Blogger இயக்குவது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பக்கோரியும், புதுச்சேரி மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தாக்கபடுவதைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் புதுவையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். புதுவை மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி ராஜா திரை அரங்கம் சிக்னல் அருகில் சனிக்கிழமை (03/08/2013) அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அமைப்பாளர் திலீபன் முன்னிலை வகித்தார். துணை அமைப்பாளர் பாபு கண்டன உரை ஆற்றினார். கட்சி நிர்வாகி பிரகதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP