Blogger இயக்குவது.

கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறைக் கூட்டம்

சனி, 2 பிப்ரவரி, 2013


கடலூர்:

 தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறைக் கூட்டம் கடலூரில் 01/02/2013 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில மாணவரணி துணைச் செயலர் அருள்பாபு தலைமை வகித்தார். கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் பரஞ்சோதி, நகரச் செயலர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் பேசினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 1. இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு ஆதரவு அளிக்கும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதோடு, அவர் இந்தியா வருவதைக் கண்டிப்பது.

 2. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி இயங்கும் நேரத்தில் போதிய பேருந்துகளை  இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

3.தானே புயலில் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும்.

4. அரசு பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP