Blogger இயக்குவது.

விழுப்புரத்தில் இராசபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

செவ்வாய், 5 மார்ச், 2013

விழுப்புரம்:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சி, ம.தி.மு.க., உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அமெரிக்க அரசு கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், பன்னாட்டு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (04/03/2013) மாலை விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க., மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் ம.தி.மு.க., நிர்வாகிகள் மணி, அன்புகணபதி, சம்பந்தம், சாரங்கபாணி, தமிழக வாழ்வுரிமைக்  கட்சி நிர்வாகிகள் ரவி அலெக்ஸ், குமரன், இ.கம்யூ.,நிர்வாகிகள் சரவணன்,கோவிந்தசாமி, மனித நேய மக்கள் கட்சி முஸ்தாக்தீன், மக்கள் உரிமை கூட்டமைப்பு தமிழ்வேங்கை, மனித உரிமை இயக்கம் லூசியா, இளைஞர் அமைப்பு பிரபு, தமிழிளைஞர் கூட்டமைப்பு நிர்வாகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP