Blogger இயக்குவது.

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகக்குழுக் கூட்டம்

புதன், 3 ஏப்ரல், 2013

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி  நிர்வாகக்குழுக் கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில்தெரு தில்லை கோவிந்தராஜா மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கோவி.தில்லைநாயகம் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி.தமிழ், கஜேந்திரன் (குமராட்சி), என்.எஸ்.டி.தில்லை கரிகாலன் (புவனகிரி), ச.கோபு, வாசு.சரவணன் (பரங்கிப்பேட்டை), ஆண்டவர் செல்வம், பரசுராமன் (கீரப்பாளையம்), சங்கர் (காட்டுமன்னார்கோயில்), முருகன் (திருமுட்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ச.க.ராஜேந்திரன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் சு.சேரலாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இளம்புயல் பாசறை ஆர்.கே.குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட் தீர்மானங்கள்:

1. குமராட்சி ஒன்றிய பகுதியில் தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சுவர் விளம்பரத்தை அழித்து கலவரத்தை தூண்டும் சமூக விரோத கும்பல் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

2. புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யாத காவல்துறையை கண்டித்து சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது,

3. பாமகவினர் கொடுக்கும் பொய் புகார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, தமிழக வாழ்வுரிமைக்  கட்சியினர் கொடுக்கும் புகார் மீது மெத்தனமாக நடந்து கொள்ளவதை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP