Blogger இயக்குவது.

முசிறி ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடியேற்று விழா மற்றும் மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா

புதன், 2 ஜனவரி, 2013

தா.பேட்டை:

       முசிறி ஒன்றியத்தில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி கொடியேற்று விழா மற்றும் மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

      திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் முத்து, மாநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகரத்தினம் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி பாசறை செயலாளர் சரோஜா வரவேற்றார். கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காமராசு, மாநில துணை அமைப்பு செயலாளர் ரவி ஆகியோர், முசிறி, அய்யம்பாளையம், ஏவூர், பெரமூர், சித்தாம்பூர், மணப்பாளையம் உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கினர். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் முசிறி ராஜா, தொட்டியம் சுப்ரமணியன், கிளை தலைவர்கள் ஏவூர் கதிர்வேல், பெரமூர் விஜயகுமார், முசிறி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.

1 கருத்துகள்:

mohan 4 ஜனவரி, 2013 அன்று AM 4:28  

https://www.facebook.com/Tamizhaga.Vazhvurimai.Katchi

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP