Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

திங்கள், 17 செப்டம்பர், 2012

சேத்தியாத்தோப்பு:

     தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் சேத்தியாத்தோப்பு பயணியர் விடுதியில் நடந்தது. மாட்ட செயலர் முடிவண்ணன் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் வீரசோழன், ஒன்றிய செயலர்கள் ஆண்டவர் செல்வம், தில்லை பரசுராமன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். நகர அமைப்பாளர் அருள் வரவேற்றார். தலைமை மதியுரை குழு உறுப்பினர் பாலகுருசாமி, மாநிலதுணை பொதுச்செயலர் கண்ணன், ராஜேந்திரன், ரவிபிரசாத், ராமமூர்த்தி, ஆளவந்தார் உள்ளிட்டோர் பேசினர்.  நகர செயலர் குணசேகரன் நன்றிகூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  

  1.சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் கட்சியின் லோக்சபா தொகுதி அலுவகம் அமைப்பது.

2.தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிற்கு நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவது.

3. இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை கண்டித்து செப்டம்பர்  20 ம் தேதி சிதம்பரத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் 2,000 பேர்  பங்கேற்பது

என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP