Blogger இயக்குவது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா மீதான இந்துத்துவா கும்பல் தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கடும் கண்டனம்

சனி, 3 ஜனவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று 03.01.2015 வெளியிட்டுள்ள அறிக்கை:
 
முத்துப்பேட்டை தர்கா மீதான இந்துத்துவா கும்பல் தாக்குதலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புகழ்பெற்ற தர்கா பகுதியில் டிசம்பர் 31-ந் தேதியன்று நள்ளிரவில் இந்துத்துவா கும்பல் இஸ்லாமியர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட அந்த கும்பல் இஸ்லாமியர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் இஸ்லாமியர் வழிபாட்டுத் தலமான தர்காவின் சுற்றுச் சுவர் மற்றும் மின்விளக்குகளைத் தகர்த்துள்ளனர்.

இந்துத்துவா கும்பலின் இந்த அட்டூழிய வன்முறைக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துப்பேட்டையில் அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா கும்பல் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

பண்ருட்டி தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP