Blogger இயக்குவது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்உள்ள எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கில் சிங்கள தொழில்முனைவோர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம்

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

குமாரபாளையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் சிங்கள தொழில்முனைவோர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரியில் இன்றும் நாளையும் (22.08.2014 & 23.08.2014) பன்னாட்டு மகளிர் தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இதில் இலங்கையிலிருந்து ஏழு சிங்களப் பெண் தொழில்னைவோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு இலங்கையில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவிப்பர். இது இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக சட்டசபை தீர்மானத்துக்கு எதிரானது தமிழ் அமைப்புகளின் கருத்து.

இதனால் சிங்கள தொழில்முனைவோரை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று குமாரபாளையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுச்செயலாளர் வை.காவேரி தலைமையில் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரை கைதுசெய்தனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP