Blogger இயக்குவது.

மத்திய பாஜக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தர தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

செவ்வாய், 24 ஜூன், 2014

திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:


1. மத்தியில் ஆட்சி பொறப்பேற்றுள்ள பாஜக விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துதர வேண்டும்.

2. திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. முசிறி குளித்தலை பெரியார் பாலத்தில் மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தவறும் பட்சத்தில் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நகர அமைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP