Blogger இயக்குவது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு காஞ்சி மக்கள் மன்றமும் இணைந்து மாவீரர் தினம் அனுசரிப்பு

வெள்ளி, 28 நவம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் காஞ்சி மக்கள் மன்றமும் இணைந்து தமிழீழ மண் மீட்புப் போரிலேதங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு 27.11.2014 அன்று செங்கொடி திடலில் விளக்கேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

காஞ்சி மக்கள் மன்றத்தின் இணைப்பாளர் மகேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன், பிரதான பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து காஞ்சி மக்கள் மன்ற உறுப்பினர்களும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் மாவீரர்களை நினைவு கூர்ந்து காஞ்சி மக்கள் மன்ற சிறுவர்களினால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதோடு நிகழ்வின் இறுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP