Blogger இயக்குவது.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

வெள்ளி, 2 மே, 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான போரூர் எம்.எஸ் சண்முகம், மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால், தொழிற்சங்க தலைவர் சைதை கே.வி. சிவராமன், மாநில அமைப்பு செயலாளர் கொற்றவ மூர்த்தி, மாவட்ட செயலாளர் பூக்கடை முத்து ராஜ், மாவட்ட மகளிரணி வெள்ளையம்மாள், விருகை பகுதி செயலாளர் கோயம் பேடு வீரராகவன், பகுதி தலைவர் ஜி.சரவணன், ஆனந்த் ஆகியோர் மே தின பூங்காவில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.

பின்னர் மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து விருகம்பாக்கம், எம்.ஜி.ஆர்.நகர், சின்மயா நகர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP