Blogger இயக்குவது.

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முத்துக்குமாரின் 4-ம் ஆண்டு வீரவணக்க நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் திங்கள்கிழமை தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் 4-ம் ஆண்டு வீரவணக்க நாள் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில், நகர அமைப்புச் செயலர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை ஏற்றார். நகரத் தலைவர் சாமிதுரை, ஒன்றியச் செயலர்கள் சிவசங்கர், தியாகராஜன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் வ.சின்னதுரை, மாநில துணைப் பொதுச் செயலர் உ.கண்ணன், மாநில மதியுரைக் குழுச் செயலர் மு.பாலகுருசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP