Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மே-18-ல் இலங்கை முள்ளிவாய்கால் போரில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

செவ்வாய், 15 மே, 2012

கடலூர்:

நதிநீர், புயல் நிவாரணம், ஈழத்தமிழர் படுகொலை விவகாரம், நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை உள்ளிட்டவைகளில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் குற்றம்சாட்டினார்.

கடலூரில் திங்கள்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் அளித்த பேட்டி :

மே 18-ம் தேதி கடலூரில் மாவட்ட மாநாடு நடக்க இருந்தது. மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடப்பதால் மாநாட்டை ஜூன் 24-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு எந்தவித பெரிய அளவிலான உதவியும் செய்யவில்லை. தமிழக அரசு கோரிய நிதி உதவியும் வழங்கவில்லை. மத்திய அரசுக்கு எதிராக வரிகொடா இயக்கம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை திரட்டி மத்திய அரசு அலுவலகம் முன் போராட்டம் நடத்தவுள்ளோம். கடந்த 25 ஆண்டுகளாக போராடிவரும் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரமும், வீடு நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என நெய்வேலி நிர்வாகத்தை வலியுறுத்துவது, உச்ச நீதிமன்றம், நதிநீர் நடுவர் மன்றம் முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னையில் அளித்த தீர்ப்பை கேரளம் மற்றும் கர்நாடக அரசு நடைமுறைபடுத்த மறுக்கிறது. இம்மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவது,

தனியார் கல்வி நிறுவனங்கள் பணக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எம்.பி.பி.எஸ். இடம் ரூ.75 லட்சத்துக்கு விலை பேசப்படுகிறது. தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை நடக்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. தமிழ் ஈழப் போரில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டுவது, தனி ஈழம் குறித்து இலங்கை தமிழர் மத்தியில் ஐ.நா. முன்னிலையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்தப்பட உள்ளது.< மே-18-ம் தேதி குமராட்சி கடை வீதியில் இலங்கை முள்ளிவாய்கால் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியல் தமிழ், ஈழ ஆர்வலர்கள் பங்கேற்பர். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க படித்த இளைஞர் படையை அமைத்து, அவர்களை கண்காணிப்பு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஊழல் லஞ்சவாதிகளை அடையாளம் காட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும். அம்பேத்கர் கேலிச்சித்தரம் தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நித்யானந்தா:

மதுரை ஆதீனமாக நித்தியானந்தா தேர்வு செய்யப்பட்டதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தன்மீது உள்ள வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் பொய்யென நிருபித்துவிட்டு பின்னர் வேண்டுமானால் ஆதீனமாக பதவி ஏற்றுக்கொள்ளட்டும் என தி.வேல்முருகன் கூறினார். பேட்டியின்போது மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தாண்டவராயன், பாடலிமணி, மாவட்டச் செயலர் பஞ்சமூர்த்தி, அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP