Blogger இயக்குவது.

ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை - ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கோரிக்கை

வியாழன், 28 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் ( 28.05.2015 ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மியான்மரிலும் பவுத்த பேரினவாத வெறியாட்டம்! பல்லாயிரம் சிறுபான்மை இனத்தவர் படுகொலை!! 

அகதிகளாக இலட்சக்கணக்கானோர் தத்தளிப்பு! ஐநாவே இனப்படுகொலையை தடுத்து நிறுத்து!

சர்வதேச நாடுகளே அடைக்கலம் கொடு!! ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கிடு!!


இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மலேசியாவில் மனித குலம் மன்னிக்கவே முடியாத கொடூர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இத்தகைய கொடூர அரச பயங்கரவாத ஒடுக்குமுறைகளில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த அடக்குமுறைகளில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மியான்மரை விட்டு தரைவழியாக, கடல் வழியாக கண்ணுக்கெட்டிய திசையெங்கும் வழியெங்கும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாள்தோறும் தப்பி ஓடுகின்றனர்..
அப்படி தப்பி ஓடுகிற அப்பாவிகளை ஈவிரக்கமற்ற அண்டைநாடுகள் அகதிகளாக ஏற்க மறுத்து நடுக்கடலிலே, கொடும் வனங்களிலே தத்தளிக்க விடுகின்றன.. இந்த அநியாய அரசுகளின் பாராமுகத்தால் பசி பட்டினியால் நடுக்கடலி, எல்லைக் காடுகளில் ஆயிரமாயிரம் பேர் செத்து மடிகிறார்கள்..
இதனிலும் உச்ச கொடூரமாக இப்படி தாய்மண்ணை விட்டு, உடைமைகளை உறவுகளை இழந்து உயிர் பிழைக்க தப்பி ஓடுகிற அப்பாவிகளை 'ஆட் கடத்துகிற' கும்பல்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கின்றன.. இந்த காட்டுமிராண்டிகளின் பிடியில் சிக்கி மடிந்து போனவர்கள் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இடுகாடுகள் எல்லையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேரதிர்ச்சியும் நெஞ்சை உறைய வைக்கும்படியான செய்திகள் வந்து கொண்டுகின்றன.
இந்தியா, வங்கதேசம் நாடுகளில் இருந்து குடியேறியவர்களே ரோஹிங்கியா எனும் சிறுபான்மை இனத்தவர் என்பதாலேயே அந்த மியான்மர் மண்ணைவிட்டு ஓடஓட துரத்தப்படுகிறார்கள்.. சொந்த நாட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்..
ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணிலே நாதியற்றவர்களாக பவுத்த பேரினவாதம் பலிகொண்டபோது வாய்மூடி மவுனமாக இருந்த சர்வதேசம் இப்போதும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையையும் கண்டும் காணாமல் இருப்பது வெட்கக் கேடானது..
நாடுகளின் அரசுகளின் சொந்த சுயலாபங்களுக்காக கொத்து கொத்தாக சிறுபான்மை இனங்கள் இப்படி வேட்டையாடப்படும் போது தடுக்க வேண்டிய தேசங்கள். தேசாந்திரிகளாக தப்பி ஓடுகிறவர்களை மனிதர்களாக கூட மதித்து அரவணைக்காதிருப்பது மனித குலத்தின் மாந்தநேயம் மரித்துப் போனதையே வெளிப்படுத்துகிறது...
இந்திய தேசமாவது ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைக்க வேண்டும்! ஐக்கிய நாடுகள் சபை இந்த விவகாரத்தில் முழுமையான ஈடுபாட்டோடு தலையிட்டு ரோஹிங்கியா சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது அதன் கடமை!
மனித நேயமுள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த தென்னாசியாவிலேயே விரிவாக்கம் பெற்று வருகிற பவுத்த பேரினவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து அரச பயங்கரவாதங்களுக்கு எதிராக போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Read more...

தமிழக முதல்வராக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வாழ்த்து

வெள்ளி, 22 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் ( 22.05.2015 ) இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி :
தமிழகத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்று  தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்திட மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்!

சதிகளை தகர்த்து சரித்திரம் படைத்து நல்லாட்சியை தொடர்ந்து வழங்கிட மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்கள் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகாலம் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சீரோடும் சிறப்போடும் செயல்படுத்தி வந்துள்ளது.
உலகத் தமிழினமே கையறு நிலையில் நின்ற போது, இதோ உங்களுக்காக இந்த தமிழக அரசு இருக்கிறது என்று தாயுள்ளத்தோடு ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்துக்கு உற்ற துணையாக ஆதரவாக தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்து பேராறுதலையும் பெருநம்பிக்கையும் அளித்ததை தமிழினம் என்றென்றும் நன்றியோடு நினைவில் கொள்ளும்..
அதேபோல் 23 ஆண்டுகாலம் தூக்கு கொட்டடியில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மற்றும் ஆயுள்சிறைவாசிகளாக இருந்த நளினி உள்ளிட்ட நால்வர் என 7 தமிழர்களையும் விடுதலை செய்வதாக மற்றுமொரு மாந்தநேயமிக்க ஒட்டுமொத்த தமிழினமே உச்சிமோந்து வரவேற்று கொண்டாடிய சரித்திரம் மிக்க தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்..
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழகத்து ஆற்று நீர் உரிமை பிரச்சனைகள் உள்ளிட்ட வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் உறுதியான அனைத்துவகையான போராட்டங்களையும் முன்னெடுத்தது மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.
இடையிலே சிறிது காலம் எதிரிகளின் சதிகளால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லாட்சிக்கு இடையூறு ஏற்பட்ட போதும் அந்த தடைகளையெல்லாம் தகர்ந்து எறிந்துவிட்டு மீண்டும் தமிழகத்தின் முதல்வராக மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரியாசனத்திலே அமர இருக்கிறார்கள்.. தமிழகத்தின் நிரந்தர முதல்வராக தமிழக மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர்ந்து வழங்கிட மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத் தமிழ் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தற்போது நான் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு கலந்து கொண்டு வருகிறேன்.. இங்குள்ள உலகத் தமிழர் இயக்கங்கள், தமிழின உறவுகள் அனைத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து பேருவகையும் பெருமகிழ்வும் அடைந்து வருவதையும் தங்களது மேலான பார்வைக்கும் கொண்டு வருகிறேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் அவரது தலைமையிலான தமிழின நலன் காக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்தும் உறுதுணையாக அரணாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு மீண்டும் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு உலகத் தமிழினத்தின் சார்பாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

Tamizhaga Vazhvurimai Katchi (TVK) leader Panruti T.Velmurugan reached France for the 6th Mullivaikkaal Memorial commemoration

புதன், 13 மே, 2015

Tamizhaga Vazhvurimai Party leader Mr.T. Velmurugan arrived at the city of Paris on 12th May to participate in the 6th commemorate event of Mulliavaikkaal along with the diaspora eelam Tamil.
France Tamil Coordinating Committee and France Tamil National Alliance council activists together welcomed his from the Paris airport with Eelam Tamil national flag. Mr. Velmurugan will participate in the commemorate event of the 6th Mullaivaikkaal genocide conducted on the Eelam Tamils to be held on 18th May in Paris and is also very enthusiastic to meet the Eelam Tamils in Europe.


Read more...

பாரிஸில் நடைபெறும் முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் பங்கேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பிரான்ஸ் சென்றடைந்தார்

பாரிஸில் 18.05.2015 அன்று நடைபெறும் முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலை புலம்பெயர் தொப்புள் கொடி உறவுகளுடன் இணைந்து நினைவு கூற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி திரு தி.வேல்முருகன் அவர்கள் 12.05.2015 அன்று பிரான்சு-பாரிஸ் நகரை சென்றடைந்தார்.
பாரிஸ் விமான நிலையத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயல்பாட்டாளர்கள் மற்றும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை செயல்பாட்டாளர்கள் தமிழீழ தேசியக்கொடியுடன் சென்று பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களை வரவேற்றார்கள். பாரிஸில் மே 18 ஆம் தேதி நடைபெறும் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொள்வதுடன் ஐரோப்பாவில் ஈழத் தமிழர் உறவுகளை சந்திக்க மிக ஆர்வத்துடன் உள்ளதாக பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.



Read more...

சொத்து குவிக்கு வழக்கில் செல்வி ஜெ.ஜெயலலிதா கர்நாடக உயர்நீதி மன்றம் விடுதலை - தடைகளை தகர்த்து சரித்திரம் படைத்த மாண்புமிகு புரட்சித் தலைவிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வாழ்த்து

திங்கள், 11 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் இளம்புயல் திரு.தி.வேல்முருகன் அவர்கள் ( 11.05.2015 ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

தடைகளை தகர்த்து சரித்திரம் படைத்த மாண்புமிகு புரட்சித் தலைவிக்கு வாழ்த்துகள்!! மீண்டும் முதல்வராகி நல்லாட்சி தொடர வாழ்த்துகள்!! 

தமிழகத்தின் தீயசக்திகள் ஒன்று திரண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களுக்கு எதிராக தொடர்ந்த பொய்வழக்கு உடைத்து நொறுக்கப்பட்டு இன்று நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.. தர்மம் வென்றுள்ளது. 

தமிழகத்தின் நலன் ஒன்றே தம் ஒற்றை வாழ்க்கையாக தவமாக வாழ்ந்து வரும் மாண்புமிகு புரட்சித் தலைவியை அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என பகல் கனவு கண்ட நிலையில் பல்லாண்டுகாலம் பொய் வழக்குகளால் தமிழின துரோகிகள் துன்புறுத்தி வந்தனர். இந்த பொய்வழக்குகளில் இடைக்காலத்தில் நிகழ்ந்தவைகள் அனைத்தும் தங்களுக்கான வெற்றி என்ற மமதையில் துள்ளி திரிந்தனர்.. 

ஆனால் எத்தனை இடர்பாடும் துயரமும் வந்த போதும் தமிழக மக்களே தம் உயிராக மதிக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சட்டத்தின் துணை கொண்டு சதிகாரர்களை எதிர்கொண்டார்.. இதோ இன்று நீதி வென்றுள்ளது.. சட்டம் நியாயத்தின் பக்கம் நிமிர்ந்து நிற்கிறது.. தர்மம் வென்று தலைநிமிர்ந்துள்ளது.. 

உலகத் தமிழினம் மகிழ்ச்சியில் திளைக்கிறது... தமிழக மக்களுக்கான நல்லாட்சியைத் தொடர தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்க மீண்டும் முதலமைச்சர் அரியாசனத்தில் அமர இருக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் விழா

செவ்வாய், 5 மே, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம், சிராங்குப்பத்தில் நடந்தது. கம்மாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சின்னதுரை, முடிவண்ணன், மாநில துணை பொதுச் செயலாளர் உ.கண்ணன், தமிழர் படை அறிவழகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சாமிதுரை வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், மாவட்டத் தலைவர் பாலமுருகன், கிளைச் செயலர் ராஜேந்திரன் பங்கேற்றனர். மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கி பேசினார்.

Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கோபிசெட்டிபாளையம் நகர செயற்குழு கூட்டம்

திங்கள், 4 மே, 2015


Read more...

45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்!! கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 11.05.2015 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

ஞாயிறு, 3 மே, 2015

45 முறை இடிந்து விழுந்த சென்னை விமான நிலைய கட்டுமானங்கள்!! கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்தும் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!! 
நாள்: 11.5.2015 
இடம்: சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானத்தின் மேற்கூரைகள் அன்றாடம் இடிந்து விழுவதும் 'பொன்விழா'வை நோக்கி மேற்கூரை இடிந்து விழுந்துகிறது என்று ஊடகங்கள் ஏகடியம் செய்வதும் தொடர்கிற போதும் மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.. இந்த விமான நிலையத்தின் மேற்கூரைகளும் கட்டுமானப் பணிகளும் இடிந்து விழுந்து பயணிகள் படுகாயமடைவது என்பது தொடர் செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசும் விமானப் போக்குவரத்துத் துறையும் இதுபற்றி கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமலே இருக்கிறது.
நேபாளத்தை புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் போதுகூட அந்நாட்டின் காத்மண்ட் விமான நிலையம் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை; அந்த விமான நிலையத்தை பயன்படுத்தியே இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
நேபாளத்து எல்லையில் இருக்கிற மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் பாதிப்பு ஏற்பட்ட போதும் அதன் அருகே உள்ள பக்டோரா விமான நிலையம் பாதிப்புக்குள்ளானதாக செய்திகள் வெளியாகவில்லை.
ஆனால் நிலநடுக்கம் உட்பட எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமலேயே சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் இதுவரை 45 முறை இடிந்து விழுந்து இருக்கின்றன.. பயணிகளை படுகாயப்படுத்தி இருக்கிறது..
இத்தனை முறை பாதிப்பு ஏற்பட்டும் மத்திய அரசும் அதன் விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் கண்டும் காணாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் விமான நிலையமும் இப்படி மோசமாக கட்டப்பட்டதில்லை.
நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களின் குஜராத் மாநிலத்தின் பூஜ் பிரதேசம் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி. நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடம். அங்கு கூட இப்படி ஒரு மோசமான நிகழ்வுகள் நடந்ததாக செய்திகள் இல்லை.
ஆனால் சென்னை விமான நிலையம் மட்டும்தான் இத்தகைய மோசமான நிலையில் இருக்கிறது. இதுவரை 45 முறை இடிந்து விழுந்தும் கூட அதனை சீரமைக்க ஒரு நடவடிக்கை கூட மேற்கொள்ளப்படவில்லை. இந்த விமான நிலைய கட்டுமானப் பணியில் ஈடுபட்ட நிறுவனம் மீது ஒரு சிறு நடவடிக்கையும் இல்லை...
'மேக் இன் இந்தியா' என்ற பெயரில் சர்வதேச நாடுகளின் முதலீடுகளையெல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்று தம்பட்டம் அடிக்கிற மத்திய அரசு, தென்னிந்தியாவின் முதன்மையான சென்னை விமான நிலையம் நாள்தோறும் இடிந்து விழுந்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சனையில்தான் கேளா காதாக இருக்கும் மத்திய அரசு இதுபோன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் கூட அக்கறையற்று இருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
ஆகையால் சென்னை விமான நிலையத்தை உடனே சீரமைக்க வேண்டும்; சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை உள்ளிட்ட கட்டுமானங்கள் 45 முறை இடிந்து விழுவதற்கு காரணமாக இருந்த நிறுவனம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்வதுடன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை விமான நிலையம் முன்பாக வரும் மே 11-ந் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்த இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்


தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

ண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு திரும்ப பெற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை

வெள்ளி, 1 மே, 2015

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம்! எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசே திரும்பப் பெறு!! 

 பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மிக மிகக் கடுமையாக உயர்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவர அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்த போதும் கூட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை... 

சர்வதேச சந்தை நிலவரம், ரூபாய் மதிப்பு போன்ற காரணங்களைக் கூறிக் கொண்டு மக்களின் அடிப்படை தேவையான பெட்ரோல், டீசல் விலையை கண்மூடித்தனமாக அதிகரிப்பது என்பது வன்மையாக கண்டனத்துக்குரியது. மத்தியில் பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த பிறகு திடீரென பெட்ரோல், டீசல் விலையை 50 காசுகள், ரூ1 என குறைப்பது போல சில மாதங்கள் அறிவிப்பதும் பின்னர் ஒட்டுமொத்தமாக கடுமையாக உயர்த்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் யதார்தத்தில் பெட்ரோல், டீசல் விலை மிக மிகவும் கடுமையாக உயர்ந்தே இருக்கிறது என்பதே நிதர்சனம். 

இத்தகைய போக்கினால் அத்தியாவசிய பொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்து ஏழை எளிய நடுத்த மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வைக் குறைப்போம்; கட்டுப்படுத்துவோம் என்றெல்லாம் வாக்குறுதி தந்த மத்திய அரசு தற்போது, எண்ணெய் நிறுவனங்கள் மீது பழியைப் போட்டுவிட்டு கையை விரிப்பது தங்களது கடமையில் இருந்து தப்பி ஓடுகிறது என குற்றம்சாட்டுகிறேன். பொதுமக்களை மிகக் கடுமையாக பாதிக்கிற இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; அத்துடன் இத்தகைய பொதுமக்களை பாதிக்கிற வகையில் விலை நிர்ணயம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை மத்திய அரசு திரும்பப் பெற்று தம் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 

அன்புடன் 
பண்ருட்டி தி. வேல்முருகன் 
தலைவர், 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP