Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை சார்பில் உண்ணாவிரதம்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கடலூர்:

     புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை 28/02/2012 அன்று உண்ணாவிரதம்  நடந்தது. 

         புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகள் இக்கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தலைவர், தி.வேல்முருகன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பேராசிரியர் தீரன், மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி, மாணவரணிச் செயலாளர் அருள்பாபு, இளைஞரணிச் செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP