Blogger இயக்குவது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இலங்கை அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம்

புதன், 10 ஏப்ரல், 2013





நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் இலங்கை அரசைக் கண்டித்து 10/04/2013 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 54 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை ராணுவத்தை கண்டிப்பது, தனி ஈழம் அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜபக்சவை கடுமையாக கண்டிப்பது, தமிழ் இனத்தின் தொப்புல் கொடி உறவுகள் அழிவதை கண்டுகொள்ளாத இந்திய அரசைக் கண்டிப்பது, கட்சத் தீவை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரங்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்ட இந்திய மத்திய அரசு 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்காததற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்ச உருவ பொம்மையை எரித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 100 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போராட்டத்தால் சென்னை நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP