Blogger இயக்குவது.

பரங்கிப்பேட்டை ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

வியாழன், 19 பிப்ரவரி, 2015

பரங்கிப்பேட்டை ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பு.முட்லூரில் நடந்தது.

ஒன்றிய செயலாளர் கோபு தலைமை தாங்கினார். தலைவர் செல்வகணபதி, தலைமைக் கழக பேச்சாளர் தனபால் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணை பொதுச்செயலர் கனல் உ.கண்ணன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கவுன்சிலர் ரமேஷ் பேசினர். நிர்வாகிகள் வீர பாண்டியன், தாமரைச் செல்வன், ரத்தினவேல், குழந்தைவேல், சுதாகர், கோபிநாதன், காமராஜ், செந்தில்குமார், நாகலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். உமா மகேஸ்வரன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. கரிக்குப்பத்தில் உள்ள தனியார் அனல்மின் நிலையத்தில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி வரும் 24ம் தேதி கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் நடக்கும் முற்றுகைப் போராட்டத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் இருந்த 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது.

2. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில்புதிய உறுப்பினர் சேர்ப்பது.

3. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் கட்சிக் கொடி ஏற்றுவது

உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நிறுவனர் பங்கேற்ற தொலைக்காட்சி காணொளிகள்










பதிவுகள்

"இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வளர்சிக்காக மட்டுமே"

  © Blogger template Noblarum by Ourblogtemplates.com 2009

Back to TOP