Blogger இயக்குவது.

பா.ம.க. தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய உள்ளார்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

       விரைவில் பா.ம.க. தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைய உள்ளார்.

       பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.

சென்னையில் பேசிய
பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சைதை கோ.வி.சிவா

       "நான் பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த 33 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளேன். பல லட்ச ரூபாய் செலவு செய்தும், பலமுறை கட்சிக்காக சிறைக்கும் சென்று வந்துள்ளேன். மூன்றுமுறை மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். அதன் பின்பு நடைபெற்றத் தேர்தல்களில் மற்றொருவரை சைதை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி டாக்டர் ராமதாஸ் என்னைப் புறக்கணித்தார். இதுபோல் வெளியில் சொல்ல முடியாத பல காரணங்களால் பாதிக்கப்பட்ட நான் இப்போது பாமகவில் வகித்து வந்த மாநிலத் தொழிற்சங்கச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். அக்கட்சியிலிருந்தும் விலகியுள்ளேன். விரைவில் பாமக அதிருப்தியாளர்களுடன் சேர்ந்து தமிழக வாழ்வுரிமை
க் கட்சியில் இணைய உள்ளோம்' என்றார்.

      இந்நிகழ்ச்சியில் முன்னாள் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வேணுகோபால், முன்னாள் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஏழுமலை மற்றும் வட்ட, மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP