Blogger இயக்குவது.

2015ஆம் ஆண்டு தமிழர் வாழ்வு உரிமைகள் மீட்கப்பட்டு ஏற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக திகழ வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி

புதன், 31 டிசம்பர், 2014

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தமிழர் வாழ்வுரிமைகளை வென்றிட உறுதியேற்போம்!

2014ஆம் ஆண்டு நிறைவடைந்து 2015ஆம் ஆண்டு உதயமாகிறது. இந்த புதிய ஆண்டில் அனைத்து தமிழ் மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த அன்பு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத் தமிழர் இனம் ஆண்டாண்டு காலமாக தம்முடைய உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. தமிழினம் இன்னமும் தமக்கு உரித்தான வாழ்வுரிமையையும் சுதந்திரத்தையும் முற்று முழுதாக மீட்டெடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிடவில்லை.

உதயமாகும் 2015ஆம் ஆண்டிலும் நமக்கான போராட்டங்களும் போர்க்களங்களும் காத்துக் கிடக்கின்றன.. இந்த புதிய ஆண்டில் தமிழினம் எதிர்கொண்டிருக்கும் அனைத்து வாழ்வுரிமைப் பிரச்சனைகளிலும் முழுமையாக வெற்றி காண அயராது போராடுவோம் என்பதையே இந்த புத்தாண்டு நாள் உறுதிமொழியாகக் கொள்வோம்.

தமிழகத்தின் உரிமை சார்ந்த அனைத்துப் போராட்டங்களிலும் ஜாதி, மத, கட்சி மாச்சரிய எல்லைகளைக் கடந்து ஓரணியில் தமிழராய் அணிதிரள்வோம் எனவும் உறுதி கொள்வோம்.

தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில் இருந்து ஈழத் தமிழர்கள் முழுமையாக விடுதலை பெறுவதற்கான அரசியல் நகர்வுகளை சர்வதேச அரங்கில் முனைப்புடன் தொடர்வோம் என்றும் இந்த புதிய ஆண்டில் உறுதி ஏற்போம்.

தமிழர் வாழ்வு உரிமைகள் மீட்கப்பட்டு ஏற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக திகழ வேண்டும் என இந்தப் புதிய ஆண்டில் என் அன்புநல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழகத்தின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க தமிழ்ப் புத்தாண்டு தைத் திருநாளில் சபதமேற்போம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைத் திருநாள் வாழ்த்து

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைத் திருநாள் வாழ்த்துச் செய்தி:

தமிழகத்தின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க
தமிழ்ப் புத்தாண்டு தைத் திருநாளில் சபதமேற்போம்!!

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த தமிழர் திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தைத் திருநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில் தமிழகத்தின் மீது படையெடுத்திருக்கும் கூடங்குளம் அணு உலை, மீத்தேன் திட்டம், நியூட்ரினோ உள்ளிட்ட அனைத்து நாசகார திட்டங்களையும் விரட்டியடிப்போம் என்று உறுதியேற்போம்.

தமிழகத்தின் நான்கு முனைகளிலும் பிற மாநிலங்களால் நமது வாழ்வுரிமைகள் காவு கொள்ளப்பட்டும் கபளீகரம் செய்யப்பட்டும் கொண்டிருக்கிற சூழல்தான் இப்போது உள்ளது. இந்த பேராபத்தான சூழலை முறியடித்து தமிழ்நாட்டின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க இன்றைய திருநாளில் சபதமேற்போம்.

இலங்கையில் ஈழத் தமிழர் வாக்குகளால் அமையப்பெற்ற புதிய அதிபர் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையிலாவது தமிழ்நாட்டு மீனவ சொந்தங்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நாம் உறுதியேற்போம்.

மத்தியில் அமைந்துள்ள இந்தியப் பேரரசோ முன்னெப்போதும் இல்லாத வகையில் சமஸ்கிருத திணிப்பு, இந்தித் திணிப்பு, இந்துத்துவா திணிப்பு என மிகவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதர்களை வேட்டையாடும் இந்த இந்துத்துவா கும்பலின் முயற்சிகளை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தி தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டு மண் இதுவென நிரூபிப்போம்!

தமிழ்நாட்டின் அனைத்து வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் ஜாதி, மத, கட்சி எல்லைகளைத் தாண்டி அனைத்து ஜனநாயக சக்திகளுடம் கடந்த காலங்களைப் போல தமிழர்களாக ஓரணியில் ஒன்று திரண்டு நம் வாழ்வுரிமகளை மீட்க இப்புத்தாண்டு நன்னாளில் சபதமேற்போம்.

அனைத்து தமிழக மக்களுக்கும் என்னுடைய தமிழ்ப் புத்தாண்டு- தைத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

கொடுங்கோலன் ராஜபக்சேவை ஆதரித்து இந்தி திரை நட்சத்திரங்கள் நடிகர் சல்மான்கான், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரசாரத்துக்கு செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 31.12.2014 வெளியிட்ட அறிக்கை:
 
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்தி திரை நட்சத்திரங்கள் பிரசாரத்துக்கு கடும் கண்டனம்! தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம்- எச்சரிக்கை!!

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவக் காத்திருக்கும் கொடுங்கோலன் ராஜபக்சேவை ஆதரித்து இந்தி திரைப்படல உலகத்தைச் சேர்ந்த நடிகர் சல்மான்கான், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இலங்கையில் பிரசாரம் செய்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தோல்வியின் விளம்பில் நின்று கொண்டு, ஈழத் தமிழ் மக்களிடத்தில் 'நடந்ததை மறந்துவிடுங்கள்' என்று கெஞ்சிக் கொண்டு வாக்கு பிச்சை கேட்டு வருகிறான் ராஜபக்சே.

இலங்கை அதிபர் தேர்தலில் எப்படியும் தோற்றுவிடுவோம்; தன்னை போர்க்குற்றவாளி கூண்டிலே சர்வதேச சமூகம் நிறுத்திவிடும் என்று பகிரங்கமாக புலம்பியும் வருகிறான்..

இத்தகைய ஒருவனுக்காக இந்தி பட உலகத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்துள்ளது மிகக் கடுமையாகவும் வன்மையாகவும் கண்டிக்கத்தக்கது.

உலக நாடுகளில் 'இந்தியன்' ஒருவன் பாதிக்கப்பட்டால் உடனே கொந்தளிக்கிற இந்திய உலகமும் இந்தி திரைப்பட உலகும் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது கை கட்டி வாய்மூடி மவுனம் காத்து இனப்படுகொலையை ஆதரித்தன.

700க்கும் மேற்பட்ட சொந்த நாட்டு குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்கள் துடி துடிக்க சுட்டுக் கொல்லப்படுகிற போதும் வாய் திறக்காமல்தான் இருக்கின்றன. இந்த வேதனையும் படுகாயமும் தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழினப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஆதரித்து இலங்கைக்கே போய் இந்தி பட உலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பிரசாரம் செய்திருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும். ஏழரை கோடித் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் ஒரு அங்கமா? அல்லது தமிழினத்தை ஒடுக்குகிற இலங்கைத் தீவில் வாழுகிற சிங்களதேசம்தான் இந்தியாவின் ஒரு அங்கமா?

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். எங்கள் தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானத்தை புறந்தள்ளிவிட்டு மீறிவிட்டு இலங்கைக்குப் போய் கொடியவன் ராஜபக்சேவுக்கு பிரசாரம் செய்திருப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று. வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தி திரை உலகத்தின் இந்த தமிழினத் துரோகம் தொடர்ந்தும் நீடிக்குமேயானால் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இந்தித் திரைப்படங்களுக்கு போராளிக் குழுக்கள் பன்னெடுங்காலம் தடை விதித்திருப்பது போல தமிழ்நாட்டிலும் எந்த ஒரு இந்தித் திரைப்படத்தையும் எந்த ஒரு காலத்திலும் திரையிடவிடமாட்டோம். எந்த ஒரு இந்தி நடிகரையும் நடிகையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவும் விடமாட்டோம்.. என பகிரங்கமாக எச்சரிக்கிறோம்.

இதனால் இந்திப் பட உலகத்தவர், கொடுங்கோலன் ராஜபக்சேவை ஆதரித்து பிரசாரம் செய்வது போன்ற நடவடிக்கைகளை இனியும் மேற்கொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். தமிழ்த் திரை உலகத்தினரும் தமிழினத்தின் உணர்வுகளை இந்தி பட உலகத்தினருக்கு தெரியப்படுத்தி இத்தகைய தமிழினத் துரோகச் செயல்களில் எவர் ஒருவரும் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகளை நி்றைவேற்றி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகளை நி்றைவேற்றி அவர்களது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்களின் சிரமத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 28.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கும் துன்பத்துக்கும் உள்ளாகியிருப்பது வருத்தம் அளிக்கிறது.

ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உட்பட 22 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது.

சென்னையில் தொழிலாளர் நல சிறப்பு துணை ஆணையர் யாஸ்பின் பேகம் தலைமையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதில் 240 நாட்கள் பணி புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் சனிக்கிழமையன்றும் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் திட்டமிட்டபடி டிசம்பர் 29-ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இருப்பினும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் மனம் கொந்தளித்துப் போன போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென முன்கூட்டியே தமிழ்நாடு முழுவதும் இன்று முதலே வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அரசுத் துறை மற்றும் கல்லூரித் தகுதித் தேர்வுகள் எழுத செல்ல முடியாமல் பலரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாகும். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனே கனிவுடன் ஏற்று இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் மாண்புமிகு போகுவரத்து துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

உலகம் முழுவதும் வாழும் கிறித்துவ சமுதாய உறவுகள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கிறித்துமஸ் திருநாள் வாழ்த்துகள்

வெள்ளி, 26 டிசம்பர், 2014

உலகம் முழுவதும் வாழும் கிறித்துவ சமுதாய உறவுகள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கிறித்துமஸ் திருநாள் வாழ்த்துகளை  தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன்வெளியிட்டுள்ள  கிறித்துமஸ் திருநாள் வாழ்த்து செய்தி:

கிறித்துமஸ் திருநாள் வாழ்த்துகள்

உலகம் முழுவதும் வாழும் கிறித்துவ சமுதாய உறவுகள் அனைவருக்கும் எனது கிறித்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகெங்கும் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் மக்கள் தங்களது வாழ்வுரிமைக்கான அர்ப்பணிப்புமிக்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்பதை கிறித்துமஸ் திருநாள் உறுதிமொழியாக ஏற்போம்.

யேசு பிரான் போதித்த அன்பு, கனிவை கொள்கையாகக் கொண்டிருக்கும் கிறித்துவ உறவுகளில் பலர் ஆண்டுக்கு ஒருமுறை வரும் இந்தத் திருநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட இயலாத நிலையில் மீன்பிடிக்கப் போன நிலையில் பல்வேறு நாட்டு சிறைகளில் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.. தங்களது சந்ததி மட்டுமல்ல.. தமிழ்நாடே அழிந்துபோகும் என்று கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு முகாம்களில் உள்ள தமிழர்களும் தங்களது இருள் சூழ்ந்த வாழ்க்கை அகன்று சுதந்திரத்துக்காக ஏங்கி நிற்கின்றனர். இந்திய மண்ணில் சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிற இந்துத்வா சக்திகள் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய அபாயங்களை அச்சுறுத்தல்களை ஜாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழர்களாய், மனிதர்களாய் நின்று எதிர்கொள்வோம்! மனித நேயத்தையும் சுதந்திரமான வாழ்வையும் ஏற்படுத்துவோம் என இந்தத் திருநாளில் கிறித்துவ பெருமக்களுடன் இணைந்து நாமும் உறுதியேற்போம்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் இரங்கல்

புதன், 24 டிசம்பர், 2014

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் இரங்கல்   தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழ்த் திரை உலக மேதை இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

தமிழ்த் திரை உலகத்துக்கு ஏராளமான கலைஞர்களை அறிமுகம் செய்தவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர். மனித உறவுகள், சமூக பிரச்சனைகளை தமது படத்தில் அழகாக வெளிப்படுத்திய திரை உலக மேதை பாலசந்தர்.

இயக்குநராக, திரைவசன கர்த்தாவாக, தயாரிப்பாளராக திரை உலகில் தம் பன்முகங்களை வெளிப்படுத்திய பாலசந்தரின் மறைவு தமிழ்த் திரை உலகத்துக்கு பேரிழப்புதான்.

இன்று நம்மைவிட்டு இயக்குநர் கே.பாலசந்தர் பிரிந்திருந்தாலும் அவரது புகழ் என்றென்றும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும்.

திரை உலகில் சிகரத்தை தொட்ட இயக்குநர் கே.பாலசந்தரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் தமிழ்த் திரை உலகத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

தமிழக அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்காமல் ரூ.500 கோடி பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு 23.12.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடக்க இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

திங்கள், 22 டிசம்பர், 2014

தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு நாளை டிச.23-ல் நடைபெற இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு! போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்!!

தமிழக அரசு நிர்ணயித்த தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்காமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு டிசம்பர் 23-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்களின் தந்தையார் திரு தங்க. திருநாவுக்கரசு அவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு இயற்கை எய்தினார்.

இதனால் நாளை செவ்வாய்க்கிழமையன்று 'தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு" நடைபெற இருந்த "முற்றுகைப் போராட்டம்" தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

- தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தலைமை நிலையம்,
சென்னை.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தந்தை மரணம்: செல்வி ஜெ.ஜெயலலிதா இரங்கல்

 
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தந்தை மரணம்: முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புச் சகோதரர் வேல்முருகனின் தந்தை திருநாவுக்கரசு உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். அன்புத் தந்தையை இழந்து வாடும் வேல்முருகன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் அவர்களின் தந்தை திரு. தங்க.திருநாவுக்கரசு அவர்கள் 21.12.2014 அன்று இயற்கை எய்தினாா்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி்.வேல்முருகன் அவர்களின் தந்தை திரு. தங்க.திருநாவுக்கரசு அவர்கள் 21.12.2014 அன்று இயற்கை எய்தினாா்.
 
     

Read more...

முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்!

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு கண்டனம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மறைமலை நகரில் சனிக்கிழமையன்று (டிசம்பர் 20) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, முல்லைப் பெரியாறு அணை, மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு தீர்வு கண்டுவிட்டது என்றும் பாஜகவின் தலைமையகம் மீனவர்களின் சரணாலயமாக மாறிவிட்டது என்றும் உண்மைக்கு மாறாக அப்பட்டமாக பொய் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் 142 அடி நீரும் தேக்கப்பட்டது. இதில் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசுக்கு ஒருதுளி பங்கும் கிடையாது.

தமிழ்நாட்டு அரசாங்கம் சட்டப் போராட்டத்தை நடத்தி நியாயத்தையும் தமிழரின் ஆற்று நீர் உரிமையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அப்படிப் பெற்ற உரிமைக்கும் வேட்டு வைத்ததுதான் பாரதிய ஜனதாவின் மோடி அரசு.

முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்று சுற்றுச் சூழல் குறித்து ஆராய அனுமதி கொடுத்த துரோகத்தைத்தான் பாரதிய ஜனதாவின் மோடி அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு பச்சைத் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.

மீனவர் பிரச்சனைக்கு என்ன தீர்வு கண்டுவிட்டதாம் மோடி அரசு? இலங்கை சிறையில் இன்னமும் 66 மீனவர்கள் வாடுகின்றனர்.. மீனவர்களின் வாழ்வாதாரமான 88 படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்படுவதற்கும் கூட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமிதான் காரணம் அல்லவா? அந்த துரோகி சுப்பிரமணியன் சுவாமி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததை இந்த உலகமே கண்டு அதிர்ச்சி அடைந்ததே!

அவ்வளவு ஏன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வங்கதேசத்து கடற்படையாலும் இந்தியப் பெருங்கடலில் இங்கிலாந்து கடற்படையாலும் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்களே? இதுவரை பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராக அங்கம் வகிக்கும் மோடி அரசு வாய்மூடி மவுனியாகத்தானே இருக்கிறது?

முல்லைப் பெரியாறு அணையில் துரோகம்.. மீனவர் பிரச்சனையில் வாய்மூடி கள்ள மவுனம்... இத்தோடு முடிந்ததா மோடி அரசின் பச்சை துரோகம்..

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான ஒழுங்குமுறை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமே வலியுறுத்தி வருகிறது.. 6 மாத கால மோடி அரசு இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லையே..

காவிரி ஆற்றின் குறுக்கே 4 புதிய தடுப்பணைகளைக் கட்டப் போவதாக கர்நாடகா கொக்கரிக்கிறதே.. குட்டி வைக்கக் கூட திராணியற்ற தமிழரை வஞ்சிக்கும் வஞ்சக அரசுதானே மோடி அரசு!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பரப்புரையின் போது மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்று கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களே!

இப்படி துரோகத்தையும் வஞ்சகத்தையும் தொடர்ந்து இழைத்துவிட்டு அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டோம் என்று பேசினால் தமிழ்நாட்டு மக்கள் நம்பிவிடுவார்களா?

ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுடன் கொஞ்சி குலாவிய ஒற்றை காரணத்துக்காகவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கருவறுக்கப்பட்டுவிட்டது.. அதே நிலைப்பாட்டைத்தான் ஈழத் தமிழர் பிரச்சனையிலும் பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு கடைபிடித்து வருகிறது..

முந்தைய காங்கிரஸ் அரசைவிட மிகக் கொடுமையாக ராஜபக்சேவின் இந்திய பிரதிநிதியாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டுக் கொண்டிருப்பதை தமிழினம் நன்கறியும்.. நாள்தோறும் துரோகி சுப்பிரமணியன் சுவாமியும் அதையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

ஆகையால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த கதியை விட மிக மோசமான நிலைமையைத்தான் பாரதிய ஜனதா சந்திக்கும்.. இத்தகைய பிரசாரங்களைக் கைவிட்டுவிட்டு மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நீங்கள் தமிழ்நாட்டு உரிமைகளை வஞ்சிக்க துணைபோகாமல் இருந்தால்போதும்  இல்லையெனில் காலம் தக்க பாடம் புகட்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

 தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை

சனி, 20 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 221 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர் உறவுகளை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதரமான 81 படகுகளையும் சிங்களக் கடற்படை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து துன்புறுத்துவதும் சிறையில் அடைப்பதும் நாளாந்த நடவடிக்கையாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து கடற்படையும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறைபிடிக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த செபா என்பவருக்குச் சொந்தமான ஆவேமரியா என்ற விசைப்படகு, ராஜன் என்பவரின் ஸீமேரி என்ற விசைப்படகு, சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த செல்வன் என்பவருக்குச் சொந்தமான அன்னை விசைப்படகு ஆகிய 3 விசைப்படகுகளில் அதே பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த நவம்பர் 17-ந் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகேயுள்ள பெட்டுவகாட் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த டிசம்பர் 9-ந் தேதியன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வங்கதேச கடலோர காவல்படையினர் 26 மீனவர்களையும் 3 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னதுரை பகுதியை சேர்ந்த டைடஸ் என்பவருக்கு சொந்தமான கரிஷ்மா என்ற மீன்பிடி படகில் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த நவம்பர் 20-ந் தேதியன்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்காக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றனர். கொச்சியில் இருந்து கிளம்பி இந்திய பெருங்கடலில் உள்ள இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியோ தீவு அருகே சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் படகுகள் திசை மாறி சென்ற நிலையில் கடந்த 5-ந் தேதியன்று இங்கிலாந்து கடற்படையினர் மீன்பிடி படகுடன் 14 மீனவர்களையும் சிறைப்பிடித்துச்சென்றனர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜான் சேவியர், ராமேஸ்வரத்தை சேர்ந்த துரை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரோஸ்லின் , பேபி, ஏ.ததேயூஸ்,கி.ததேயூஸ், விஜின், அல்போன்ஸ், டெனிஸ்டன், ஷிபு, வில்வராஜ் உள்ளிட்ட 14 பேர் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் கடந்த 15-ந் தேதியன்றும் 13 தமிழ்நாட்டு மீனவர்களை இங்கிலாந்து கடற்படை அதே கடற்பரப்பில் கைது செய்தது.

இந்த நிலையில் மீண்டும் 102 மீனவர்களை இங்கிலாந்து கடற்படை, இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியோ தீவு அருகே கைது செய்துள்ளது. கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27ந் தேதி கன்னியாகுமரி தூத்தூரை சேர்ந்த பீட்டர், டிக்டோசன், ஆன்டணி, ஸ்டீபன், சின்னத்துறையை சேர்ந்த சிலுவை ஆகியோருக்கு சொந்தமான 7 விசைப்படகுகளில் 102 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒருவர் கடலூரை சேர்ந்தவர். மற்ற அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்திய பெருங்கடலில் ஆழ்கடலில் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி 102 மீனவர்களையும் இங்கிலாந்து கடற்படை கைது செய்து, டியாகோ கார்சியோ தீவில் சிறை வைத்துள்ளனர்.

மொத்தமாக இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து கடற்படையால் கைது செய்யப்பட்டு 221 தமிழக மீனவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிறிஸ்துமஸ் பெருவிழா நெருங்கி வரும் நிலையில் 200க்கும் மேற்பட்ட மீனவர் உறவுகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியிலும் மீன்பிடித்தால் சிங்களக் கடற்படை சிறைபிடிக்கிறது! சர்வதேச கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டால் பன்னாட்டுக் கடற்படைகள் கைது செய்கின்ற நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலமே கேள்விகுறியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததாலேயே இத்தகைய வாழ்வா சாவா போராட்ட நிலைக்குத் தமிழ்நாட்டு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழ்நாட்டு மீனவர்களின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை.

இது தமிழ்நாட்டு பிரச்சனைதானே என்று வழக்கம் போல அலட்சியம் காட்டாமல் 221 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யவும் கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல்

விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள
இரங்கல் செய்தி:
 
விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தமது 79 வயது சென்னையில் காலமானார் என்ற செய்தி துயரமளிக்கிறது.

தமது இளம் வயதில் பத்திரிகைதுறையில் நுழைந்தவர் பெரியவர் எஸ்.பாலசுப்பிரமணியன். தமிழ் இலக்கிய உலகில் புதிய முயற்சியாக ஆனந்த விகடனில் முத்திரை கதைகள் திட்டத்தை உருவாக்கியவர்.

தந்தை எஸ்.எஸ். வாசன் வழியில் திரைப்படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர். திறமையாளர்களைத் தேடிக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் எண்ணம் கொண்டவராக திகழ்ந்தார். தமிழகம் கொண்டாடுகிற ஜெயகாந்தன், சுஜாதா போன்ற ஆளுமைகளின் படைப்புகள் இடம்பெறுவதற்கான களமாக ஆனந்த விகடனை உருவாக்கினார்.

1987-ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தொடர்பான நகைச்சுவை துணுக்கு வெளியானதற்காக சிறைபட நேர்ந்த போதும் தம் மீதான நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வென்று பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டியவர். பத்திரிகை சுதந்திரத்துக்கு முன்னோடி வழக்காக இன்றளவும் அவர் தொடர்ந்த வழக்கே இருந்தும் வருகிறது.

ஜூனியர் விகடன் போன்ற அரசியல் விமர்சன- புலனாய்வு இதழ்களை உருவாக்கி தமிழ் பத்திரிகை உலகத்துக்கு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். 1980களில் தமிழீழ விடுதலைப் போர் பற்றிய செய்திகளை வெளியிட்டு தமிழர் உள்ளங்களில் ஜூனியர் விகடனை நீங்கா இடம் பெறச் செய்தவர். இளம் தலைமுறையினர் பத்திரிகை துறையில் நுழைவதற்கான வாசலாக 'மாணவர் பத்திரிகையாளர்' திட்டத்தை உருவாக்கியவர்.

தமிழ் பத்திரிகை துறையின் ஜாம்பவானாக திகழ்ந்த "விகடன்" குழும தலைவர் பாலசுப்பிரமணியன் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

Tamizhaga Vazhvurimai Katchi would stage agitation in front of private sugar factories for not honouring their commitments to the farmers and allowing the arrears to mount to Rs 500 crore on December 23, 2014

வியாழன், 18 டிசம்பர், 2014

Founder of the Tamizhaga Vazhvurimai Katchi T. Velmurugan has lashed out at the private sugar factories for not honouring their commitments to the farmers and allowing the arrears to mount to Rs 500 crore in the current season.

Mr Velmurugan told The Hindu that these factories were not adhering to the government fixed price of Rs 2,650 for a tonne of sugarcane. Instead, they continued to pay just Rs 2,350 for a tonne of sugarcane, thus, withholding Rs 300.

On this differential score alone the sugar factories had built up arrears running into Rs 500 crore. Besides this, these factories were making undue delay in making the payment to the farmers even though there were stipulations that the monies should be cleared within 15 days of cane supply.

Mr Velmurugan pointed out that cane price in Tamil Nadu was the lowest in the country. The prices fixed by other States were as follows: Uttar Pradesh –Rs 3,200 a tonne, Punjab – Rs 3,020 a tonne and Haryana – Rs 3,100 a tonne, whereas in Tamil Nadu it is Rs 2,650 a tonne and even this was not paid.

Considering the rising cost including high wages to farm hands, the TVK had urged the Tamil Nadu government to provide a remunerative price of Rs 3,500 for a tonne for the year 2014 - 2015.

He further noted that having realised the plight of the sugarcane growers who, owing to paucity of funds, could not solemnise the marriages of their wards nor could not allow their wards to continue higher studies, the Centre had offered interest-free loan to the tune of Rs 6,000 crores to the sugar sector in the country.

The measure was aimed at supporting the sugar factories to clear the arrears and start the current crushing season on a clear slate. Instead, the sugar factories seemed to be diverting the funds for purposes other than fulfilling their obligations to the farmers.

Therefore, condemning such unhelpful attitude of the private sugar factories towards the farmers and their lack of concern for adhering to the government fixed price the TVK would stage agitation in front of those sugar factories on December 23, Mr Velmurugan added.

Read more...

தமிழக அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்காமல் ரூ.500 கோடி பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு 23.12.2014 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்

தமிழக அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்காமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்திருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு டிசம்பர் 23-ந் தேதி முற்றுகைப் போராட்டம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் இன்று 18.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள், தமிழக அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையை முழுமையாக விவசாயிகளுக்கு தராமல் ரூ500 கோடி அளவுக்கு பாக்கி வைத்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் கரும்புக்கான கொள்முதல் விலை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் டன் ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியானாவில் ரூ.3,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழகத்தில் 2013-14 ஆம் ஆண்டு ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ2,650 என்று மட்டும் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இந்த முழு தொகையையும் கூட தனியார் சர்க்கரை ஆலைகள் இன்னமும் வழங்கவில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ 2,650-ல் ரூ300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ 2,350தான் வழங்குகின்றன. இந்த வகையில் விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ500 கோடி.

கரும்பு அனுப்பிய 15 நாட்களுக்குள் முழுப் பணத்தையும் தர வேண்டும் என்பது தமிழக அரசின் ஆணை. இப்படி ஒரு ஆணை இருந்தும் இதையும் மதிக்காமல் மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் பணம் தராமல் இழுத்தடிப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

இப்படி வஞ்சித்து சம்பாதிக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயை வேறு தொழில்நிறுவனங்களில் முதலீடு செய்து கொண்டு விவசாயிகளுக்குத் துரோகம் செய்கின்ற தனியார் சர்க்கரை ஆலை அதிபர்கள் அவர்களுக்கென்று கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டு அரசையும் எதிர்க்கின்றனர்...விவசாயிகளுக்கும் துரோகம் செய்கின்றனர்.

அத்துடன் விவசாயிகளிடம் கொள்ளை அடிக்கும் இந்த தனியார் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசிடம் இருந்து ரூ 6ஆயிரம் கோடி அளவுக்கு வட்டியில்லா கடனைப் பெறுகின்றன. இந்த வட்டியில்லா கடன் என்பதே விவசாயிகளுக்கு நிலுவையில்லாமல் தொகை வழங்குவதற்காகத்தான். ஆனால் மத்திய அரசின் கடனையும் பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தராமல் தனியார் சர்க்கரை ஆலைகள் வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.

விவசாயிகளிடம் கொள்ளையடித்தும், அரசு நிர்ணயித்த தொகையையில் குறிப்பிட்ட தொகையைத் தந்துவிட்டு நிலுவைத் தொகையை ஆண்டுக் கணக்கில் தராமல் இழுத்தடித்தும் விவசாயிகளை தனியார் சர்க்கரை ஆலைகள் வஞ்சிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

தனியார் சர்க்கரை ஆலைகள் உரிய காலத்தில் தமிழக அரசு அறிவித்த தொகையில் எஞ்சிய நிலுவைத் தொகையை தராததால் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.

தற்போதும் கூட 2014-15 அரவை பருவத்துக்கு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டவில்லை. விவசாயிகள் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி வரும், விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ500 கோடி அளவு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம்.

எங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு 2013-14 ஆம் ஆண்டு வழங்க வேண்டிய தமிழக அரசு நிர்ணயித்த டன் ஒன்றுக்கு ரூ2,650 தொகையை முழுமையாக வழங்க வேண்டும்; 2014-15 ஆம் ஆண்டுக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ 3,500 என்று அறிவிக்க வேண்டும்- இத்தொகையை தமிழக அரசு ஆணைப்படி 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு முழுமையாகத் தர வேண்டும்; ஆலைகளுக்கு வரும் வெளிக் கரும்புகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும்; கரும்பு வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும்; தனியார் சக்கரை ஆலைகளில் அரசே அரசின் மேற்பார்வையில் கரும்புகளின் எடை போடும் இயந்திரத்தை நிறுவ வேண்டும்- கரும்பு லோடு ஆலைக்கு வந்த உடன் எடை வைத்து அறவைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் டிசம்பர் 23-ந் தேதியன்று மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாய தொழிற்சங்கள், விவசாய பெருங்குடிமக்கள், தொழிலாளர் தோழர்கள், தமிழின உணர்வாளர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு நமக்கான உரிமையை வென்றெடுப்போம் என்றும் அன்புடன் அழைக்கிறேன்.
 
தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
 

Read more...

பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலாளரும், வன்னியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஏ.ஜி. வெங்கடாசலம் தலைமையில் 50பேர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

பாமக மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலரும் தற்போதைய வன்னியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஏ.ஜி. வெங்கடாசலம் தலைமையில் ஈரோடு மாவட்ட பாமகவில் இருந்த டி.கே. மலைச்சாமி, எஸ்.கே. சண்முகம், பி.கே. பழனிச்சாமி, பி.ஜி. செங்கோட்டையன், ஐயந்துறை, பன்னீர்செல்வம், வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் 18.12.2014 அன்று  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகனை சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.




Read more...

பாகிஸ்தானில் தலிபான்களால் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 142 பேர் படுகொலை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம்

புதன், 17 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் இன்று 17.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
பாகிஸ்தானில் தலிபான்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 132 பிஞ்சு குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்துகிற பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்து ஈவிரக்கமற்ற வகையில் 132 பிஞ்சு குழந்தைகள் உட்பட 142 பேரை தலிபான்கள் படுகொலை செய்து வெறியாட்டம் போட்டுள்ள செயல் உலகை உலுக்கி நெஞ்சை பதற வைக்கிறது..

தேர்வு எழுதிக் கொண்டிருந்த பள்ளி குழந்தைகள், துப்பாக்கிகளோடு வந்த தலிபான்களைக் கண்டு அஞ்சி நடுங்கி மேஜைகளுக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பிய காட்சிகள் எண்ணிப் பார்க்கவே முடியாத ஒன்று.. எங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினைதான் இது என்றெல்லாம் இப்படிப்பட்ட கொடுஞ்செயலை தலிபான்கள் நியாயப்படுத்திக் கொண்டிருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கவே முடியாத ஒன்று. எந்த ஒன்றின் பெயராலும் எந்த ஒரு வன்முறை தாக்குதலையும் யாரும் ஆதரிக்கவோ நியாயப்படுத்திவிடவோ முடியாது. தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி வன்முறை வெறியாட்டங்களுக்கு ரத்த சாட்சியங்களாகிப் போன பெஷாவர் பிஞ்சுக் குழந்தைகளுக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.

தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் 14.12.2014  வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்டுவதற்காக
ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில் கேரளா புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்காக 35 ஆண்டுகாலம் பெரும் சட்டப்போராட்டத்தை நடத்தி தற்போதுதான் தமிழ்நாடு தனக்கான நீதியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் வயிற்றில் அடிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணை அருகேயே கேரளா மற்றொரு அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வாழ்வாதாரமே முல்லைப் பெரியாறு அணை. ஆனால் இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் புதிய அணை கட்டுவோம் என்று கேரளா அடாவடியாக அறிவித்தது. தற்போது கேரளா முன்வைத்த புதிய அணைக்கான் கோரிக்கையை ஏற்று ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வன உயிரின வாரிய நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது.

தற்போதைய அணை மிகவும் பலமாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் மத்திய அரசு கேரளாவின் கோரிக்கையை ஏற்று புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதி அளித்திருப்பது சட்டவிரோதமாகும்.

தமிழ்நாட்டு மக்களின் அத்தனை வாழ்வுரிமை பிரச்சனைகளிலும் கள்ள மவுனமாக இருப்பது அல்லது பச்சைத் துரோகம் இழைப்பது என்பதுதான் எந்த மத்திய அரசாக இருந்தாலும் கடைபிடிக்கிற கொள்கையாக இருக்கிறது. அதுவே தற்போதும் நீடிக்கிறது.

இந்தியப் பேரரசின் தொடரும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டத்தான் போகிறார்கள் என்பதை வரலாறு பார்க்கத்தான் போகிறது. கேரளாவின் அடிப்படையில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு அனுமதித்ததை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.. இல்லையெனில் மிகக் கடுமையான விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

பிரிகேடியர் பால்ராஜ் "சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் முதல் பிரதியை பெற்றார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான போராளியாக விளங்கிய பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைப் பற்றிய "பிரிகேடியர் பால்ராஜ் சமர்க்கள நாயகன்” நூல் வெளியீட்டு விழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் புதுச்சேரி பெரியார் திடலில் நடைபெற்றது.

ிராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன் தலைமை தாங்கினார். தந்தைபிரியன் வரவேற்றார். திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி நூலை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் பெற்றுக்கொண்டார். வீராசாமி, சிவானந்தம், விஜயசங்கர், சிவகாமி, சார்லஸ், விஜயன், அபிமன்னன், மூர்த்தி, அரிமாபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்பெழிலன் நன்றி கூறினார்.
 
 













Read more...

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம்

சனி, 13 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 13.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
கூடங்குளத்தை மனிதப் புதைகுழிகளாக்க சதி!

மேலும் 2 அணு உலைகள் அமைப்பதா? மத்திய மோடி அரசுக்கு கடும் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஷ்யா நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று டெல்லியில் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளை அமைப்பது தொடர்பானதும் ஒன்று.

தமிழ்நாட்டு மக்கள் கடந்த பல ஆண்டுகாலமாக கூடங்குளத்தில் அணு உலையே அமைக்கக் கூடாது; எங்களது வாழ்வாதாரமும் சந்ததியும் பூண்டோடு இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

வேறு எந்த ஒரு தேசத்திலுமே நடத்தாத மக்கள் திரள் பெரும் போராட்டத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறையும் தீரமுடன் எதிர்கொண்டு இன்னுயிரை ஈந்தும் இந்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்ட களத்தில் அந்தோணி ஜான், ராஜசேகர், ரோசலின், சகாயம் ஆகியோர் களப்பலியாகி இருக்கின்றனர். நாட்டின் விடுதலைப் போராட்டக் காலம் போல பல்லாயிரக்கணக்கானோர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் தொடரப்பட்டு ஒரு அசாதாரண் சூழ்நிலையிலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

கூடங்குளத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிற முதலாவது அணு உலையே முடங்கிக் கிடக்கிறது. இன்னமும் துளி மின்சாரமும் தயாரிக்கப்படாமல் ஏதோ அப்பாவி மக்களை எலிகளாக நினைத்து ஒரு சோதனைக் கூடம் போலத்தான் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகளையும் அமைக்க ஒப்பந்தம் போட்டுள்ள இந்திய பேரரசை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்துடன் இந்தியா முழுவதும் 10 அணு உலைகளை நிறுவவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

இந்திய மக்களின் உயிரோடும் வாழ்வாதாரத்தோடும் விளையாடுகிற மத்திய மோடி அரசே! இதுதான் நீங்கள் சொன்ன மாற்றத்துக்குரிய அரசா? இந்திய மண்ணில் எந்த ஒரு இடத்திலும் நாசகார அணு உலைகளை அமைப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எதிர்க்கும்.

கூடங்குளத்தை மனிதப் புதைகுழியாக்க இந்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வரும் இத்தகைய அணு உலைகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடும் மக்களோடு தோளோடு தோள் நின்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடும் . இத்தகைய மனிதகுலத்தை நிர்மூலமாக்குகிற அணு உலைத் திட்டங்களை நம்புகிற மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றை உடனே கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

தமிழக அரசு மின்கட்டணத்தை 15 விழுக்காடு அளவில் உயர்த்திருப்பதை திரும்ப பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை கோரிக்கை

வெள்ளி, 12 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 12.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு மின்கட்டணத்தை 15 விழுக்காடு அளவில் உயர்த்திருப்பது என்பது பொதுமக்களுக்கு மீண்டும் பெரும் சுமையாகும். அண்மையில்தான் பால்விலை மிக அதிக அளவு உயர்த்தப்பட்ட நிலையில் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பதை பொதுமக்களால் ஏற்கமுடியாத ஒன்றாகும்.

வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு தற்போதுள்ள கட்டணம் ரூ.2.60-ல் இருந்து ரூ.3 ஆகவும் 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.2.80-ல் இருந்து ரூ.3.25 ஆகவும், 201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.4.-ல் இருந்து ரூ.4.60 ஆகவும் 500 யூனிட்டுக்கு மேல் இரு மாதங்களுக்கு பயன்படுத்து வோருக்கு ரூ.5.75-ல் இருந்து ரூ.6.60ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக வாடகை வீடுகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால்தான் இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதைவிட தமிழ்நாட்டின் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்தின் தேவைக்கான அளவு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் புதிய மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுத்தால் இத்தகைய சுமைகளை மக்கள் மீது சுமத்த வேண்டியது இருக்காது.

அதே நேரத்தில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோரின் கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்; 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்கள் தற்போது அவர்கள் செலுத்தி வரும் மின் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்தினால் போதும்: என்ற மாண்புமிகு முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

பொதுமக்கள் மீது பெரும் சுமையாக ஏற்றப்பட்டிருக்கும் இந்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

திருப்பதியில் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் மீதும், செய்தியாளர்கள் மீதும் ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம்

புதன், 10 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்  இன்று 10.12.2014 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
திருப்பதியில் தமிழக செய்தியாளர்கள் மீதும் கொடும் தாக்குதல் நடத்தி கைது செய்திருப்பதற்கும் கடும் கண்டனம்!

ஆந்திரா அரசே! தமிழக செய்தியாளர்களை உடனே விடுதலை செய்க!!

தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு தமிழினத்தின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் மீறி இந்தியப் பேரரசு செங்கம்பளம் விரித்து வரவேற்றதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

திருப்பதிக்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் நேற்று (டிசம்பர் 9)-ந் தேதி மாலை சென்ற ஆயிரக்கணக்கான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் ஆந்திரா எல்லையில் அந்த மாநில காவல்துறையினரால் தடுக்கப்பட்டோம். பின்னர் ஆந்திரா எல்லையிலேயே ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தி இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தோம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை திருப்பதி ஆலயத்தில் வழிபாடு நடத்திய படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஜனநாயக வழியில் அமைதியான முறையில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

ஆனால் ஆந்திரா காவல்துறையினரோ கருப்புக் கொடி காட்டிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியத் தலைவர் பாலமுருகன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சுந்தர், கடலூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சத்திரம் குமார், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் சிவா உள்ளிட்ட 25 பேரை மிருகத்தனமாக தாக்கி அவர்களது வாகனங்களை நாசமாக்கி தனித்தனியே சிறையிலடைத்துள்ளது.

இதேபோல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணி தலைவர்களான மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், வித்யாதரன் எனப் பலரையும் ஆந்திரா காவல்துறை கொடூரமாகத் தாக்கி சிறையிலடைத்துள்ளது. ஆந்திர காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

அத்துடன் இந்த கருப்புக் கொடி சம்பவத்தை பதிவு செய்ய சென்ற திருத்தமணி மாலை முரசு செய்தியாளர் மீது நேற்று திருப்பதியில் ஆந்திரா காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இன்று அதிகாலை தமிழ்நாட்டைச் சேர்ந்த சன் டிவி செய்தியாளர் குணசேகரன், தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் காண்டீபன், புதிய தலைமுறை செய்தியாளர் மணிகண்டன் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களையும் ஆந்திரா காவல்துறை மிகக் கொடூரமாக தாக்கியும் அவர்களது செய்தி உபகரணங்களை உடைத்தும் பறிமுதல் செய்தும் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அண்டை மாநிலமான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் "ராஜபக்சேவின் ஏவல்" படைபோல ஆந்திரா காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நேற்றும் இன்றும் நடந்து கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.

திருப்பதியில் கைது செய்யப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டு செய்தியாளர்களை உடனே விடுவித்து பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை ஆந்திரா காவல்துறை திருப்பி ஒப்படைக்க வேண்டும். நாசமாக்கிய செய்தி உபகரணங்களுக்கான உரிய நட்ட ஈட்டை ஆந்திரா அரசு வழங்க வேண்டும்.

இந்தத் தாக்குதலுக்கு ஆந்திரா அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன் ராஜபக்சேவின் கூலிப்படையாக குண்டர் படையாக நின்று தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உடனே தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

அமைதி வழியில் போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும் தங்களது கடமையை செய்ய சென்ற தமிழ்நாட்டு செய்தியாளர்களையும் உடனே ஆந்திரா காவல்துறை விடுதலை செய்யாவிட்டால் தமிழ்நாட்டுக்குள் அந்த மாநில பேருந்துகள் எதனையும் அனுமதிக்க மாட்டோம்.

அத்துடன் தமிழ்நாட்டில் இயங்கும் அத்தனை ஆந்திரா அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

ஒகேனக்கல் மீது கர்நாடகா உரிமை கோரினால் பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவிப்பு

திங்கள், 8 டிசம்பர், 2014

ஒகேனக்கல் மீது கர்நாடகா உரிமை கோரினால் பெங்களூரை தமிழ்நாட்டோடு இணைக்க போராடுவோம்! என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: 


கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டின் அங்கமான ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கடுமையான கண்டனத்துக்குரியது. 1952 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த நிலப்பரப்புகள்தான் மிக அதிகம்.

ஒருகாலத்தில் சென்னை மாகாணம் என்பது திராவிடர் இனப் பழங்குடிகள் அதிகம் வாழும் ஒடிஷாவின் கோராபுட் மாநிலம் வரை இருந்தது என்பது வரலாறு. ஆனால் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களுக்கும் தாரைவார்க்கப்பட்ட பெருங்கொடுமை "இந்திய தேசியத்தின் பெயரால்" அரங்கேறியது. எங்களது ஒகேனக்கல் மீது உரிமை கோருகிற கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூரும் கூட தமிழ்நாட்டின் ஒரு அங்கம் என்ற கோரிக்கை இன்னமும் காலாவதியாகவில்லை என்பதை சித்தராமையாக்கள் மறந்துவிட்டு பேசக் கூடாது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

காவிரியில் தமிழகத்துக்கான நியாயமான சட்டப்பூர்வமான உரிமையை மதிக்க மறுத்து மேகேதாட்டுவில் பல்வேறு தடுப்பு அணைகளைக் கட்டுவோம் என்று எதேச்சதிகரமாக பேசி வருகிறது கர்நாடகா. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டு அரசும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மேகேதாட்டு விவகாரத்தை திசைதிருப்பும் உள்நோக்கத்துடன் தமிழகத்தை மிரட்டி அச்சுறுத்தும் வகையில் ஒகேனக்கல் மீது உரிமை கோரும் வகையில் கர்நாடகா முதல்வர் பேசியிருப்பதை ஏற்க முடியாது. அது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய மத்திய அரசால் தமிழகம் காலங்காலமாக வஞ்சித்து வரும் சூழலில் அண்டை மாநிலமான தமிழகத்துக்கான சட்டப்பூர்வமான நியாயமான ஆற்று நீர் உரிமைகளை கர்நாடகா மதித்து நடக்க வேண்டுமே தவிர, இத்தகைய திசை திருப்பும் மிரட்டுகிற நடவடிக்கைகளை மேற்கொண்டால் தமிழ்நாட்டு மக்களும் எதிர்வினையாற்றுவார்கள்.

கர்நாடகாவின் கோலாரும் பெங்களூரும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்ற முழக்கமும் பெரும் போராட்டமாக வெடிக்கும். அதை எதிர்கொள்ள கர்நாடகாவும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு அங்கம். இது யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையே கிடையாது. இதனால் கர்நாடகாவின் "ஒகேனக்கல் மறுவரையறை" கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவே கூடாது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு தக்க பதிலடியைத் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

Read more...

திட்டக்குடி வைத்தியாதசுவாமி கோவில் திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறநிலையத்துறை ஆணையரிடம் மனு

திட்டக்குடி வைத்தியாதசுவாமி கோவில் திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அறநிலையத்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 26ம் தேதி நடக்க உள்ளதால் திருப் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், நேற்று முன்தினம் நேரடியாக பார்வையிட்டார். திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை
க் கட்சி மங்களூர் கிழக்கு ஒன்றியசெயலர் சுரேந்தர் தலைமையில் நிர்வாகிகள், ஆணையரிடம் மனு அளித்தனர்.

அறநிலையத்துறை ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனு விபரம்:

திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 24 புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட திருக்குளம், 30 ஆண்டுகளாக பணபலம் மிகுந்வர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. திருக்குளத்தில் இருந்து புண்ணிய நீர் எடுத்து கும்பாபிஷேகம் செய்தால் தான் ஊர் வளர்ச்சி பெறும். எனவே திருக்குள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து திருக்குளத்தைப் பார்வையிட்ட ஆணையர் தனபால், குளத்தின் உண்மையான அளவையும், தற்போதுள்ள அளவையும் அளந்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Read more...

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் திருப்பதி வருகையை கண்டித்து திருப்பதியில் டிசம்பர் 9-ந் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

இந்தியாவில் தமிழீழ இனப்படுகொலை குறித்து ஐ.நா. விசாரணை நடத்தக் கோரும் நிலையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை திருப்பதி வர அனுமதிப்பதா?

திருப்பதியில் டிசம்பர் 9-ந் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பிக் கண்டன கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தொப்புள் கொடி உறவுகளை இனப்படுகொலை செய்த படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை டிசம்பர் 9-ந் தேதி திருப்பதிக்கு வர இந்தியப் பேரரசு அனுமதித்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையை ஏற்க முடியாது என்றும் அந்தக் குழுவை அனுமதிக்க முடியாது என்றும் படுகொலையாளன் ராஜபக்சே கொக்கரித்துக் கொண்டிருக்கிறான்..

இதனால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் இலங்கை இனப்படுகொலையின் அழியாத சாட்சியங்களாக இருக்கிற தமிழீழ உறவுகளிடம் ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகம் வலியுறுத்தி வருகிறது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் அவைய விசாரணைக் குழு இந்தியா வர அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசை ஒட்டுமொத்த தமிழ்நாடும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிப்பதும் டிசம்பர் 9-ந் தேதி திருப்பதியில் அந்த கொடுங்கோலனுக்கு செங்கம்பளம் விரிப்பதும் தமிழர் நெஞ்சங்களை கொந்தளிக்க வைக்கிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் தோற்றுவிடுவோம்...தாம் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பு போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படுவோம் என்று வெளிப்படையாக அஞ்சி அலறும் வகையில் ஒட்டுமொத்த சொந்த சிங்களதேசமே ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டிருக்கிறது. அதுவும் ராஜபக்சேவின் சொந்த கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினரோ இனப்படுகொலையாளன் ராஜபக்சே மற்றும் அவனது குடும்பத்தினரின் கொடுங்கோல் ஆட்சியை சகிக்க முடியாமல் கட்சியை விட்டு வெளியேறியிருக்கின்றனர்.

இலங்கை அதிபர் தேர்தலில் 35 அரசியல் கட்சிகளின் பொதுவேட்பாளராக நேற்று வரை ராஜபக்சேவின் அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவை நிறுத்தும் அளவுக்கு தன் சொந்த இனமக்கள் மீது அடக்குமுறை ஏவிவிட்டிருக்கிறான் எனில் அப்பாவி ஈழத் தமிழர்களின் கதி என்ன என்பதை இந்தியப் பேரரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்..

உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கிற இந்தியா அங்கமாக இருக்கிற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவைத்தான் இந்தியப் பேரரசு அனுமதிக்க வேண்டுமே தவிர இத்தகைய கொடுங்கோலனும் போர்க் குற்றவாளியுமான ராஜபக்சேவை ஒருபோதும் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கவே கூடாது.

தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி ராஜபக்சேவை திருப்பதிக்கு மட்டுமல்ல இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் அனுமதிக்கக் கூடாது. இனப்படுகொலையாளன் ராஜபக்சே வருவதை எதிர்த்தும் அனுமதித்த இந்தியப் பேரரசைக் கண்டித்தும் திருப்பதியில் டிசம்பர் 9-ந் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி




Read more...

தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்

தூத்துக்குடி: 

தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் சுப்பிரமணிய சாமியை தமிழகத்தில் நுழைய தடை விதிக்க  வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன்  தூத்துக்குடியில் அளித்த பேட்டி: 

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.  மக்களுக்காக போராடும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை பாஜவினர் ஒருமையில் பேசி வருகின்றனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. சுப்பிரமணியசாமி, ஜெயலலிதாவின் ஜாமீனை ரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டி வருகிறார். அவர் தொடர்ந்து தமிழக  தலைவர்களை அவதூறாக பேசி வருவதோடு, இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசிற்கு ஆதரவாக பேசி வருகிறார். இதனால்  தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அவர் தமிழ்நாட்டிற்குள் நுழைய தடைவிதித்து, அவரை கைது செய்ய வேண்டும். 


Read more...

தமிழக காவல் துறையில் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன்கோரிக்கை

வெள்ளி, 5 டிசம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக்  கட்சியின்  தலைவர் தி.வேல்முருகன் நெல்லையில் அளித்த பேட்டி:

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றார். இதற்கு கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் 152 அடி வரை தண்ணீர் தேக்குவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கர்நாடகாவில் காவிரி நதியின் குறுக்கே அணைகட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக நீர்பாசன அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. தொடர்ந்து கர்நாடக அரசு தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம். . இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத் திய வைகோவை விமர்சித்து பேசிய சுப்பிரமணியன்சுவாமி, ஹெச்.ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களின் படகு களை பறித்து, அவர்களை இலங்கை அரசு கைது செய்து வருகிறது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும். கடந்த நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினம் அனுசரித்தற்காக சென்னையில் திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகி உமாபதியை போலீசார் கைது செய்து கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எஸ்ஐ மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தமிழர் நலனுக்காக குரல் கொடுக்க முடியவில்லை. காரணம் தமிழணர்வை புரிந்து கொள்ள கூடிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லை. வட மாநிலத்தவர்கள் தான் அதிகாரிகளாக உள்ளனர். அவர்களை மாற்றி விட்டு, தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமிக்க வேண்டும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்கும் சாதிய கொலைகளை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






Read more...

மனித உரிமைப் போராளி நீதியரசர் வி.கிருஷ்ணய்யர் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் !

வியாழன், 4 டிசம்பர், 2014

மனித உரிமைப் போராளி நீதியரசர் வி. கிருஷ்ணய்யர்! மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் இரங்கல் !

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் இரங்கல் செய்தி:

மறைந்தாரே... மனித உரிமைப் போராளி நீதியரசர் வி. கிருஷ்ணய்யர்!

புகழ்பெற்ற மனித உரிமைப் பேராளர் நீதியரசர் வி. கிருஷ்ணய்யர் கேரளா மாநிலம் கொச்சியில் காலமானார் என்ற செய்தி மனித உரிமை ஆர்வலர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயற்பாட்டாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் தனது கல்வியை முடித்த கிருஷ்ணய்யர், இடதுசாரிகளுக்காக தொடர்ந்து வாதாடினார். நாடு விடுதலை அடைந்த போது கம்யூனிஸ்டு இயக்கம் தடை செய்யப்பட்ட போதும் கூட அவர்களுக்காக கிருஷ்ணய்யர் தொடர்ந்து வாதாடினார். இதனாலேயே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கவும்பட்டார் கிருஷ்ணய்யர்.

1952 பொதுத் தேர்தலில் பரம்பா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

மொழிவாரி மாநிலங்கள் உருவான பின்னர் கேரளாவின் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 1957-ல் போட்டியிட்டு வென்றார். 1957 முதல் 1959 வரை ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கேரளாவின் முதலாவது கம்யூனிஸ்ட் அரசில் சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம், நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராக பதவிவகித்தார் கிருஷ்ணய்யர்.

1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக, 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் 7 ஆண்டுகாலம் பணிபுரிந்த போது வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.

ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் நலனை அடிப்படையாக வைத்தே பல தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி கிருஷ்ணய்யர். மனித உயிர்களை சட்டப்பூர்வமாக பறிக்கும் கொடிய மரண தண்டனையை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.

ராஜிவ் வழக்கில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட தமிழர்கள் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர். மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர் நீதிபதி கிருஷ்ணய்யர்.

மனித உரிமைப் போராளியாக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து 100 வயதைக் கடந்த நிலையில் உடல்நலக் குறைவால் நீதிபதி கிருஷ்ணய்யர் மறைந்தார் என்ற செய்தி மனித உரிமை ஆர்வலர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்களுக்காக உழைத்த மனித உரிமைப் போராளி கிருஷ்ணய்யரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP