Blogger இயக்குவது.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என வலியுறுத்தி இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்ப்பு

சனி, 26 அக்டோபர், 2013

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே, காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் மே 17 இயக்கம் சார்பில் (25-10-2013) ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

முற்றுகைப்  போராட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொழிற்சங்க அணி சைதை சிவா, தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் அய்யா பெ.மணியரசன், மனித நேய மக்கள் கட்சியின் தோழர் அனிஸ், SDPI கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் அம்சா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, இன அழிப்புக்கு எதிரான இசுலாமியர் இயக்கம், மக்கள் விடுதலை இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், உயிர்த் துளிகள் இயக்கம், தமிழ்த் தேச குடியரசு இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP