Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட அரசியல் மாநாடு - தி.வேல்முருகன் அவர்களின் எழுச்சியுரை காணொளி பகுதி - 1

சனி, 30 ஜூன், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் 24-6-2012 அன்று  கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற்ற லட்சக்கணக்கானோர் திரண்ட கடலூர் மாவட்ட முதல் மாபெரும் அரசியல் மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி  நிறுவனர் இளம்புயல், பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களின் எழுச்சியுரை பாகம் 1 

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் மாநாடு - குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் செய்திகள்

புதன், 27 ஜூன், 2012

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஞாயிறன்று (24-6-2012) மாலை கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற்ற    லட்சகணக்கானோர் திரண்ட கடலூர் மாவட்ட முதல் மாபெரும் அரசியல் மாநாடு குறித்து குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.




தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு

சனி, 23 ஜூன், 2012







தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட முதல் அரசியல் விழிப்புணர்வு மாநாடு சூன் - 24, 2012 (ஞாயிற்றுக்கிழமை) கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற உள்ளது..எனவே தமிழ் உணர்வு கொண்ட தமிழர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாநில, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள்,தொண்டர்கள் அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்....

இடம் : மஞ்சை நகர் மைதானம், கடலூர்.

நேரம் : மாலை 4 மணி

நாள்: சூன் - 24, 2012, ஞாயிற்றுக்கிழமை


 

தமிழர்களின் நலன் காக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு: தி.வேல்முருகன்

சனி, 16 ஜூன், 2012

கடலூர்:

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட மாநாடு வரும் 24 ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் நிர்வாகிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியது:

கடலூரில் நடைபெற உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநாடு ஒட்டுமொத்த தமிழர்களின் நலன் காக்கும் மாநாடாகும். தமிழீழ மக்களின் விடியலுக்காகவும், கட்ச தீவை மீட்கவும், கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடவும், என்.எல்.சி யில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக்கவும் இந்த மாநாடு கடலூரில் எழுச்சியோடு நடத்தப்பட உள்ளது என்றார்.  பேட்டியின்போது  நிர்வாகிகள் பஞ்சமூர்த்தி, ஆனந்த், செந்தில், அருள்பாபு. சுப்ரமணியம், கமலநாதன், கள்ளப்பட்டு ஆறுமுகம், பிரசன்னா உள்பட பலர் உடனிருந்தனர்.



உளுந்தூர்பேட்டை ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடி ஏற்றும் விழா

திங்கள், 11 ஜூன், 2012


உளுந்தூர்பேட்டை ஒன்றியம், பள்ளியம்தாங்கள், அரளி, பாண்டூர் கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்தலைவர் . இளம்புயல் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில்  மாநில துணைப் பொதுச்செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் ஞா.ராஜேஷ் மற்றும் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை மூட தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்

ஞாயிறு, 10 ஜூன், 2012

சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை உடனடியாக மூட தமிழக அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி  பவலியுறுத்தியுள்ளது.  இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக  தூதரகத்தை மூட தமிழக வாழ்வுரிமைக் கட்சி   வலியுறுத்தியுள்ளது.  இலங்கை ஜனாதிபதியைக் கௌரவிக்கும் தனது யோசனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கைவிட வேண்டுமென மத்திய அரசாங்கம் லண்டனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும, இலங்கைப் படையினருக்கு எந்தவொரு கூட்டு இராணுவப் பயிற்சியையும் இந்தியா மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் வழங்கக் கூடாதென  கோரிக்கை விடுத்திருக்கிறது.




இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ராணுவப் பயிற்சி வழங்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

செவ்வாய், 5 ஜூன், 2012


சென்னை: 

இலங்கைக்கு இந்தியா ராணுவப் பயிற்சி வழங்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவும் அமெரிக்காவும் உயர் ராணுவப் பயிற்சி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளன என்று இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தி வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே உள்ளது.

இலங்கையின் பூர்வகுடிகளான எங்கள் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்களை லட்சக்கணக்கில் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து சர்வதேசத்தின் முன் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளார் ராஜபக்சே.

தமிழ் மக்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் தடை விதித்திருக்கக் கூடிய கொத்து குண்டுகளை இலங்கை ராணுவம் வீசியதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரே குற்றம்சாட்ட்டியுள்ளனர். போர் முடிந்தது.. மறுசீரமைப்பு நடைபெறுகிறது என்று சொல்லிக் கொண்டே இன்னமும் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட முல்லைத் தீவுப் பகுதிகளில் ஒன்றரை லட்சம் தமிழர்களை முகாம்களிலே அடைத்து வைத்து நாள்தோறும் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம். எம் தமிழ்ச் சகோதரிகளை விசாரணை என்ற பெயரில் வேட்டையாடி அவர்களது எதிர்காலத்தையே நாசம் செய்து வருகிற படைதான் இலங்கை ராணுவம். இத்தகைய ரத்தக்கறை படிந்த சிங்கள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி கொடுப்பது என்பதை ஏற்கமுடியாது.

தமது விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி லட்சக்கணக்கான தமிழர்களை கொலை செய்த சிங்கள அரசு இப்போது இஸ்லாம் பயங்கரவாதம் என்ற முகமூடியைப் போட்டுக் கொண்டு தமிழ் முஸ்லிம்களை வேட்டையாடப் புறப்பட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்று வரும் இஸ்லாமிய மதப்பள்ளிகளை கணக்கெடுப்பது, மசூதிகளைக் கணக்கெடுப்பது என்று ஏற்கெனவே தமிழ் முஸ்லிம்களை வேட்டையாடத் தொடங்கியிருக்கும் ராஜபக்சே அரசு இப்போது அல் குவைதா, தலிபான்கள் நடமாட்டம் என்ற பெயரில் மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கு தயாராகிவிட்டது.

மூன்றாண்டுகளுக்கு முன்பு இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் எத்தகைய கோரத்தை சிங்கள ராணுவமும் சர்வதேச நாடுகளும் செய்தனவோ அதே போன்ற இனப்படுகொலையை இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் கிழக்கிலும் நிகழ்த்தப் போகிறது என்பதற்கான முன் தயாரிப்புகளே இத்தகைய ராணுவப் பயிற்சிகள் என அச்சப்படுகிறோம். அல்குவைதா, தலிபான்கள் நடமாட்டம் என்ற பெயரில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தமிழ் முஸ்லிம்கள் மீது சிங்கள ராஜபக்சே நடத்தப் போகும் இனப்படுகொலைக்கான இந்த ராணுவ பயிற்சியை இந்திய அரசு வழங்கக் கூடாது என்பதை அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஒன்றிணைந்து வலியுறுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ஞாயிறு, 3 ஜூன், 2012

கடலூர்:

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலூர் டவுன் ஹால் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பு


சூன் 24-ம் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கவுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதல் அரசியல் கொள்ளை விளக்க மாநாடு குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதால், கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.



சிறப்புரை : தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன்


நாள் : சூன் 5, 2012 .

இடம் : கடலூர் டவுன் ஹால்

நேரம் : முற்பகல் 2 மணி





Pages (26)123456 Next

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP