Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

புதன், 31 ஜூலை, 2013

புவனகிரி:

புவனகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/07/2013 அன்று நடந்தது.

ஒன்றிய செயலாளர் கரிகாலன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா வரவேற்றார். மாவட்ட நிர்வாகக் குழு காசிநாதன், ஒன்றியத் தலைவர் செந்தில்குமார், நகர பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழு தலைவர் தி. திருமால்வளவன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன் பங்கேற்று பேசினர். மாநில நிர்வாகக் குழு ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ஆளவந்தார், உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

2. வெள்ளாற்றின் வழியே கடல்நீர் உட்புகுவதை தடுக்கவும், மழை காலங்களில் வெள்ளாற்றில் மழை நீர் கடலில் கலக்காமல் சேமிக்கும் பொருட்டு சமநீர் அணை உரிய இடத்தில் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP