Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் 02.02.2014 அன்று வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெறும்

புதன், 29 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருத்தரங்கம் 02.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெற உள்ளது.

தொடர்புக்கு: 978686286



Read more...

புதுச்சேரியில் "உயிர்வலி மறுக்கப்பட்ட நீதி" ஆவணப்படம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிடுகிறார்

புதுச்சேரியில் "உயிர்வலி மறுக்கப்பட்ட நீதி" ஆவணப்படம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிடுகிறார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சந்திப்பு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை, திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28.01.2014) மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தி.வேல்முருகன் அவர்களின் இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு வருமாறு தி.வேல்முருகனை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைத்துள்ளார். இதற்கு தி.வேல்முருகன் அவர்கள் கட்சியின் நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து முடிவை 23.02.2013 அன்று சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாட்டில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் வடமாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினால் ஏற்படும் சரிவை தற்போது வடமாவட்டங்களில் வேகமாக வளர்ந்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூலம் ஈடுகட்டலாம் என்று திராவிட முன்னேற்ற கழகம் கருதுகிறது.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுச்சேரியில் மொழிப் போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

மொழிப் போர் ஈகியர் நாள் 25.01.2014 அன்று காலை 10:30 மணிக்கு புதுச்சேரி ஆம்பூர் சாலை, அரசு பொது மருத்துவமனை எதிரில் பூரான்கள் இயக்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மொழிப் போரில் வீர மரணமடைந்த ஈகியர்களுக்கு வீரணக்கமும் மற்றும் தமிழ் மொழியை காக்க உறுதி மொழி ஏற்பும் நடைபெற்றது. 

இந்த அஞ்சலி நிகழ்வுக்கு இயக்கத்தின் தலைவர் பூரான். வீ. போன்ஸ் ரமேஷ் தலைமை தாங்கினார். சுடர் விளக்கை செந்தமிழர் இயக்கத்தின் தலைவர் நா.மு.தமிழ்மணி ஏற்றிவைத்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர், மற்றும் தமிழர் களத்தின் மாநில அமைப்பாளர் கோ.அழகர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். பின்பு உறுதிமொழி ஏந்தி சபதம் செய்யப்பட்டது. முடிவில் முழக்கங்களுடன் இந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றும் சூறுரைக்கப் பட்டது. நிகழ்வில் தாகூகலைக் கல்லூரி தமிழ் பேராசிரியர் செல்வபெருமாள், அலைகள் இயக்கம் பாரதி, மெல்லிசை கூட்டமைப்பு ஆனந்து, டிவி நகர் ராஜாஆகியோர்கள் கலந்துக் கொண்டனர். 


Read more...

திருவாரூர் கே.தங்கராசு அவர்களின் படத் திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்கிறார்

வியாழன், 23 ஜனவரி, 2014

திருவாரூர் கே.தங்கராசு அவர்களின் படத் திறப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்கிறார்


Read more...

மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொறையாறு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

புதன், 22 ஜனவரி, 2014

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், இத்திட்டத்திற்காக பெரிய நிறுவனங்களுக்கு துணைப் போகும் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பொறையாறு பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 22.01.2014 அன்று நடைபெற்றது.

முற்றுகை போராட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலர் பி.வினோத், மாவட்டஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, மகளிர் அணி மாவட்ட செயலர் ஆர். சாந்தி உள்பட சுமார் 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Read more...

தமிழ்ச் சமூகத்தில் பிறந்த அனைவருக்காகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாடுபடும் - விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.வேல்முருகன் பேச்சு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 21.01.2014 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில துணை பொது செயலாளர் ராமரவி அலெக்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.ஆர்.குமரன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் சேட், சுதாகர், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி, பலராமன், மணிகண்டன், பூண்டி ரவி, ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பொது செயலாளர் காவேரி, அமைப்பு செயலாளர் கொற்றவன் மூர்த்தி, துணை பொது செயலாளர் கனல் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிலிங்கம், மாநில தொழிற்சங்க செயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் சசிக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் அலேக்ஸ்தீனா, பாசறை செயலாளர் மின்னல் தினேஷ், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் இளம்வழுதி, மாவட்ட துணை செயலாளர் டேவிட், மாவட்ட தொண்டர்படை செயலாளர் சுமன், மாவட்ட மாணவரணி தலைவர் சிலம்பரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியி
ன் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:

வன்னியர்களை பயன்படுத்திக் கொண்டு பதவியைப் பிடித்த ராமதாஸ், அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை. பா.ம.க மத்தியில் கூட்டணி அரசில் இருந்தபோது நேர்முக உதவியாளர் பதவி உள்பட அனைத்து பதவிகளும் அவர்களது உறவினர்களுக்கே வழங்கப்பட்டன. பா.ம.க.வுக்கு கொடி பிடித்தவர்களுக்காகவும், பா.ம.க.வின் வளர்ச்சிக்காக வழக்குகளை சந்தித்தவர்களுக்காக இவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளின் வாரிசுகளுக்கு கூட ஒன்றும் செய்யவில்லை. இந்த இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 27 குடும்பங்களின் வாரிசுகளுக்கே ஒன்றும் செய்ய முடியாதவரா 2 கோடி வன்னியர்களை காக்கப்போகிறார்? ஆனால் வன்னியர்களுக்கு பாமக செய்யத் தவறியதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்யும். வன்னியர்கள் மட்டும் இன்றி தமிழ்ச் சமூகத்தில் பிறந்த அனைவருக்காகவும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி பாடுபடும். வரும் பிப்ரவரி 23-ம் தேதி எங்கள் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. அப்போது கூட்டணி குறித்த அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம் என்றார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:


1. இலங்கையில் ஐ.நா மேற்பார்வையில் சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

2. ஐ.நா. அவையில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இது குறித்து இந்தியா வலியுறுத்த வேண்டும்,

3. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டிப்பது,

4. செங்கல்பட்டு, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோருவது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் கோலியனூர், காணை, திருநாவலூர், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.




Read more...

பாட்டாளி மக்கள் கட்சியை போட்டியாக கருதவில்லை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.வேல்முருகன் அறிவிப்பு

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 18.01.2014 அன்று நடைபெற்றது.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று ஆற்றிய சிறப்புரையாற்றினார்.

பின்னர்  தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத்தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் 18.01.2014 அன்று அளித்த பேட்டி:

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால். கட்சத்தீவை நாம் மீண்டும் பெற வேண்டும். கட்சத்தீவை பெற தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் கட்சத்தீவு இலங்கைக்கு சொந்தமென மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. இந்த அபிடவிட்டை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சுத்தம் செய்யப்படும் குடிநீர் போக மீதமுள்ள நீரை காவிரி ஆற்றில் திருப்பி விடுகின்றனர். அந்த நீரை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் தர்மபுரி மாவட்டத்திற்கு திருப்பி விடவேண்டும். கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் வாயு நிரப்பும் குழாய் பதிப்பதை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். 
வருகிற மார்ச் இறுதியில் ஐ.நா. சபையில் நடைபெற உள்ள மனித உரிமை மாநாட்டில் இலங்கைத் தமிழர், புலம் பெயர்ந்த ஈழத் தழிழர்களிடம் சுதந்திரமான பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க் குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும். இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகத்தில் எங்கள் கட்சியில் 7.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2.5 லட்சம் பேர் இணையதளம் மூலம் உறுப்பினர்களாகி உள்ளனர்.

சேலத்தில் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எங்களது கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தப்படும்.

பாமக உள்ள கூட்டணியில் சேரமாட்டோம்: 

பாமகவை போட்டியாக கருதவில்லை. அதேவேளையில் அந்தக் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம். இழந்த தேர்தல் அங்கீகாரத்தை மீட்கும் நெருக்கடியில் பாமக உள்ளது. அதுபோன்ற நெருக்கடி எங்களுக்கு இல்லை.

காங்கிரஸ் மட்டும் எதிரி: 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எதிரியாக கருதுகிறோம். மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளும் எங்களுக்கு எதிரிதான்.









Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எலுமிச்சை கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

புதன், 15 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எலுமிச்சை கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மாநில தமிழர் படை தலைவரும், ஊமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருமான பொறியாளர் E.N. அறிவழகன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டார். விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொருளாளர் மு.ஆறுமுகம், எலுமிச்சை கிளை தலைவர் ஜெ. வெங்கடேசன், செயலாளர் செ.சண்முகம், பொருலாளர் ரீனா பாலமுருகன், ஊராட்சி செயலாளர் சொ. வினோத்குமார், ஒன்றிய இளம்புயல் பாசறை தலைவர் ரெ.சுரேஷ், ஆனந்த, தாமரைசெல்வன் கலந்து கொண்டனர்.




Read more...

அரவக்குறிச்சி அருகே நடைபெறவுள்ள சேவல் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரசுக்கு கோரிக்கை

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அரவக்குறிச்சி அருகே நடைபெறவுள்ள சேவல் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிறுபான்மைபிரிவு மாவட்ட அமைப்பாளர் முகமது அலி அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல்சரகத்தில் சேவல்சண்டை நடைபெற உள்ளது. சேவல் உரிமையாளர்கள் தங்கள் சேவல் மீது லட்சக்கணக்கில் பணம் கட்டி சூதாட்ட பந்தயம் நடைபெறுகிறது. பல மாவட்டங்களில், இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் அதிக அளவில் மது அருந்திவிட்டு வண்டி வாகனத்தில் வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த சேவல் சண்டை மருத்துவ சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்தில் அனுமதி சான்றிதழ் பெறாமல் நடைபெறுகிறது.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சிவகங்கை, சிவகங்கை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது

திங்கள், 13 ஜனவரி, 2014

மதுரை:

மதுரை, சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்   நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்  தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி:
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக, வாழ்வுரிமைக்காக எங்கள் கட்சி போராடி வருகிறது. நஞ்சு இல்லாத உணவு, நோயற்ற வாழ்க்கை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்விக்கொள்ளையை தடுத்தல் ஆகியவற்றுக்காக பாடுபடுவதே கட்சியின் கொள்கையாகும்.

பா.ம.க.அணி கிடையாது 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு விழா வருகிற பிப்ரவரி 23–ந் தேதி நடக்கிறது. அப்போது, பாராளுமன்றத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். ஆனால், காங்கிரஸ் மற்றும் பா.ம.க.கூட்டணியில் இடம் பெற மாட்டோம். 

தமிழக மீனவர்கள்விடுதலை:

தமிழக மீனவர்கள் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரையும் பொங்கல் பண்டிகையையொட்டி விடுதலை செய்ய வேண்டும். இதற்காக மத்திய அரசு வெளியுறவுத்துறை செயலாளரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

கெயில் நிறுவனம் சார்பில் எண்ணை குழாய் பதிக்கும் பணிகளை நெடுஞ்சாலை பகுதிகளில் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீத்தேன் வாயு எடுக்கும் திட்டமும் விவசாயத்துக்கு எதிரானது. அந்த திட்டத்தை கைவிட வேண்டும். கேரள மாநில அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம்காட்டி அட்டப்பாடியில் வசிக்கும் 30 ஆயிரம் தமிழர்களையும் வெளியேற்ற நினைக்கிறது. ஆனால், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கிறது. இது குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேம்பாலங்கள் கட்ட

மதுரையில் வைகையாற்றில் தொழிற்சாலைகளின் கழிவு நீர், சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். இதற்காக தமிழக முதலமைச்சர் சிறப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி பழைய வைகை ஆறு போல மாற்ற வேண்டும். சிவகங்கை பகுதியில் சாயப்பட்டறை கழிவு நீர் கிருதுமால் நதியில் கலப்பதை தடுக்க வேண்டும். மதுரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்ட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் எண்ணை நிறுவனங்களை கொண்டு வர வேண்டும். 

பேட்டியின் போது  மாநில அமைப்புச் செயலாளர் காமராஜ், துணைப்பொதுச் செயலாளர் தமிழ்நேசன், மதுரை மாநகர அமைப்பாளர் துரைசேகர், புறநகர் மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் உடன் இருந்தனர்.

Read more...

பேரூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து 22.01.2014 அன்று முசிறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் உண்ணாவிரதம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் முசிறியில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் பேசினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ்ராஜா நன்றி கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :


1. முசிறி பகுதிகளில் காவிரி ஆற்று மணல்களை சேமித்து வைத்து மறுவிற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும்,

2. கோமாரி நோய்க்கு பலியான கால்நடைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்,

3. பேரூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோரை கண்டித்து வரும் 22ம் தேதி முசிறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

மேட்டூரில் 10 இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 12.01.2014 அன்று நடைபெற்றது

சேலம் மாவட்டம் மேட்டூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 12.01.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.

சதுரங்காடியில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் மே.ப.காமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து கொடியேற்று விழாவை தொடங்கி வைத்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜமுனா, மாவட்ட செயலாளர் வீராசாமி, பொருளாளர் ராஜ்குமார், மேட்டூர் நகரப் பொறுப்பாளர் வைத்தியர் மணி, மகளிர் அணி நிர்வாகி கலைச்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
துக்கனாம்பட்டி, சேலம் கேம்ப், சின்னப்பார்க், பேருந்து நிலையம், பொன்நகர் உள்பட 10 இடங்களில் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.


Read more...

தருமபுரியில் 8 இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 11.01.2014 அன்று நடைபெற்றது.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

தருமபுரியில் 8 இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா 11.01.2014 அன்று நடைபெற்றது.

தருமபுரி நகராட்சிக்குபட்ட பாரதிபுரம், நசவலூர் காலனி, எடப்பாடி, பாலயம்புதூர், சவலூர், பங்கனஹல்லி, தசவரம்பட்டி ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி ஜெயலட்சுமி பாலு அவர்கள் தலைமை தாங்கினார். தவமணி, முனிரத்னம், வழக்கறிஞர் சரவணன், சிவக்குமார், முனியன் ரவீந்திரன், வசந்த், செல்வம், பிரசாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.













Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் - தி.வேல்முருகன் சிறப்புரை

சனி, 11 ஜனவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 10.01.2014 (வெள்ளிக்கிழமை) அன்று கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 செயல்வீர்கள் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்று ஆற்றிய சிறப்புரை:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வண்டும் என்று கேட்டுக்கொண்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாமக சேரும் கூட்டணியுடன், கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டணி குறித்து, பிப்ரவரி மாதம் 23ம் தேதி அறிவிக்கப்படும்.












Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP