Blogger இயக்குவது.

150 மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் தமிழர் பேரணியில் புதுச்சேரியில் உள்ள தமிழ் அமைப்புகளும் பங்கேற்ற தி.வேல்முருகன் கோரிக்கை

புதன், 17 செப்டம்பர், 2014



தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் 150 மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் தமிழர் பேரணி சென்னையில் 24.09.2014 அன்று நடக்கிறது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா. மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தப்படுகிறது. 

இதுதொடர்பாக தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் புதுச்சேரியில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்களை நேற்று 16.09.2014 சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடைபெற உள்ள பேரணியில் புதுச்சேரியில் உள்ள தமிழ் அமைப்புகளும் பங்கேற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டார். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் புதுவை ஸ்ரீதர் மற்றும் புதுச்சேரியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP