Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி வடக்கு ஒன்றிய பொதுக் குழுக் கூட்டம்

செவ்வாய், 7 மே, 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி வடக்கு ஒன்றிய பொதுக் குழுக் கூட்டம் அங்குசெட்டிப்பாளையத்தில் சனிக்கிழமை (04/05/2013) நடந்தது. 

மாவட்டச் செயலர் இரா.பஞ்சமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் சு.க.ஜெயகாந்தன், ஒன்றியக் குழு உறுப்பினர் ப.ராமானுஜம், ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரா.தேவராசு, இளம்புயல் பாசறைச் செயலர் டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றியச் செயலர் இரா.சுரேந்தர் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் இரா.சக்திவேல், மாநில தமிழர்படை கி.ஜோதிலிங்கம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியத் தலைவர் சி.குப்புசாமி நன்றி கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தி.திருமால்வளவன் பேசியது:

நம் சமூகத்தாருக்கு நல்லக் கல்வியை அளித்து பொருளாதாரத்திலும், வாழ்க்கையிலும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் கட்சித் தலைவர்களிடம் இல்லை என்றார் அவர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 

2. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு முழுமையாக தரவேண்டும்,

3. இனக்கலவரம் வராமல் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுவது,

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP