Blogger இயக்குவது.

விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழுக் கூட்டம்

செவ்வாய், 17 மார்ச், 2015

விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் முத்துராமன் வரவேற்றார். ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னதுரை சிறப்புரையாற்றினார். விருத்தாசலம் மேற்கு ஒன்றியச் செயலர் வெங்கிடாசலம், நகர இளைரஞரணி தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் நீலகண்டன், நிர்வாகிகள் அதிரதன், ஜெய்சங்கர், ஞானவேல், பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில், 

கானாதுகண்டான் கிராமத்தில் இயங்கி வரும் எரிசாராய ஆலையால், அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP