Blogger இயக்குவது.

தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதியில் இருபுறமும் குவிந்துள்ள சாலையோர மணலை அப்புறப்படுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

க.பரமத்தி:

தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதியில் இருபுறமும் குவிந்துள்ள சாலையோர மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

தமிழக வாழ்வுரிமைக்  கட்சி சார்பில் கரூர் மாவட்டம் க.பரமத்தியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். க.பரமத்தி ஒன்றிய செயலாளர் இளமாறன் வரவேற்றார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமதுஅலி, மாவட்ட மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

முன்னதாக மாவட்ட மாவட்ட சிறுபான்மை பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்து பல்வேறு இடங்களில் மாநில பொதுசெயலாளர் காவேரி, மாநில அமைப்பு செயலாளர் காமராசு, மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினர்.

கூட்டத்தில் க.பரமத்தி கடைவீதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலையோர மணல் பரப்பை அப் புற படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விழாவில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மூர்த்தி, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, தலைவர் மகேஸ்வரி, துணை தலைவர் சிவாத்தாள், நிர்வாகிகள் சரவணன், முருகேஷ், பழனிவேல் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP