Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கொடி கம்பங்கள் பா.ம.க.வினரால் சாய்ப்பு: கடலூரில் பதட்டம்

சனி, 18 பிப்ரவரி, 2012


வன்மையாக கண்டிக்கிறோம்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ebf4af73-3c13-40e3-957e-47f7da30beea_S_secvpf.gif
கடலூர், பிப்.18-

      பண்ருட்டி தி. வேல்முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். 
         இதையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள்  பல இடங்களில் கொடிக்கம்பம் அமைத்து கட்சி கொடி ஏற்றி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடலுர் புதுப்பாளையம், வண்ணாரப்பாளையம், மஞ்சக்குப்பம் பிள்ளையார்கோவில் அருகே ஜட்ஜ் பங்களா சாலை மற்றும் பாரதிசாலையில் அமைக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி கொடி கம்பங்களை  வெட்டி சாய்த்து விட்டு கட்சி கொடிகளை எடுத்து சென்று விட்டனர். மேலும் ஜட்ஜ் பங்களா சாலையில் இருந்து கொடிக்கம்பத்தை அடியோடு பிடுங்கி எடுத்து சென்று விட்டனர்.   இன்று காலை இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆங்காங்கே கூடிநின்று கொடி கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது இதனால் கடலூரில்  பதட்டமும்- பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP