Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த பாதை - பகுதி 2

திங்கள், 21 ஜனவரி, 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்து வந்த  பாதை - பகுதி 2

* அரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் முன்னிலையில் பா.ம.க.,விலிருந்து விலகி 100 பேர்  12/03/2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.

* கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு பதிலாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

* ஸ்ரீமுஷ்ணத்தில் 01/04/2012 திங்கள்கிழமைஅன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம்  நடைபெற்றது. அப்போது  நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டால் நான் தொடங்கிய கட்சியைக் கலைத்து விடுகிறேன் என தி.வேல்முருகன் சவால் விடுத்தார். 

* தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தென்பெண்ணை, காவிரி மற்றும் முல்லை பெரியாறு நீர் உரிமை மீட்பு மற்றும் மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் இரங்கல் தெரிவித்தார். 
* ஐ.நா. மேற்பார்வையோடு வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து மக்கள் விரும்புகின்ற ஒரு சுதந்திர அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடத்தி தமிழ் ஈழம் அமைய, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை மீது பன்னாட்டு நீதி மன்றத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும், தனித் தமிழீழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 22-04-2012 அன்று கிருஷ்ணகிரியில்  மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

* குமரி வனப்பகுதியில் விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி மரங்கள் சட்டத்திற்கு புறம்பாக அழிக்கபடுவதை குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் கண்டித்தார். 

* கடலூர் மாவட்ட செயலாளர் இரா.பஞ்சமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் என்.எல்.சி.யில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு தரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* தமிழக வாழ்வுரிமை கட்சியின், சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைப் பொதுச் செயலாளர் காவேரி தலைமையில்நடைபெற்றது. அதில் சேலம் மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற வேண்டும்;என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 
 
* நதிநீர், புயல் நிவாரணம், ஈழத்தமிழர் படுகொலை விவகாரம், நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை உள்ளிட்டவைகளில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் குற்றம் சாட்டினார்.
* கன்னியாகுமரியில் சுனாமி எச்சரிக்கை மையத்தை திறக்க  தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமரி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் கோரிக்கை விடுத்தார். 
* கடலூர் மாவட்டம் குமராட்சியில் மே 17, 2012 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  இலங்கை முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP