Blogger இயக்குவது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (16.02.2015) நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் ஹசிப்கான், மாவட்ட பொருளாளர் வசந்தம்சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் உதயகுமார், கரூர் நகரச் செயலாளர் வில்லியம்ஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் தங்கவேல், கரூர் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, தொண்டர் அணி அமைப்பாளர் கண்ணையன், பரமத்தி ஒன்றிய மகளிரணி தலைவர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஊழியர்களின் கவனக்குறைவால் ஏற்படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் தொடர் மரணத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிப்பது.

2. கரூர் மாவட்ட ஆறுகளில் அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதும், பாதுகாப்பற்ற முறையில் வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதையும் கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.

3. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் மாவட்டம் முழுதும் அனைத்து பகுதிகளிலும் கொடிகள் ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP