Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கடலூரில் 24.08.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் த.ஆனந்த் வரவேற்றார், மாநில பொதுச்செயலாளர் காவேரி, மாநில தொழிற்சங்கத் தலைவர் சைதை சிவராமன், தொழிற்சங்க செயலாளர் ஜம்புலிங்கம், மாநில துணைப் பொதுச்செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன், மாநில மாணவரணிச் செயலாளர் அருள்பாபு, மாநில மகளிரணிச் செயலாளர் அமராவதி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1. முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த போராடி வெற்றி கண்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

2. தமிழக மீனவர்களின் வலைகளை அறுப்பதும், பறிமுதல் செய்வதும் போன்ற அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இலங்கை ராணுவத்தை கண்டிக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிப்பது,

3. கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காத சர்க்கரை ஆலை நிர்வாதத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் தலைமையில் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP