Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உளுந்தூர்பேட்டை நகர செயல்வீரர் கூட்டம்

திங்கள், 22 அக்டோபர், 2012

உளுந்தூர்பேட்டை:

   தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உளுந்தூர்பேட்டை நகர செயல்வீரர் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 
     நகர செயலாளர் ரா.பாலா தலைமை வகித்தார். நகர தலைவர் ரா.பிரேம், நகர துணைச் செயலாளர் பி.லட்சுமணன், நகர மாணவரணி செயலாளர் க.வினோத், மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க அமைப்பாளர் கு.வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் வ.ச.சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் க.கோபி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்

1. அடிப்படை வசதியில்லாத உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் முன்பு நவம்பர் 3-ம் தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துதல்,

2. உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணியை உடனடியாக முடிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தையும், ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்துதல்,

 3. தொடர் மின்வெட்டை தமிழக அரசு உடனே சரி செய்ய நெய்வேலி மின்சாரத்தை முழுவதுமாக தமிழக மக்கள் பயன்படுத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வரை வலியுறுத்துதல்

உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP