Blogger இயக்குவது.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

வியாழன், 27 பிப்ரவரி, 2014

தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு ஒன்றை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர இந்திய அரசை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 26.02.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இளையராஜா தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், சத்ரியன் து.வேணுகோபால், சைதை சிவா, தேவராஜ், அப்துல்லா, தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ்வேலன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தீரவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு கட்சிகளின், இயக்கங்களின் தலவர்களும், பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கோரிக்கையை வழியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வழியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.















Read more...

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க.வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பிரதமராக கடுமையாக உழைக்க வேண்டும் - சேலத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டில் தி.வேல்முருகன் பேச்சு

திங்கள், 24 பிப்ரவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழர் வாழ்வுரிமை மாநாடு சேலம் போஸ் மைதானத்தில் நேற்று 23.02.2014 மாலை நடந்தது.

தொடக்க விழா மாநாட்டிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில பொதுச்செயலாளருமான வை.காவேரி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அமைப்பு செயலாளரும், மே.ப.காமராஜ் வரவேற்றார். இணை பொது செயலாளர் சண்முகம், தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், கொள்கை பரப்பு துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் சம்பத், சேலம் மாநகர தலைவர் பாலு, செயலாளர் வெங்கடேஷ், மாநில பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநில பொறுப்பாளர் ஜெயமோகன், முத்து, வீராசாமி, செல்வராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் சிறப்புரையாற்றி பேசியது:
இந்த மாநாடு தேர்தலுக்காக நடத்தவில்லை. அப்படி நடத்தினால் சேலம் மாநகரம் தாங்காது. தமிழ் சமூகத்திற்காக தான் இந்த மாநாடு நடக்கிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் 3பேரின் விடுதலை குறித்து அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும், நானும் தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா 7பேரை விடுதலை செய்து அறிவித்தார். மேலும் மத்திய அரசை எதிர்த்து துணிந்து நின்று 3நாட்களில் விடுதலை என்பதையும் அறிவித்தார். இது இந்திய வரலாற்றிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு நாங்கள் முழுமையான ஆதரவு அளிக்கிறோம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைப்போம். சிலர் கூட்டணிக்காக இன்னமும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சீட்டுக்காகவோ, நோட்டுக்காகவோ அ.தி.மு.கவுக்கு செல்லவில்லை.

இந்த மாநாட்டில் திரண்டுள்ள லட்சக் கணக்கான தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் , நிர்வாகிகள் முன்னிலையில் பிறந்த நாள் காணும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்ற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3–வது அணிக்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையேற்று பிரதமராக வேண்டும்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மேட்டூர் அணையில் இருந்து மழைக்காலங்களில் வீணாகும் மழைநீரை சேலத்தை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருக்கும் குளம் மற்றும் ஏரிகளில் தேக்கி வைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டம் வகுத்திட தமிழக அரசை கேட்டு கொள்கிறோம்.

2. சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாமக்கல் வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டுமெனவும்.

3. சேலம்–சென்னை விழுப்புரம் வழியாக செல்லும் ரெயிலை மேட்டூர் வரைக்கும் நீட்டிக்க வேண்டுமெனவும் மத்திய அரசை கேட்டு கொள்வது என்பது உள்பட 21 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.








Read more...

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரசாரம் செய்யும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் முதல்வர் ஜெயலலிதா சந்தித்து முடிவு

சனி, 22 பிப்ரவரி, 2014

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை  (21.02.2014) மாலை சந்தித்தார்.
 
 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவை கூட்டணியில் இருந்து பணியாற்றுவது, அதிமுகவை ஆதரித்து தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும்,  தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றிபெற பங்காற்றுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்  போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வை.காவேரி, இணைப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் காமராஜ்,  தொழிற்சங்கத் தலைவர் கே.வி.சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.






Read more...

Tamizhaga Vazhvurimai Katchi (TVK) founder T.Velmurugan has welcomed the Tamil Nadu government’s move to release seven persons in the Rajiv Gandhi assassination case

வியாழன், 20 பிப்ரவரி, 2014

Tamizhaga Vazhvurimai Katchi (TVK) founder T.Velmurugan has welcomed the Tamil Nadu government’s move to release seven persons in the Rajiv Gandhi assassination case.

In a statement released here, Mr. Velmurugan noted that Chief Minister Jayalalithaa made an announcement in the State Assembly on Wednesday that she would make a request to the Centre to release Santhan, Murugan and Perarivalan, besides Nalini, Ravichandran and Robert Pius.

Mr Velmurugan said that four companions of slain forest brigand Veerappan were languishing in the Karnataka prison even after their death sentence was commuted to life imprisonment long ago. He appealed to Ms Jayalalithaa to take up the issue with her Karnataka counterpart and secure their release

Read more...

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ள தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை

புதன், 19 பிப்ரவரி, 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று (19.02.2014) வெளியிட்டுள்ள அறிக்கை:

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3 பேரும் இதுவரை அனுபவித்துள்ள சிறை தண்டனையை கணக்கில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 433–வது பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், சட்ட ரீதியான வகையிலும் இவர்களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் அறிவித்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவி சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள். 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். 3 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றைக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசையும் தமிழக முதல்வர் அவர்களையும் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கர்நாடக சிறையில் வீரப்பன் கூட்டாளிகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களின் தண்டனையை இரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல நாட்களாகிவிட்டன. இது குறித்து தமிழக முதல்வர் அவர்கள் நான்கு தமிழர்களின் தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்வரை வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Read more...

10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய நீதித்துறை வரலாற்றில், மரண தண்டனை தொடர்பான விஷயத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. வீரப்பனின் கூட்டாளிகள் நால்வர் உட்பட 15 பேருடைய தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது.

மரண தண்டனை குறித்த பார்வையிலும், மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பான நடைமுறையிலும் பல மாற்றங்களை இத்தீர்ப்பு கொண்டு வந்துள்ளது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஷிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பைவழங்கியது.

கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதுவே, மரண தண்டனையைக் குறைப்பதற்குப் போதுமானது என்ற தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் பலருக்கும் இத்தீர்ப்பு நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது மிகப் பெரும் அவலமாகும்.

மாநில அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ஆய்வு செய்து இவர்களை விடுதலை செய்ய முடிவு செய்தால் அவ்வாறு விடுதலை செய்து கொள்ளலாம் என்று இத்தீர்ப்பு கூறுகிறது. இதன்படி தமிழக முதல் அமைச்சர், ஆய்வுசெய்து மரண தண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் ஏற்கனவே வாழ்நாள் தண்டனை சிறையிலுள்ள நளினி, இராபட்பயாஸ், செயக்குமார், அருப்பக்கோட்டை இரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் ஆக மொத்தம் ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய செய்து கடந்த 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Read more...

சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 500 வாகனங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ள முடிவு

திங்கள், 17 பிப்ரவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மாநில துணை பொதுசெயலாளர் ராம.ரவிஅலெக்ஸ் தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாநில பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் சசி, மாவட்ட தலைவர் பால முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குமரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழர்படை மாநில தலைவர் ஜோதிலிங்கம், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞரணி தினேஷ், மாணவரணி தீனா, சிலம்பரசன், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், அய்யனார், ஜெகதீசன், மணி, சேட்டு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சேலத்தில் 23.02.2014 அன்று நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் 500 வாகனங்களில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

நெய்வேலி:

என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

நெய்வேலி இந்திராநகரில் என்.எல்.சி. தமிழக வாழ்வுரிமை நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் திருபுவனசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிகாமணி, அமைப்பு செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிரந்தர தொழிலாளர் சங்க தலைவர் வேல்முருகன் வரவேற்றார்.

தலைமை நிலைய செயலாளர் கண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:

1. என்.எல்.சி. தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிர்வாகம் உடனடியாக முடிக்க வேண்டும். 

2. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி என்.எல்.சி. ஒப்பந்த மற்றும் இன்கோசர்வ் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

3. சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல், 

4. வருகின்ற 23–ந் தேதி சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் 3–ம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டிற்கு என்.எல்.சி. தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அலுவலக செயலாளர்கள் முருகன், ராஜகோபால், சந்துரு, ஒப்பந்த தொழிலாளர் வாழ்வுரிமை சங்க தலைவர் அய்யப்பன், பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, அமைப்பு செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஞானவேல் நன்றி கூறினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 15 நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் - பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பேட்டி

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

ஒன் இந்தியா தமிழ் இணையதளத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் அளித்த பேட்டி:

கேள்வி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி 3வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த 2 ஆண்டுகாலத்தில் உங்கள் கட்சியின் வளர்ச்சியை எப்படிபார்க்கிறீர்கள்?

வேல்முருகன்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் எங்களுடைய கட்சி இந்த இரண்டு ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை கவர்ந்துள்ளது. நாங்கள் தமிழர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறோம். போராட்டங்களை முன்னெடுக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காகவும் போராடுகிறோம். தமிழர்களை நேசிக்கிற அனைவரும் எங்களுடைய கட்சியில் இணைந்து வருகின்றனர்.

கேள்வி: தமிழர் நலன் சார்ந்தபிரச்சனைகளுக்கு நீங்கள் போராடினாலும் இன்னமும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதிக்கம் செலுத்திய இடங்களை விட்டு உங்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியே வரவில்லைதானே?

வேல்முருகன்: பாட்டாளி மக்கள் கட்சி
வடமாவட்டங்களில் மட்டுமே இருக்கக் கூடிய கட்சி. அது சாதிய வட்டத்திற்குள் அடங்கிய கட்சி. ஆனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வடமாவட்டங்கள் மட்டுமல்லாது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, போன்ற தென் மாவட்டங்களிலும் வளர்ந்து வருகிறது. தமிழர் நலனுக்காக, தமிழ் ஈழ விடுதலைக்காக போராடும் எங்கள் கட்சியில் பரவலாக இளைஞர்கள் இணைந்து வருவதால் தமிழகம் முழுவதும் எங்கள் கட்சி வளர்ந்து வருகிறது.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடைய கூட்டணியில் இணைய முடிவு செய்திருக்கிறீர்கள்?

வேல்முருகன்: இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி சேரப்போவதில்லை. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ள கூட்டணியில் நாங்கள் இணையப் போவதில்லை.

கேள்வி: பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கும் அல்லது பேச்சுவார்த்தை நடத்தும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று சொல்லி வருகிறீர்கள். அப்படியானால் அ.தி.மு.க.வைத்தான் ஆதரிக்கப் போகிறீர்களா?

வேல்முருகன்:
.தி.மு.க ஆதரவு நிலைப்பாடு என்று கூற முடியாது. தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமாக இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்றும் போராட்டம் நடத்தினோம். முதல்வர் ஜெயலலிதா அதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றினார்கள். கெய்ல் எதிர்ப்பு, மீனவர்கள் வாழ்வுரிமை போன்ற எங்களின் போராட்டங்களின் மூலமாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கை தமிழர்களின் நலன்காக்கும் வகையில் அமைந்துள்ளது. இவற்றுக்காக அரசை ஆதரித்துப் பேசினால் உடனே அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாடு என்று கூறிவிட முடியுமா?

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் உங்கள் கட்சி வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என கருதுகிறீர்கள்?

வேல்முருகன்:
தமிழர்களின் நலனுக்காக நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். என்.எல்.சி முற்றுகைப் போராட்டம், ராஜபக்சே இந்தியா வந்தபோது பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினோம். இந்த போராட்டங்களில் பங்கெடுத்த இளைஞர்கள் வாக்குகளாக மாறும் பட்சத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிச்சயம் 15 நாடாளுமன்றத் தொகுதிகள் வரை வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்

கேள்வி: மின்வெட்டு, இடஒதுக்கீடு, சிதம்பரம் நடராஜர் கோயில், கூடங்குளம் அணு உலை விவகாரங்களில் நீங்களும் களத்துக்கு வந்து இறங்கி போராடிவிட்டு இப்போது அ.தி.மு.க ஆதரவு நிலையை எடுப்பது சரியாகுமா?

வேல்முருகன்:
தமிழக வாழ்வுரிமைக் கட்சி இதுவரை எந்த ஆதரவு நிலையையும் எடுக்கவில்லை.

கேள்வி: அ.தி.மு.க.கூட்டணிக்காக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நீங்கள் அல்லது உங்களது கட்சி நிர்வாகிகள் சந்தித்ததாக வெளியான செய்திகள் பற்றி?

வேல்முருகன் : அது தவறான தகவல். நான் இதுவரை அ.தி.மு.க.வின் நால்வர் குழுவில் உள்ள ஒ.பன்னீர் செல்வத்தை சந்திக்கவில்லை.

கேள்வி: முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உங்கள் மீது எத்தனையோ வழக்குகள் போடப்பட்டு பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது.. இப்போது அதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது நெருடலாக இல்லையா?

வேல்முருகன்: என்மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியலில் வழக்குகளை சந்திக்காமல் இருக்க முடியாது. தி.மு.க ஆட்சி காலத்திலும் என்மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளது.

கேள்வி: உங்களது பிரிவால் பாட்டாளி மக்கள் கட்சி பாதிக்கப்பட்டுள்ளதாகா கருதுகிறீர்களா?

வேல்முருகன்: நிச்சயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது தெரியவரும்.

கேள்வி: வரும் லோக்சபா தேர்தலில் உங்களது அணுகுமுறை எப்படி இருக்கும்? பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுவீர்களா?

வேல்முருகன்: நாங்கள் லோக்சபா தேர்தலை குறிவைக்கவில்லை. தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து போராட வேண்டும் என்பதுதான் இலக்கு. எதிர்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்து போட்டியவேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் போட்டியிடுவேன்.

கேள்வி: தனியாக நிற்போம் என்று கூறிய பாட்டாளி மக்கள் கட்சி இப்போது ரகசியமாக கூட்டணிக்கு முயற்சிக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?

வேல்முருகன்: அதுதான் ராமதாசின் கொள்கையற்ற அரசியல். முதலில் தேசிய கட்சியுடன், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறினார். சமீபத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார். அவரது கொள்கையற்ற அரசியல் இதிலிருந்தே புலப்படும்.

கேள்வி: டாக்டர் ராமதாஸின் பலம், பலவீனம் என்ன?

வேல்முருகன்: இரண்டு கோடி மக்கள் தொகைக் கொண்ட ஒரு இனத்தின் தலைவர் என்று கூறிக்கொள்வதுதான் அவரின் பலம். அவரது வாய்தான் மிகப்பெரிய பலவீனம்.

கேள்வி: அன்புமணி ராமதாஸ் பற்றி உங்கள் கருத்து?

வேல்முருகன்:
மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்த போது தமிழக மக்களுக்காக பல்வேறு சிறப்பாக திட்டங்களை அமல்படுத்தினார் அது பாராட்டப்பட வேண்டியது. அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஏ.கே.மூர்த்தி, மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சராக இருந்த போது பல்வேறு தொடர்வண்டிகள் தமிழகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இரட்டை ரயில்பாதைகள் போடுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

கேள்வி: உங்களது போராட்டம் ஒவ்வொரு நிலையிலும் ஒரு களமாக உள்ளது. எதிலும் தெளிவு இருப்பது போலத் தெரியவில்லையே ஏன்...?

வேல்முருகன்: எங்களுடைய போராட்டங்களை ஊடகங்கள் சரியான அளவில் தமிழகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்கவில்லை. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

கேள்வி: தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைவரும் தனிதொலைக்காட்சி, பத்திரிக்கைகள் நடத்துகின்றனர். ஆதரவு தொலைக்காட்சியும் உள்ளது. ஆகையால் உங்களுக்கு தொலைக்காட்சி தொடங்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா?

வேல்முருகன்: நான் தொலைக்காட்சி தொடங்கும் நிலையில் இல்லை. எந்த தொலைக்காட்சி நிறுவனத்திடமும் போய் என் தொடர்பான செய்திகளை போடச் சொல்லி கேட்டதும் இல்லை.

கேள்வி:
அர்விந்த் கெஜ்ரிவால் வளர்ச்சிக்கு ஊடகங்களும் ஒரு காரணம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

வேல்முருக
ன்: நிச்சயம். அரசு ஊழியராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் இன்றைக்கு டெல்லி முதல்வராக முக்கிய காரணம் ஊடகங்களின் ஒத்துழைப்புதான் என்பதை மறுக்க முடியாது.

கேள்வி: பாமக இல்லாத பாஜக கூட்டணியில் இடம்பெறுவதற்கு நீங்கள் தயாரா?

வேல்முருகன்: இப்போதைக்கு அது தொடர்பான எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை.

கேள்வி: ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்படலாம் என சுப. உதயகுமார் அழைப்பு விடுத்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டீர்கள்.. அந்த கட்சியுடன் இணைவதில் அல்லது இணைந்து செயல்படுவதில் எது தடையாக இருக்கிறது?

வேல்முருகன்:
தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு பிரிவாக இருக்கிறது. என்ன பெயரில் செயல்படப் போகிறது. யார் தலைமையின் கீழ் செயல்படப்போகிறது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உதயகுமார் தலைவராக இருக்கப் போகிறாரா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் கூட்டணி பற்றி பேசலாம் என்று கூறியுள்ளேன்.

கேள்வி: உங்களுக்கு மிக நெருக்கமான வைகோவின் மதிமுக, சீமானின் நாம் தமிழர் இயக்கம் பற்றி உங்கள் கருத்துகள்..

வேல்முருகன்:
இருவருமே தமிழர்களின் நலன் சார்ந்த போராளிகள், ஈழத்தமிழர்களின் நலனுக்காக போராடுகின்றனர். சீமானுடன் தோழமையான நட்பும் உள்ளது.

கேள்வி:
தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் பெரும்பாலும் நீங்கள் வைகோ, சீமான் ஆகியோருடன் இணைந்தே நிற்கிறீர்கள். நீங்கள் மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்கலாமே?

வேல்முருகன்:
தமிழர்களின் உரிமைக்காகப் போராடக்கூடிய பழ.நெடுமாறன், மதிமுக, நாம் தமிழர் கட்சியின் சீமான், கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், தியாகு உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணையச் செய்யவேண்டும். ஓர் அணியில் இணைக்கவேண்டும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விருப்பம். இன்றைய சூழ்நிலையில் அது முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில், திமுக, அதிமுக அல்லாத, காங்கிரஸ் பாஜக அல்லாத சுயமரியாதை உள்ள மூன்றாவது அணியாக அது அமையும். வருங்காலத்தில் அது சாத்தியப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Read more...

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்பு

புதன், 12 பிப்ரவரி, 2014

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் இல்ல திருமண விழாவிவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் 11.02.2014 அன்று நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.


Read more...

உளுந்தூர்பேட்டை அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா  10.02.2014 (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று கொடி ஏற்றினார். கொடியேற்று விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், விழுப்புரம் மாவட்ட தெற்கு செயலாளர் உளுந்தூர்பேட்டை ஞா.ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.




Read more...

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் (கிழக்கு) ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

திங்கள், 10 பிப்ரவரி, 2014

கடலூர் மாவட்டம் பண்ருட்டி (வடக்கு) அண்ணாகிராமம் (கிழக்கு) ஒன்றியத்தில் வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று விழா நேற்று 09.02.2014 (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் பங்கேற்று கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மாநில துணைத் தலைவர் சக்திவேல், தமிழர் படை ஜோதிலிங்கம், மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலாளர் ராஜமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை :

தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞர்களுக்காக தொடங்கப்பட்டது. இளைஞர்கள் நலன் மற்றும் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இன்றைக்கு தமிழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் உறுப்பினராக கொண்ட கட்சியாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி திகழ்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியில் இடம்பெறுவோம். தமிழர் நலனில் அதிக அக்கறை உள்ளவர்களுடன்தான் கூட்டணி சேரவேண்டும் என்பதற்காக ரொம்பவும் யோசித்து கொண்டிருக்கிறோம். விரைவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக மக்கள் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை வழங்க வேண்டும்.




Read more...

அரியலூர் மாவட்ட இளம்புயல் பாசறை சார்பில் மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்

அரியலூர் மாவட்ட இளம்புயல் பாசறை சார்பில் மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் நேற்று 09.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) ரத்ததான முகாம் நடைபெற்றது. இரத்ததான முகாமில் அரியலூர் மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளர் மீன்சுருட்டி க.சிட்டிராஜா தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாணவரணி தலைவர் ரவிபிரகாஷ், மாநில துணைப் பொது செயலாளர் கருப்பு சரவணன், அரியலூர் மாவட்ட செயலாளர் வே.சாமிநாதன், குமராட்சி தமிழ்வாணன், அண்ணா பகுத்தறிவு உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ரத்ததான முகாமில் அரியலூர், கடலூர், நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.













Read more...

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம், கெங்கைகொண்டான் பேரூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம், கெங்கைகொண்டான் பேரூர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டம் எலுமிச்சை கிராமத்தில் நடந்தது.

ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக் குழுத் தலைவர் தி.திருமாவளவன், மாநில தமிழர் படை தளபதிகள் அறிவழகன், முருகன், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், சிவலோகநாதன் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சண்முகம் வரவேற்றார். கெங்கைகொண்டான் பேரூர் தலைவர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் பங்கேற்றனர். இறுதியாக ஊராட்சி செயலாளர் வினோத்குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:

1. சேலத்தில் 23.02.2014 அன்று நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாட்டிற்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் பங்கேற்பது..

2. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம், கடலூர் தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது.

3. குண்டும் குழியுமாகியுள்ள விருத்தாசலம் - வடலூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more...

சேலத்தில் நடைபெறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில மாநாட்டில் கடலூர் மாவட்டத்தின் சார்பில் பெரும் திரளாக கலந்து கொள்ள முடிவு

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

 

கம்மாபுரம்:

வருகிற 23-ந்தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் கடலூர் மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழுக் கூட்டம்

கம்மாபுரம் ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் ஊ.மங்கலம் எலுமிச்சை கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், சிவலோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாகக்குழு தலைவர் தி.திருமால்வளவன் கலந்து கொண்டு பேசினார். இதில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து கடலூர், சிதம்பரம் தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவது, வருகிற 23-ந் தேதி சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தனி வாரியம்

சாலை விபத்துக்கள் அதிகமாக நடப்பதை தடுக்கும் வகையில் அரசே ஓட்டுநர்களுக்கு பயிற்சியளித்து சான்றிதழ் வழங்க வேண்டும். ஓட்டுநர்களின் வாழ்வுரிமையை மேம்படுத்த தனி வாரியம் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில தழிழர் படை தளபதிகள் அறிவழகன், முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், வாழைச்செல்வம், கெங்கைகொண்டான் பேரூர் தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் வினோத்குமார் நன்றி கூறினார்.
 

Read more...

Thamizhaga Vazhvurimai Katchi (TVK) is likely to support AIADMK in the upcoming 2014 Lok Sabha elections

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

Thamizhaga Vazhvurimai Katchi (TVK) is likely to support AIADMK in the upcoming Lok Sabha elections, party sources said on Thursday, adding, that TVK founder Velmurugan is expected to announce his decision on the alliance at the party’s conference scheduled to take place in Salem on February 23.

“Our leader has been continuously criticising the DMK for supporting the Congress government at the Centre which had helped the Sri Lankan government during the Eelam war in which thousands of Tamils were killed. How can we join the DMK alliance then?” a TVK functionary said. The upcoming general elections would be the first for the party since its launch in 2012.


Read more...

Tamizhaga Vaazhvurimai Katchi (TVK) May Support AIADMK in 2014 Lok Sabha Polls

Thamizhaga Vazhvurimai Katchi (TVK) is likely to support AIADMK in the upcoming Lok Sabha elections, party sources said on Thursday. TVK founder Velmurugan is expected to officially announce his decision on the alliance at the party’s conference scheduled to take place in Salem on February 23
 
Speaking to Express, a TVK functionary said, “Though DMK leaders like M R K Panneer Selvam have been trying to woo our party for an alliance, our leader may extend support to the AIADMK in the Parliamentary election. Our leader cannot join hands with the DMK for two reasons.”

Explaining the reasons, the functionary said, “The Congress party has been trying for an alliance with the DMK. If this happens, our party cannot support the DMK. Secondly, our leader has been continuously criticising the DMK for the last few years for supporting the Congress government at the Centre which had helped the Sri Lankan government during Eelam war in which thousands of Tamils were killed. How can we join the DMK alliance then?”

According to a TVK cadre here, Velmurugan would not support any alliance of which Congress and PMK were a part. “Now Congress is moving towards the DMK and the PMK is in alliance with the BJP. So, our leader may support the AIADMK in the elections,” he said.

“Our leader is the correct person to counter PMK founder Ramadoss’ election campaign. Velmurugan can also explain to the people Ramadoss’ betrayal of the Vanniyar community. He will also be able to dent PMK votebank in some constituencies in northern districts,” another party leader said.

The upcoming general elections would be the first for TVK since the party was launched in 2012.



Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மூன்றாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யும் பணி தீவிரம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 23.02.2014 அன்று சேலத்தில் நடைபெறும் மூன்றாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் சுவர் விளம்பரம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.




Read more...

விழுப்புரம் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 04.02.2014 அன்று நடைபெற்றது

புதன், 5 பிப்ரவரி, 2014

விழுப்புரம் மாவட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (04.02.2014) நடைபெற்றது . இதில் 23.02.2014 அன்று சேலத்தில் நடைபெறும் மூன்றாமாண்டு தொடக்கவிழா மாநாடு குறித்து ஆலோசனை செய்யபட்டது.

கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலை செயலாளர் கனல்.உ.கண்ணண் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாநில துணை பொதுச் செயலாளர் வா.ச.சுரேஷ்குமார், விழுப்புரம் தெற்கு மாவட்டம் செயலாளர் ஞா.ராஜேஷ், மாநில தமிழர் படைதளபதி கி.ஜோதிலிங்கம், கள்ளக்குறிச்சி மாவட்டம் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஷ், ராம்பிரகாஷ், கா.கோபி, வீ.மோகன், ஆனந்தன், இளவரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.


Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருந்தரங்கு வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெற்றது

திங்கள், 3 பிப்ரவரி, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள நண்பர்கள் சந்திப்பு மற்றும் கருந்தரங்கு நேற்று 02.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) வடலூர் ஜெயப்பிரியா ஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய திரு.ராஜதாண்டவன் (மாநில மதியுரைக் குழு உறுப்பினர்), திரு.கொற்றவமூர்த்தி (மாநில அமைப்பு செயலாளர்), திரு.வி.கே.குமரகுரு (மாநில விவசாய அணி அமைப்பாளர்), திரு.பாலகுருசாமி (மாநில மதியுரைக் குழு உறுப்பினர்), திரு.உ.கண்ணன் (தலைமை நிலைய செயலாளர்), திரு.ரவிப்பிரகாஷ் மாநில மாணவ
ரணி தலைவர்), திரு.கருப்பு சரவணன் (மாநில துணை பொது செயலாளர்) மற்றும் கடலூர், அரியலூர், நாகை, கோவை, புதுச்சேரி, சென்னையிலிருந்து வந்து கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இணையதள செயல்பாடுகள் பற்றியும், இணையதளத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். 


 

Read more...

பென்னாகரம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா மாநாடு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம்

சேலத்தில் 23.02.2014 அன்று நடைபெற உள்ளது. இதற்காக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நேற்று (02.02.2014) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தவமணி, மாவட்ட செயலாளர் முனி ரத்தினம், குமரவேல் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு மாநாடு தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

Read more...

புதுவை மாநிலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

புதுவை மாநிலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் நியமன ஆணையை அளித்தார்.
















Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP