களுடன் போராட்டத்துக்கு வந்துள்ளதால் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வள்ளுவர் கோட்டம் அருகே ஒப்பாரி போராட்டத்துக்கு அழைத்து வந்துள்ளோம். இசைப்பிரியாவின் படுகொலை, பாலச்சந்திரனின் இரக்கமற்ற சாவு கல்நெஞ்சையும் கறைய வைக்கும். இதற்கு ராஜபக்சேவை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தியும், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தியும் இந்த ஒப்பாரி போராட்டம் நடக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜோசுவா, தேவராஜ், ஆறுமுகம், சந்துரு, வீரன், வீர ராகவன், மோகன் வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.









Read more...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம் - நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

திங்கள், 11 நவம்பர், 2013

 இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சேலத்தில் ரயில் மறியல் போராட்டம்  நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.











Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP