Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திங்கள், 27 பிப்ரவரி, 2012

சேலம்: 

       தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் சக்திவேலன், ஜெயமோகன், சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 

        கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் வரும் மார்ச் 4ம் தேதி நடக்கிறது. இக்கூட்டத்தை பிரமாண்ட முறையில் நடத்த வேண்டும். மாவட்ட, மண்டல, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

    பொதுக்கூட்டத்திற்கு வரும் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், தலைவர் பேராசிரியர் தீரன் மற்றும் பொதுச்செயலாளர் காவேரி, இணைப்பொதுச் செயலாளர் சண்முகம், அமைப்புச் செயலாளர் காமராஜ் ஆகியோரை வரவேற்று மாவட்டம் முழுவதும் கொடி, தோரணம், அலங்கார வளைவுகள் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
 
         மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் சந்திரன், பாலு, அஸ்தம்பட்டி பகுதி அமைப்பாளர் வெங்கடேஷ், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அழகேசன், பொதுக் குழு உறுப்பினர் ஆறுமுகம், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP