Blogger இயக்குவது.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழி கல்வியாக மாற்றும் தமிழக அரசைக் கண்டித்து பள்ளிக் கல்வி இயக்ககம் முற்றுகை - தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்பு

செவ்வாய், 28 மே, 2013

அரசுப்  பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழி கல்வியாக தமிழக அரசு மாற்றி விட்ட நிலையில் அதை எதிர்த்து தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் இன்று 28/05/2013 காலை பத்து மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. 

இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசியப் பொதுவுடைமை கட்சி தலைவர் திரு மணியரசன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்தியா, தமிழக வாழ்வுரிமை கட்சி சைதை சிவா, தோழர் தியாகு, இயக்குனர் கௌதமன், விடுதலை ராஜேந்திரன் , தமிழர் எழுச்சி இயக்கம் வேலுமணி, பாவலலேறு பெருஞ்சித்திரனார் மகன் பூங்குன்றன்,உலக தமிழ் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தமிழ் இயக்கங்கள் பங்குபெற்று தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழ் மொழி காக்க தமிழ் உணர்வாளர்கள் வீதியில் இறங்கி போராடினர் . தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை கொண்டுவர வேண்டும், தமிழ் வழியில் படித்தோருக்கே அரசு வேலை தர வேண்டும், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இப்போராட்டத்தில் பங்குபெற்ற சுமார் 300 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் .
























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP