Blogger இயக்குவது.

ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக் குழு கூட்டம்

சனி, 29 ஜூன், 2013

ஸ்ரீமுஷ்ணம் :

ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக் குழு கூட்டம் 26/06/2013 அன்று நடந்தது.

ஒன்றிய செயலாளர்  முருகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சீனுவாசன் வரவேற்றார். ஒன்றிய தலைவர் மனோகர், பொருளாளர் விஜயரங்கன், ஒன்றிய இளைஞர் அணி பாசறை தலைவர் மலர்மன்னன், தேவநாதன், நகர இளைஞர் அணி தலைவர் கார்த்திகேயன், சந்தோஷ்குமார். நகர தலைவர் மதன்ராஜ், துணை தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு தி.திருமால்வளவன் பேசினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள்:


1. செப்டம்பர் 28ம்தேதி கடலூரில் நடைபெறும் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது, 

2. ஸ்ரீமுஷ்ணத்தை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு வழங்க வேண்டும். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். 

3.மும்முனை மின்சாரம் 20மணி நேரம் இலவசமாக வழங்க வேண்டும்,

4. ஸ்ரீமுஷ்ணம் பகுதி பாசன ஏரிகளை தூர் வார வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் முடிவண்னன், மாநில நிர்வாக குழு ராஜேந்திரன், அமைப்பு குழு தமிழரசன், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விவசாய செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP