Blogger இயக்குவது.

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறியை அடுத்த கைகாட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதன், 29 அக்டோபர், 2014

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொது செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் (மேற்கு) கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். புற நகர் மாவட்ட செயலாளர் (வடக்கு) ராஜா, மாநில செயலாளர் கனக மணி, மாவட்ட இளை ரணி செயலாளர் சுரேஷ் ராஜா, மாவட்ட தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்திய மத்திய அரசைக் கண்டிப்பது, கடந்த ஒருவருடமாக முதியோர் உதவித் தொகை, திருமண உதவித்தொகை வழங்காமல் அலைக்கழித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது, திருச்சி -நாமக்கல் தார்சாலை ஏவூரிலிருந்து மேய்க்கல்நாயக்கன்பட்டி வரை மிகவும் மோசமாக உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.பொது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வேண்டும். முசிறி தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP