Blogger இயக்குவது.

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

திங்கள், 15 செப்டம்பர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் செல்வம் வரவேற்றார். துணைச் செயலாளர் சுப்ரமணியன், நிர்வாகிகள் கந்தசாமி, ஆனந்தகுமார், ராஜா முன்னிலை வகித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சயின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். ஒன்றிய பொருளாளர் குழந்தைவேல் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கரும்புக்கு தமிழக அரசு நிர்ணயித்த விலையை பெண்ணாடம் அம்பிகா, ஏ.சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும்.

2. விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரவள்ளி, பருத்திக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

3. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை ஐ.நா.மன்றத்தில் பேச அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP