Blogger இயக்குவது.

லைக்காவின் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு கோரிக்கை

திங்கள், 13 அக்டோபர், 2014

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அரங்கில் இன்று 13.10.2014 நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பண்ருட்டி தி.வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை கு. ராமகிருட்டிணன், தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி உள்ளிட்ட ஏராளமான இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் , தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:

"'கத்தி' படத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தும், மதிக்காமல் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். 'கத்தி' படத்தை பொறுத்தவரை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளார் சங்கம், சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களிடம் பேசி படத்தை வாங்கி வெளியிடாதீர்கள் என்று வலியுறுத்த இருக்கிறோம். ராஜபக்சே ஆதரவாளார்களால் தயாரிக்கப்பட்ட படம் என்ற ஆவணத்தை கொடுத்து தயவு செய்து படத்தை வெளியிடாதீர்கள் என்று கூற இருக்கிறோம். தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் இருக்கிற கட்சிகள் அனைத்துமே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இருப்பவர்கள் அங்கிருக்கும் திரையரங்குகள், விநியோகஸ்தர்களை சந்தித்து திரையிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்க இருக்கிறோம்.

சென்னை திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து பேச இருக்கிறோம்.லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனே எனக்கும் இலங்கை விமானத் துறைக்கு வர்த்தகத் தொடர்பு இருக்கிறது என்று ஒப்புதம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும்? லைக்கா நிறுவனம் வெளியிடாமால், வேறு ஒரு நிறுவனம் 'கத்தி' படத்தை வெளியிட்டால் எங்களது போராட்டம் குறித்து பரிசீலனை பண்ணுவோம். ஜெயா டி.வி தொலைக்காட்சி நிறுவனமும் இப்படத்தை வாங்கவில்லை. டி.வி நிர்வாகத்திடம் பேசியதற்கு தேவையில்லாமல் எங்களது பெயரை இழுக்கிறார்கள் என்றும், நாங்கள் வாங்கிவிட்டோம் என்பது பொய்யான செய்தி என்று கூறினார்கள். ஜெயா டி.வி வாங்கி விட்டது என்று படக்குழு கூறி வருவது ஒரு ராஜதந்திர நடவடிக்கை.

விஜய் சொந்தமாக வாங்கி வெளியிடட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை. லைக்கா நிறுவனர் எங்களது 2 நாள் வருமானமே 'கத்தி' திரைப்படம் என்று கூறுகிறார் அல்லவா, அப்படியென்றால் வேறு ஏதாவது ஒரு நலிந்த தயாரிப்பாளரிடம் இந்த படத்தைக் கொடுத்து வெளியிடச் சொல்லட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை. மீறி திரைக்கு வந்தால், ஜனநாயக ரீதியில் எங்களது எதிர்ப்பை பதிவு செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது சுய விளம்பரத்திற்காக 'கத்தி' படத்தை நாங்க எதிர்க்கவில்லை" என்று கூறினார்.





Read more...

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் ஜனநாயக முன்னற்ற கழகத்தின் நிர்வாகிகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் முன்னிலையில் ஜனநாயக முன்னற்ற கழகத்தின் மாநில தொழிற்சங்க செயலாளர் சேகர், மாநில இளைஞனர் அணி தலைவர் இளங்கோவன், மாநில செயற் குழு உறுப்பினர் தயாளன், அரக்கோணம் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், அரக்கோணம் நகர தலைவர் முரளிதரன், அரக்கோணம் நகர செயலாளர் முத்து பாபா, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் லாசர், பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் கணேசன், சோளிங்கர் ஒன்றிய துணை செயலாளர் எம்.எம்.நகர் கோபி ஆனந்த், நெமிலி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சென்னை தலைமை அலுவலகத்தில் இணைந்தனர்.


Read more...

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நீதி வழங்கக் கோரி இந்தியா வாழ் ஈழத் தமிழரின் உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்பு

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நீதி வழங்கக் கோரி 04.10.2014  சென்னை கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில் நடைபெற்ற இந்தியா வாழ் ஈழத் தமிழரின் உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.




Read more...

ஈரான் நாட்டின் கடலோர காவல்படையினரால் கைது செய்யபட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் வ.சுரேஷ் கோரிக்கை

புதன், 1 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் வ.சுரேஷ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

குமரி மாவட்ட மீனவர்கள் பலர் கத்தார் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்டம் சின்னத்துறையை சேர்ந்த சசி, ஆன்றனி, பூத்துறையை சேர்ந்த அந்தோனீஸ், மேலமணக்குடியை சேர்ந்த ஆரோக்கியம் ஆகியோர் கடந்த 16ம் தேதி மீன் பிடித்துகொண்டு இருந்த போது ஈரான் நாட்டின் கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்தனர். மீனவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி ஈரான் அரசிடமிருந்து முறையான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அரசு, இந்த 4 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more...

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு கீழ் நீதிமன்றத்தால் ஒரு மாவட்ட நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிக்கை

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து தமிழகத்தின் நல்லாட்சியை தொடருவார்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு என்பது தற்போதைய நிலையில் கீழ் நீதிமன்றத்தால் ஒரு மாவட்ட நீதிபதியால் கொடுக்கப்பட்ட தீர்ப்புதானே தவிர இறுதித் தீர்ப்பு அல்ல.

இந்த தீர்ப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே சட்டத்தையும் நீதித்துறையையும் மதித்து ஏற்றுக் கொண்டும் இருக்கிறார். நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவையும் இருக்கின்றன.

உரிய சட்ட நடைமுறைகள் மூலம் நிச்சயமாக தமக்கான தடைகளை தகர்த்தெறிவார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். பொய்வழக்கு சதிகளைத் தகர்த்து புரட்டல்காரர்களுக்கு தக்கதோர் பாடத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புகட்டுகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை.

தற்போது நீதித்துறை அளித்த தீர்ப்பை ஏற்றுள்ள நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் மக்களுக்கான நல்லாட்சியை தொடர்ந்தும் வழங்கும்.

எப்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சி உலகத் தமிழர்களுக்கான நல்லரசாக முன்னுதாரணமிக்க மக்களுக்கான அரசாக திகழ்ந்ததோ அதுபோலவே அவரது தொடர் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தமிழினத்துக்கான மக்களுக்கான போற்றுதலுக்குறிய நல்லரசாகவே தொடரும்.

தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டிருக்கும் உரிமை மீட்பு பிரச்சனைகள், ஈழத் தமிழர் மற்றும் மீனவர் விவகாரங்களில் தமிழர் நலனுக்கான ஒரே அரசாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசும் தொடர்ந்தும் செயல்பட்டு இன எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாகவே திகழும்.

Read more...

5 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வியாழன், 25 செப்டம்பர், 2014

தலைநகர் சென்னையை உலுக்கியெடுத்த 150க்கும் மேற்பட்ட அரசியல் இயக்கங்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், படைப்பாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என 24.09.2014 அன்று நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பங்கேற்று தமிழர் தம் ஒற்றுமையை வெளிப்படுத்திய அத்தனை தோழமை சக்திகளுக்கும் என் பெரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுப்பெதற்கான பெரும் போராட்டத்தில் இது முதல் தொடக்கமே! தமிழர் வாழ்வுரிமை வென்றிட ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து இதேபோல் ஒன்றிணைவோம்! தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று தமிழின ஒற்றுமையை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்திய அத்தனை இயக்கங்களின் தலைவர்களுக்கும் தோழர்களுக்கும் என் நெஞ்சாந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. நாம் தொடர்ந்து இணைந்து போராடுவோம்! தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!!!


அன்புடன்
 
பண்ருட்டி தி. வேல்முருகன்.
 
தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

































Read more...

ராஜபக்சே கூட்டாளி சுப்பிரமணியசாமியை பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் பேட்டி

சனி, 20 செப்டம்பர், 2014


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்கள் சேலத்தில் இன்று 20.09.2014 செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் பேச அனுமதிக்க கூடாது, ஐ.நா. மனித உரிமை ஆணைய புலனாய்வு விசாரணைக்குகுழுவை இங்குள்ள ஈழத்தமிழர்களிடம் விசாரணை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும், இலங்கை மீதான பொருளாதார தடை விதிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி சென்னையில் வருகிற 24–ந் தேதி பேரணி நடக்கிறது.

ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தொடங்கி தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் பேரணி முடிவடைகிறது. இதில் 150–க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர், தமிழ் ஆதரவாளர்கள், மனித நேய பண்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச சட்டப்படி கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நெய்வேலி என்.எல்.சியில் பணியாற்றும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும். 3 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழர் உரிமைகள் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. கத்தி படத்தை திரையிட கூடாது என்று போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்து உள்ளோம்.

மேலும் தமிழக மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் ராஜபக்சேவுடன் கைகுலுக்கி நட்பு பாராட்டும் சுப்பிரமணியசாமி தமிழ்நாட்டிற்குள் நுழைய விடமாட்டோம். தமிழக மீனவர்களுக்கு எதிராக அத்தனை முயற்சிகளும் மேற்கொள்ளும் சுப்பிரமணிய சாமியை பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் வை.காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர் கனல் உ.கண்ணன், ஜெயமோகன், சத்தியமூர்த்தி, தாரை செந்தில்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் கராத்தே வெங்கடேஷ்ட, சரவணமூர்த்தி, தவமணி, விஜயகுமார், இளைஞர் அணி சபரீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more...

லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு எதிரான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் போராட்டம் - ஆயிரக்கணக்கனோர் கைது

வியாழன், 18 செப்டம்பர், 2014

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கூட்டாளியான லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு எதிரான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் 18.09.2014 போராட்டம் நடைபெற்றது.












Read more...

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP