Blogger இயக்குவது.

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளம்புயல் எழுச்சி பாசறை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

சனி, 13 ஏப்ரல், 2013





கோடைக்காலத்தை முன்னிட்டு விவசாயிகளின் குறுவை சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்கு குறைந்த பட்சம் 12 மணி நேரம் தொடர் மும்முனை மின்சாரமாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளம்புயல் எழுச்சி பாசறை மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில் தெரு தில்லைகோவிந்தராஜா மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். பாசறை மாவட்டச் செயலாளர் ஆர்.கே.குமரன் வரவேற்றார். நிர்வாகிகள் சிவபுரி ஆ.சிவா, ப.சுரேஷ், ந.சிவபாலன், பந்தல் வெங்கடேசன், ரா.தீபக்ராஜ், பி.சுதாகர், ஆர்.தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புக்குழுத் தலைவர் தி.திருமாமால்வ
ன் சிறப்புரையாற்றினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் உ.கண்ணன், மாநில மதியுரைக் குழு மு.பாலகுருசாமி, மாநில நிர்வாகக்குழு ச.க.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் மு.ஆளவந்தார், ஒன்றியச் செயலாளர்கள் கே.ஆர்.ஜி.தமிழ். ச.கோபு, ஆண்டவர் செல்வம், ம.கஜேந்திரன், வாசு.சரவணன். பரசுராமன், ஏ.கரிகாலன், கோ.முருகன், என்.எஸ்.டி தில்லை, கு.ப.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகரச் செயலாளர் கோவி.தில்லைநாயகம் நன்றி கூறினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  

 1. ஸ்ரீமுஷ்ணம் பகுதியை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, 

2.கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதி அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி வறட்சி நிவாரணம் வழங்கக் கோருவது, 

3. குறுவை சாகுபடிக்கு விதைநெல் மற்றும் வேளாண் இடுபொருள்கள் முன்கூட்டியே தங்கு தடையின்றி வழங்க வேளாண்துறையை கோருவது, 

4.மே.18 சீர்காழியில் நடைபெறும் இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் உயிர்நீத்த தியாகிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்பது, 

5.கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்தும், சுவர் விளம்பரத்தை அழிக்கும் சமூக விரோத கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோருவது 


உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP