Blogger இயக்குவது.

கீரப்பாளையம் ஒன்றியத்தில் 20 கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா

வியாழன், 22 மார்ச், 2012

சேத்தியாத்தோப்பு :

     கீரப்பாளையம் ஒன்றியத்தில் 20 கிராமங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
 
       கீரப்பாளையம் ஒன்றியத்தில் அள்ளூர், பரிபூரணநத்தம், வடபாக்கம் வெய்யலூர், ஒடாக்கநல்லூர், தென்பாதி, பரதூர்சாவடி, ஆயிப்பேட்டை, சாக்காங்குடி, கீரப்பாளையம் உள்ளிட்ட 20 கிராமங்களில் நடந்த கொடியேற்று விழாவிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் ஆண்டவர் செல்வம், விஜயகுமார், பரசுராமன் முன்னிலை வகித்தனர் மாவட்ட அமைப்பாளர் வீரசோழன் வரவேற்றார். 20 கிராமங்களிலும் த.வா.க., மாநிலத் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  பேராசிரியர் தீரன் கொடியேற்றினார்.
 
      நிகழ்ச்சிகளில் சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கண்ணன், சேரலாதன், கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், குணசேகரன், அருள், தில்லை கோவிந்தன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP