Blogger இயக்குவது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி துணை பொதுச் செயலாளர் சுமதி விஸ்வநாதன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார்

வியாழன், 26 ஜூன், 2014

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி துணை பொதுச்  செயலாளர் சுமதி விஸ்வநாதன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் வெற்றிலை சண்முகம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுப்பரமணியம் ஆகியோர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொது செயலாளர் வை.காவேரி, அமைப்பு செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் 25.06.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். அவர்களில் சுமதி விஸ்வநாதன் நாமக்கல் மாவட்ட அமைப்பாளராகவும், வெற்றிலை சண்முகம் கரூர் மாவட்ட தலைவராகவும் நியமனம் செய்யபட்டனர்.
 



 

Read more...

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களிடம் கோரிக்கை மனு

செவ்வாய், 24 ஜூன், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் திங்கட்கிழமை (23.06.2014) அன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் சார்பில் சத்யராஜ், ஜவகர், தாமோதரன், செந்தில், பிரதீப்குமார் உள்ளிட்டோர் அளித்த மனு விபரம்:


பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், முழுநேர பணி வழங்கவும், பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், தங்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.

Read more...

மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தர தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:


1. மத்தியில் ஆட்சி பொறப்பேற்றுள்ள பாஜக விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துதர வேண்டும்.

2. திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. முசிறி குளித்தலை பெரியார் பாலத்தில் மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தவறும் பட்சத்தில் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நகர அமைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார்.

Read more...

இஸ்லாமிய ஜனநாயக கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணையும் விழா

திங்கள், 23 ஜூன், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் முன்னிலையில் இஸ்லாமிய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் விழா 21.06.2014 (சனிக்கிழமை) அன்று திருவல்லிக்கேணி அல்மாலிக் மஹாலில் நடைபெற்றது. இணைப்பு விழாவில் இஸ்லாமிய ஜனநாயக கட்சி தலைவர் அக்ரம்கான், இளைஞர் அணி தலைவர் தன்வீர் அகமது உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

Read more...

இலங்கை முஸ்லிம்கள் மீது தாக்குதலை தடுக்கவேண்டும் என தர்மபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சனி, 21 ஜூன், 2014

இலங்கை முஸ்லிம்கள் மீது தாக்குதலை தடுக்கவேண்டும் என தர்மபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


Read more...

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சிங்கள அரசை கடுமையாக கண்டிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வியாழன், 19 ஜூன், 2014


இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சிங்கள அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தி. வேல்முருகன் 18.06.2014 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு இனப்படுகொலை செய்துள்ளது. இந்த பெருந்துயரத்துக்கு நீதி கிடைக்க தமிழ்ச் சமூகம் அத்தனை வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்கள் படுகொலை - மத்திய அரசு தலையிட தி.வேல்முருகன் கோரிக்கை இந்த நிலையில் மற்றும் ஒரு பேரிடியாக தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து சிங்களப் பேரினவாத காடையர்கள் கொடுந்தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

இலங்கையின் அளுத்கம, பேருவளை பகுதிகளில் பவுத்த பிக்குகளின் கட்சியான பொதுபல சேனாவினர் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசி தமிழ் பேசும் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். முஸ்லிம்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் சூறையாடப்பட இலங்கை அரசும் அதன் படைகளும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் உறவுகள் படுகாயமடைந்துள்ளதுடன் தங்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டும் இருக்கின்றனர். 2009ஆம் ஆண்டு தமிழின அழிப்புக்கு எப்படி 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் அடிப்படையாக இருந்ததோ அதைப் போன்ற ஒரு நிலைமை இப்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களை வேட்டையாடியதைப் போலவே தமிழ் பேசும் முஸ்லிம் உறவுகளை வேட்டையாட சிங்களம் தீர்மானித்துவிட்டது என்பதையே அளுத்கம படுகொலைகள் வெளிப்படுத்துகின்றன. இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த படுகொலை சம்பவங்களுக்கு உலக நாடுகள் துடிதுடித்து கண்டனம் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் கனடாவும் கண்ணீர்விடுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் காட்டமாக ராஜபக்சே அரசை எச்சரிக்கிறது. ஆனால் நமது தாய்நாடான இந்தியாவோ கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை எந்த ஒரு கண்டனத்தையுமே பதிவு செய்யாமல் இருக்கிறது இந்திய அரசு. எங்கோ ஈராக்கில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிற இந்திய அரசால், இந்த நாட்டின் தொப்புள் கொடி உறவுகள் கொத்து கொத்தாக கொல்லப்படுவது பற்றி கவலைப்பட முடியாமல் இருப்பது வேதனை தருகிறது.

இலங்கையில் சிறுபான்மை மக்களை வேரோடு வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு பொதுபல சேனா போன்ற இனவெறி அமைப்புகளை இனப்படுகொலையாளன் ராஜபக்சே தூண்டி விடுகிறான். இதை இந்தியா தொடர்ந்தும் அனுமதிக்கக் கூடாது; அமைதியாகவும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது. இந்திய அரசு உடனே இதில் தலையிட்டு, இனப்படுகொலையாளன் ராஜபக்சே அரசுக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்து தமிழ் பேசும் அத்தனை மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கண்டிப்புடன் கூற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

அத்துடன் இதுநாள் வரை ஏதோ ஏதோ காரணங்களால் பிரிந்து கிடந்த இலங்கை வாழ் தமிழ் பேசும் உறவுகள் அனைத்தும் இனியேனும் நமது கரங்களை கைகோர்த்து சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக, தமிழர் தம் அரசியல் விடுதலையை வென்றெடுக்க, சுதந்திரத் தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அன்புடன் வேண்டுகிறது.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான தமிழக வாழ்வுரிமை சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா கடலூரில் நடைபெற்றது

புதன், 4 ஜூன், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான தமிழக வாழ்வுரிமை சங்க கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா கடலூரில் 03.06.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூர் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு சங்க மண்டல பொதுச்செயலர் தணிகாசலம் தலைமை வகித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று சங்கக் கொடியேற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்தார்.

விழாவில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பேசியது:

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களை அரசுத்துறை ஊழியர்களாக மாற்ற வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகமானது அரசு சார்ந்த, மக்கள் சார்ந்த நிறுவனமாக மக்களுக்காக பணியாற்றுவதால் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும்.

விழாவில் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சைதை சிவராமன், பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, நகரச் செயலாளர் ஆனந்த், மாநில மாணவரணிச் செயலாளர் அருள்பாபு, மாவட்ட மகளிரணிச் செயலாளர் அமராவதி, இளைஞரணிச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP