Blogger இயக்குவது.

கடலூர்- சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக கூடுதலாக பேருந்துகளை இயக்க துரித நடவடிக்கை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மனு

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முடிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் கொடுத்துள்ள மனு:
இரவு நேரங்களில் கடலூர்-சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் "பர்மிட்' இருந்தும் புவனகிரியை புறக்கணித்து புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால் சென்னை, புதுச்சேரி சென்றுவிட்டு தங்களது கிராம பகுதிகளுக்கு செல்லும் புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள 15க்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், குடும்பத்துடன் சென்று வரும் பொது மக்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு 9 மணிக்கு மேல் கடலூர்- சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக செல்லும் தடம் எண் 239 பஸ்களை கூடுதலாக விட்டு பொது மக்கள் மற்றும் மாணவர்களின் சிரமத்தை போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP